Sunday, March 19, 2017

avargal unmaigal
இளையராஜா அளவிற்கு சிறுபுள்ளைத்தனம் வடிவேலுவிடம் இல்லைதானே?

இளைய ராஜா மாதிரி வடிவேலும் அவர் புகைப்படத்திற்கும் நகைச்சுவை காட்சிகளுக்கு ராயல்டி கேட்க ஆரம்பித்தால் தமிழர்கள் யாரும் சிரிக்க முடியாமல் போய்விடுவார்கள் ஆனால் இளையராஜா அளவிற்கு சிறுபுள்ளைத்தனம் வடிவேலுவிடம் இல்லை

இளையராஜா ராயல்டி கேட்பதில் தப்பே இல்லை ஆனால் ஒரு பாடலுக்கு இசை மட்டும் அமைத்தால் அந்த முழு பாட்டிற்கும் அவரே சொந்தகாரர் என்று எந்த சட்டத்திலாவது சொல்லப்பட்டு இருக்கிறதா என்று நிறுபித்துவிட்டு அதன் பின் ராயல்டி கேட்பதுதானே நியாயம்

இளைய ராஜா பணம் வாங்கி கொண்டுதானே திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இசை அமைத்து கொடுத்தார் அது போலத்தானே பாடல் ஆசிரியரும் பாடலை பாடியவரும் பணம் வாங்கி கொண்டுதானே பாடல் எழுதினார்கள் பாடினார்கள்

சரி இசைக்கு சொந்த இளையராஜா என்றால் அந்த பாடல் வரிகளுக்கு சொந்தம் அந்த பாடல் ஆசிரியர் அதனால் அந்த பாடல் வரிகளை இளையராஜா பயன்படுத்தினால் அதற்கு அவர் ராயல்டி கொடுக்க வேண்டும் அதுமாதிரி அந்த பாடலை பாடியவர் மாதிரி வேறு யாராவது பாடினால் சிங்கருக்கும் ராயல்டி கொடுக்கதானே வேண்டும்.


இனிமே விஜய டிவி சூப்ப்ர் சிங்கரில் இளையராஜா பாடல்களை யாரும் பாட மாட்டார்கள் என நினைக்கிறேன். அப்படி பாடினால் விஜய் டிவியும் ராயல்டி மிக அதிகமாக கட்ட வேண்டி இருக்குமே

இளையராஜா தன் இசையை பணம் வாங்கி விற்றறோ அப்போதே அதன் உரிமை அவருக்கு இல்லை அதை வாங்கியவருக்குதான் உரிமை நல்லா யோசிங்க

இளையராஜா கேட்பது நியாயம் என்றால் உங்கள் வீட்டை கட்டி தந்த கொத்தனாருக்கும் நாம் அந்த வீட்டில் வசிக்கும் வரை ராயல்டி கொடுத்துதான் ஆகவேண்டும்
சரி சரி இளையாராஜா ஆரம்பித்து வைத்த கலகம் எப்படி முடியப் போவது என்று நாம் பொறுத்து இருந்து பார்ப்போம்




அன்புடன்
மதுரைதமிழன்
 #ilayaraja  #spb #vadivelu

29 comments:

  1. என்னா இது புது நியூஸா இருக்கே... இளையராஜா மிக மிக தங்கமானவர் எனத்தானே கேள்விப்பட்டிருக்கிறேன்...

    ஊசிக்குறிப்பு:).. இங்கின நான் மட்டுமேதான் ரொம்ப நல்ல பொண்ணு.. ஏனெனில் என் கையில் மட்டும்தான் “மை” இருக்குது:).

    ReplyDelete
    Replies

    1. இங்கே வருபவர்கள் கையில் மை வைக்க வேண்டியது இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா என்ன?

      Delete
    2. இல்லயே எனக்கு தெரியாதே... ஆனா நான் மை வைக்கவில்லை என நீங்களும் என் பக்கம் வைக்காமல் விட்டிடக்கூடாது சொல்லிட்டேன்:)

      Delete
    3. ஐய் ஐய்யயயய நான் மை வைச்சு என் கையை கறைபடிய வைப்பதில்லை என்பதையும் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்... ஆனால் கருத்துக்மட்டும் கண்டிப்பாக போடுவேன்

      Delete
  2. வடிவேலுவின் அவ்வ்வ்வ்// அப்புறம் பல காமெடி வசனங்களை நாமெல்லோரும் பயன்படுத்தறோமே ..அவர் ராயல்டி கேட்டா என்னாறது ..
    இசை என்பது சமுத்திரம் போன்றது ஒரே மியூசிக் நோட்ஸ் ஆங்கில பாடல்களில் இருப்பது போன்ற இசை தமிழில் வந்திருக்கும் .

    போனி எம் பாட்டு சன்னி /ப்ரியாவில் .கிறிஸ்தவ கீர்த்தனை தேவனே நான் உமதண்டையில் ..ரஜினி படத்தில் தாயும்நானே தங்க இளமானேன்னு வந்திருக்கும் .இப்படி எத்தனையோ சொல்லலாம் ..

    ReplyDelete
    Replies
    1. அவர் தனியாக ஆல்பம் போட்டி இருந்தால் ராயல்டி கேட்பது சரி, இப்ப SPBயிடம் மட்டும் இவர் கேட்பது சரிதானா? இதற்கு முன்பு இவர் இசையை திருடி ஹிந்தி சினிமாவில் காப்பி அடித்த விஷயத்தில் அவரிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் இந்தியாவில் இசை விஷயத்தில் காப்பி ரைட் சட்டம் ஒழுங்காக வரையப்படவில்லை என்று சொன்னவர்தான் இளையராஜா இப்ப மட்டும் அந்த சட்டம் மாறிவிட்டதா என்ன?

      Delete
    2. dont know what exactly had happened between them :( இவர் எல்லார்கிட்டையும் கேட்கிறார்னு நினைத்தேன் .ரெண்டுபேரும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸாச்சே .
      இப்போ என்னதிடீர்னு .

      Delete
    3. Mani Maran என்பவர் பேஸ்புக்கில் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லி இருப்பதும் சரியாகத்தான் இருக்கிறது


      இளையராஜா- எஸ்.பி.பிக்கு இடையேயான பிரச்சனை அவர்களுக்கிடையேயானது அல்ல.. அவர்களின் வாரிசுகளுக்கிடையேயான பிரச்சனை.

      கலைத்துறையில் இசை சாம்ராஜ்யம் நடத்திய இரு மேதைகளும் தற்போது தங்கள் பயணத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கும் காலகட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களின் இசைவாரிசாக வந்தவர்கள் தந்தையைப் போல திறமை வாய்க்காததால் திரைத்துறையில் பெரும் தோல்வியை அடைந்து தற்போது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பணம் ஈட்ட முயன்றதின் விளைவுதான் இதுபோன்ற பிரச்சனைக்கு காரணம்.

      சினிமா வாய்ப்பு அறவே இல்லாமல் வீட்டில் நீண்டகாலமாக ஓய்வில் இருந்த கார்த்திக் ராஜா தனது தந்தையை வைத்து இசைக்கச்சேரி நடத்துவது என முடிவு செய்து சில வருடங்களாக இசைக்குழுவோடு நாடு நாடக சுற்றிவருகிறார். கடந்த வருடம் அமெரிக்காவில் நடத்தி பெரும் தொகையை ஈட்டினார் .

      தற்போது அதே வழியில் இறங்கியிருக்கிறார் எஸ்.பி.பி சரண். ஆரம்பத்தில் இளையராஜா இசைக் கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த எஸ்.பி.பி, சமீப காலங்களில் அதைத் தவிர்த்து வந்திருக்கிறார். காரணம், கார்த்திக் ராஜாவைப் போல தானும் தனது தந்தையை வைத்து நாடு நாடாக சுற்றி பணம் ஈட்டவேண்டும் என எஸ்.பி.பி சரண் ஆசைப்பட்டதால்.

      இந்த இரண்டு வாரிசுகளுக்கிடையான போட்டிதான் இரண்டு மேதைகளை மோதிக்கொள்ளும் அளவுக்கு தற்போது கொண்டு சென்றிருக்கிறது. ஒருவரது இசைக்கச்சேரியில் இன்னொருவர் பாடவிரும்பவில்லை. அல்லது மறுக்கிறார். அப்படியெனில் அவர்களது இசைக்கச்சேரியில் இவர் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது. இவ்வளவுதான் பிரச்சனை.

      ஆக இருதரப்புக்கு இடையேயான இந்த பிரச்சனை இசை சம்மந்தப்பட்டது அல்ல. வியாபாரம் சம்மந்தப்பட்டது. இரண்டு இசை வியாபாரிகள் மோதிக்கொள்கிறார்கள்.

      இசை உலகத்தில் இது முதல்தடவை அல்ல. ரசிகர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு பெரியவிஷயமும் அல்ல. முன்பு, கே.ஜே.யேசுதாஸ் குரலை ஓரளவு ஒத்திருக்கிற பின்னணிப் பாடகர் உன்னிமேனன், சினிமாவில் வாய்ப்பு குறைத்த காலகட்டத்தில் இசைக்கச்சேரிகளில் யேசுதாஸ் பாடல்களைப் பாடி பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தார்.

      உடனே கே.ஜே.யேசுதாஸின் மகன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இனிமேல் தனது தந்தை பாடிய பாடல்களை உன்னிமேனன் மேடைகளில் பாடக்கூடாது என தடை வாங்கினார். ஒரு பாடகர் பாடிய பாடலை இன்னொரு பாடகர் பாடக்கூடாது என தடைவாங்கும்போது, அந்தப் பாடலை உருவாக்கியவர் என்கிற முறையில் வியாபார ரீதியாக அவரது பாடல்களை பயன்படுத்தக்கூடாது என தடை வாங்குவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. கண்டிக்கக்கூடிய விஷயமும் அல்ல.

      சரி, பேஸ்புக்கில் இவ்வளவு பொங்கிய எஸ்.பி.பி, அந்த இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை நாட்டுக்காகவா அர்ப்பணிக்கப் போகிறார்..? அல்லது அனாதை ஆசிரமங்களுக்கு தானமாக வழங்கப்போகிறாரா..?

      அவர், அவர் பாக்கெட்டை நிரப்ப இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அதனால் என் பாக்கெட்டுக்கு வரும் வருமானம் குறைகிறது என இன்னொருவர் வக்கீல் நோட்டிஸ் அனுப்புகிறார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு தீர்க்கவேண்டிய விஷயம் இது. இதில் நாம் ஏன் மோதிக்கொள்ளவேண்டும்..?

      Delete
    4. அடடா இத்தனை விஷயமாயிருக்கா !! ஆனா ஒண்ணு ரெண்டு தகப்பன்களும் போல அவங்க வாரிசுங்க இல்லை ..இவர்கள் மோதலில் திண்டாடுவது நட்பு ..பேராசை நட்புக்கு நஷ்டம் ..

      Delete
  3. மதுர மாப்பு., வச்சி கிட்ட்டாரே யாப்பு. ஆமா.? Nothing but wind அப்டீன்னு கு டு த் தா ரே ஒரு கோப்பு (audio) வேற குடுத்து இருக்கார். அப்போ இனி தமிழ் நாட்டில் எவனும் வாயைத் திறந்து கொட்டாவி கூட விடக் கூடாதுன்னு சொல்லுவாரோ...!!!???

    ReplyDelete
    Replies
    1. யோவ் உன்னையாருய்யா இன்னும் தமிழ்நாட்டுல விட்டு வைச்சிருக்காங்க.....நல்லாவே நக்கல் பண்ணுகிறீர்

      Delete
  4. வடிவேலுவின் நகைச்சுவை நடிப்புப்பாணியை பின்பற்றி அவரைப்போன்ற குரலிலே திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடிப்பவர்கள் பலர். அவரின் படத்தை உபயோகித்து சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாக கருத்து சொல்பவர்கள் ஏராளம். வடிவேலுவின் நகைச்சுவையில் உபயோகிக்கப்பட்ட சொற்றொடர் தான் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", பின்னர் இதுவே ஒரு திரைப்படத்தின் பெயராகவும் வந்தது.

    ReplyDelete
    Replies

    1. இசைக்கு இளையராஜா என்று ஒரு காலத்தில் சொன்னது போல நகைச்சுவைக்கு வடிவேலு என்று சொல்ல முடியும்.

      Delete
  5. நல்ல வேளை - அப்படி வடிவேல் சொல்லிவிட்டால் பல மீம்ஸ் வரவே வாய்ப்பில்லையே.

    மகன்களுக்குள் நடக்கும் தகறாறு இப்போது வீதி வரை வந்துவிட்டது.... அவரும் இனிமேல் பாட மாட்டேன் என்று சொல்லி விட்டார் போலும்....

    ReplyDelete
    Replies
    1. வடிவேல் இல்லை என்றால் இப்போது வரும் மீம்ஸுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்

      Delete
  6. இளையராஜா இவ்வளவு அல்பமாக இருப்பார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எந்த நியாயத்தில் சொந்தம் கொண்டாடுகிறாரோ....

    ReplyDelete
    Replies
    1. அவரிடம் முழு உரிமை இருந்திருந்தால் அவர் பக்கம் நியாயம் இருக்கிறது இப்படி பிரச்சனை பூதகரமாக ஆனா பின் அதை வெளியிடாமல் அமைதியாக இருப்பதுதான் இப்போது பிரச்சனைக்கு காரணம் அப்படி செய்யவில்லை என்றால் இளையராஜவை பலர் விமர்சிப்பதில் இருந்து தப்ப முடியாது

      Delete
  7. இவர் மட்டும் நாட்டுப்புற இசையை காப்பி அடிக்கலையா? அவரோட மச்சானை பாத்தீங்களா பாடலே ஒரு நாட்டுப்புற பாடலின் நகல்தான் என் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படியே போய் கடைசியில் என் பாட்டை யாரும் கேட்கக் கூடாது என சொல்லப்போறார்.

    ReplyDelete
    Replies
    1. நாட்டுப்புற பாடல் மட்டுமா... இன்னும் ஒரு உதாரணம். இளையராஜா நீங்கள் கேட்டவை படத்தில் "இசை"யமைத்திருக்கும் "கனவு காணும் வாழ்க்கை யாவும்" பாடல் ஹிந்தியில் மகேந்திர கபூர் பாடிய (இசை யார் என்று நினைவில் இல்லை) "கஸ்மே வாதே " என்ற பாடலின் காபி.

      Delete
    2. அது புக்கார் என்ற படம் என்று நினைக்கிறேன். அதற்கு இசை கல்யாண்ஜி ஆனந்த் ஜி. இதைக் கேட்டால் இருவரும் தங்களது பாடல்களை மாற்றிக்கொண்டார்கள் என்று ராஜா ரசிகர்கள் விளக்கம் கொடுப்பார்கள்.

      Delete
    3. ஸ்ரீராம் அண்ட் காரிகன்....யெஸ்..அப்படி நிறைய சொல்லலாம்....நிறைய காப்பிகள் இவர் மட்டுமல்ல இசை உலகில் நிறைய நடக்குது....

      கீதா

      Delete
    4. தவறே செய்யாத மனிதர் எவரும் இல்ல அதுக்கு ஞானியும் விலக்கு அல்ல

      Delete
  8. இளையராஜாவுக்கு சடடரீதியான உரிமை உண்டு . திரைப்பட பாடல்கள் விடயத்தில் இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் உரிமை உண்டு என்று இந்திய அளவில் சட் ட ஒழுங்கை ஏற்கனவே செய்து விட் டார்கள்
    ஆரம்ப காலத்தில் தயாரிப்பாளர்கள் வசம் மட்டுமே இருந்தது. பின் விழித்து கொண்ட ஹிந்தி இசை அமைப்பாளர்கள் இந்த ஒழுங்கை செய்து கொண்டார்கள் .
    படம் இசையமைக்க முன் அக்ரீமண்ட் இல் இரண்டு தரப்பும் ஒத்து கொள்வார்கள்
    உலக ளவில் கூட இதுதான் நடைமுறை என்று நினைக்கின்றேன்
    .
    .
    ஆனால் ராஜா இப்படி நண்பர்கள் விடயத்தில் கூட கறாராக இருப்பது சின்ன பிள்ளைத்தனத்தை விட கேவலமானது

    ReplyDelete
    Replies
    1. உரிமை இளையராஜவிடம் இருந்தால் அதற்கு மறுபேச்சே இல்லை ஆனால் தனக்குமட்டும்தான் உரிமை இருக்கிறது என்பதை அவர் சட்டபூர்வமாக வெளியிட்டு இருந்தால் இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்து இருக்கலாம்

      இளையராஜாவிற்கு தாந்தான் எல்லாம் என்ற ஒரு இறுமாப்பு எப்போதும் உண்டு அதை உலகமே அறியும் அதற்கு நண்பர்கள் விதிவிலக்கு அல்ல

      Delete
  9. Sir ... I do not think SPB has gone there for charity ...He is making money in crores in the form of world tour ... As per the agreement with the producer,Raja sir has the rights to ask royalty.

    ReplyDelete
    Replies
    1. உரிமை இளையராஜவிடம் இருந்தால் அதை மீறுவது தவறுதான் ஆனால் அந்த உரிமையை வெளிப்படையாக அறிவிக்கட்டும் ஆனால் உரிமை விஷயம் க்ளியராக இல்லை என்பது போலத்தான் பொதுமக்களுக்கு தோன்றுகிறது. பாடல் என்று வரும் போது அந்த பாடலை தயாரித்த தயாரிப்பாளாரா,பாடலை எழுதியவரா, பாடியவரா ,இசை அமைத்தவாரா என்று கேள்வி எழுதுகிறது.

      ஒரு வேளை இசை இளையராஜவிற்கு சொந்தம் என்றால் அந்த இசை இல்லாமல் பாட பாலசுப்பிரமணியத்திற்கும் உரிமை உண்டுதானே

      Delete
  10. இதுல சிறுபிள்ளைத்தனம் என்ன இருக்கு? இசையமைப்பாளர்கள் கடைசிக் காலத்தில் வருமானம் இல்லாமல் கஷ்டப் படுகிறார்கள். ராஜா, இதுபோல் ராயல்ட்டி பெற்று நல் வாழ்வு வாழ முயல்கிறார்.

    பணம் சொத்துனு வந்துவிட்டால், அண்ணன், தம்பி, நண்பன் என்றெல்லாம் எதுவும் தெரியாது. ரொம்பப் பெரிய மனுஷனாக நடந்துகொண்டவன் எல்லாம் கடைசிக் காலத்தில் கோயிலில் பிச்சை எடுத்துத்தான் சாகிறான்.

    நீங்க பெரியமனுஷன்னு சொல்லிக்கொண்டு அலைய வேண்டியதுதான். தன் இசையை பயன்படுத்துபவரிடம் ராயல்ட்டி கேட்பதில் சட்டப்படி தவறெதுவும் இல்லை.

    இதில் சிறுபிள்ளைத்தனம் செய்வது நீங்கதான்.

    As far as Ilayaraja is concerned, It is strictly business, nothing personal!

    BTW, you dont let people to copy paste your blog by not letting them do right click. Are you childish too?!!!

    ReplyDelete
    Replies
    1. பாஸ் நான் ஊடகங்கள் மற்றும் சமுக தளங்களில் படிப்பதை கேட்பதைவைத்து எனது பாணியில் எழுதுகிறேன். எதையும் மிக ஆராய்ச்சி செய்வது எழுதவது இல்ல. அப்படி மிக ஆராய்ச்சி செய்து எழுதவது என்பது ஊடகங்களாலே கூட முடியாத நிலையில் என்னால் எப்படி முடியும்...

      ஒரு விஷயம் சொல்லுகிறேன் நடிகை கனகா இறப்பு பற்றி டிவி மற்றும் நாளிதழ்களில் தவறான செய்தி வந்தது அந்தச் செய்திகளை வைத்து நானும் ஒரு பதிவு எழுதிப் பதிவு செய்தேன் ஆனால் அதன் பின் அது தவறு என்று தெரிந்த பின் அதற்கு உடனே தவற்றை உணர்ந்து மன்னிப்பு பகிரங்கமாக கேட்டேன் ஆனால் ஊடகங்களோ நாளிதழ்களோ அதற்குச் சிறிய வருத்தம் கூட தெர்விக்காமல் அடுத்த செய்திகளுக்கு போய்விட்டார்கள்


      அதனால் மீண்டும் உங்களுக்கு மட்டுமல்ல இங்கே படிக்க வருபவர்கள் அனைவருக்கும் சொல்லுகிறேன் நான் எழுதியதில் தவறு இருந்தால் அதைச் சுட்டிக்காட்டினால் அதை திருத்தி கொள்கிறேன் நான் ஒன்றும் அறிவு ஜீவி அல்ல அதனால் தவறுகள் நேருவது இயல்பே..


      நான் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறேன் என்று கேட்டால் ஆமாம் என்றுதான் சொல்லுவேன் காரணம் என் மனதில்படுவதை சிறுபிள்ளைத்தனமாக பட்டென்று சொல்லிவிடுவேன்

      இளையராஜா ராயல்டி கேட்பது தவறு இல்லை . ஆனால் அப்படிக் கேட்பவர் அது போல அவரும் ராயல்டி ஒழுங்காகக் கட்டி இருக்கிறாரா என்ன? இந்திய காப்பிரைட் சட்டத்தின்படி ஒரு பாடலுக்கு அதை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு 50 சதவிகதமும் பால் வரியை உருவாக்கிய பாடல் ஆசிரியருக்கு 25 சதவிகதமும் இசை அமைப்பாளருக்கு 25% உரிமை உண்டு என்று தெளிவாக இருக்கிறது. இப்படி இருக்கும் போது தயாரிப்பாளரிடம் இருந்தும் பாடல் ஆசிரியரிடமும் இருந்து அவர் முழு உரிமையை வாங்கி வைத்து இருக்கிறாரா? மேலும் இவரும் உலகெங்கும் பல கச்சேரிகளை உலகெங்கும் நடத்தி லாபம் பார்த்து இருக்கிறாரே அதில் கிடைத்த பணத்தை அவர் பாடலாசிரியருக்கும் தயாரிப்பாளருக்கும் ராயல்டி கொடுத்திருக்கிறாரா இந்தப் பெரிய மனுஷன்


      இப்போது உள்ள புதிய இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கும் போது அந்தப் பாடலின் முழு உரிமையும் சட்டப்படி வாங்கிக் கொண்டுதான் இசை அமைக்கிறார்கள் அதனால் அவர்களுக்குப் பிரச்சனை இல்லை ...



      அதுமட்டுமல்ல சட்டம் பேசும் இளையராஜா இப்படி கச்சேரி நடத்தும் குழுக்களை கூட்டி IP காப்பிரைட் நிறுவன அரசு வசூலித்த ராயல்டி பணத்தை ஒழுங்காகப் பகிர்ந்து கொடுப்பதில்லை என்றும் அதனால் அதற்கு நீங்கள் கட்டதேவையில்லை என்றும் சொல்லி இருக்கிறார் அப்படியானால் உங்களிடம் நாங்கள் நேரிலே கட்டிவிடுகிறோம் நீங்கள் எவ்வளவு என்று சொன்னால் என்றும் கேட்டு இருக்கிறார்கள் அதற்கு அவர் உங்களிடம் பணம் பெற்றுத்தான் நான் வாழ வேண்டும் என்று அவசியமில்லை என்றும் சொல்லி இருக்கிறார். இப்படி சட்டத்தை மாற்றிய இவர் இப்போது காப்பிரைட் சட்டம் பற்றிப் பேசுவதது ஏன்?



      இவர் தற்போது இசை அமைத்த பாடல்களை தவிர மற்ற பாடல்களுக்கு அவரிடம் முழு உரிமை இல்லை ஆனாலும் அதற்கு தாந்தான் உரிமையாளர் என்று சொல்லுவதால் அவர் இசை அமைத்த பாடல்கள் மட்டும் இப்போது கோர்ட்டில் வழக்காக இருக்கிறது. அவரிடம் முழு உரிமை இருந்திருந்தால் அதை வெளிப்படையாக அறிவிக்கட்டுமே அந்தப் பெரிய மனுஷன்..



      எப்படி சிறுபிள்ளைகள் தங்களுக்குரியதை பாதுகாக்க முயற்சிப்பார்களோ அது போலத்தான் சிறுபுள்ளைதத்தனமாக நான் அதைக் காப்பி பேஸ்ட் பண்ண முடியாமல் வைத்திருக்கிறேன் .நான் எனதுபதிவகளை காப்பிபேஸ்ட் பண்ண முடியாமல் வைத்திருப்பதில் என்ன தப்பு? வு


      புத்தியுள்ளவனுக்கு நான் எழுதும் சிறுபிள்ளைத்தனமான பதிவு தேவையென்றால் அதை எப்படி காப்பிபேஸ்ட் பண்ண முடியும் என்று அவனுக்குத் தெரியுமே அது மிக எளிதுதானே,அதையாவது அவன் செய்யட்டுமே

      Delete
  11. பூனைக்குட்டி எனும் தளத்தில் எழுதும் திருமங்கலம் கிருஷ்ணகுமார் கூட இதைக் குறித்து எழுதியிருக்கிறார். நன்றாக எழுதியிருக்கிறார்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.