Saturday, March 25, 2023

 

@avargal unmaigal

ஜனநாயக இந்தியாவில் மோடிதான் இறுதி பிரதமர் அதன் பின் சர்வாதிகார நாடாகும் இந்தியாவின்  முதல் அதிபரும் மோடிதான்

அடுத்த பிரதமர் மோடிதான் அதில் எந்த மாற்றமும் இல்லை ஏன் தெரியுமா?

அடுத்த பிரதமர் மோடிதான் அதில் எந்த மாற்றமும் இல்லை ஏன் தெரியுமா? ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய வேறு யாரும் பிரதமர் ஆக முடியாது ,ஆனால் அந்த இயக்க தலைவர்களின் எண்ணங்களில் மாற்றுச் சிந்தனைகள் ஏதும் எழுந்துவிடக் கூடாது என்பதற்காக மோடி அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற செயல் வடிவத்தைத் தொடர்ந்து செய்து வருகிறார். அதற்கு அவர் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளவில்லை.

மோடி ருசி கண்ட பூனை அதுவும் இரண்டுதடவை பிரதமர் பதவியை ருசி பார்த்தவர். அதை அவர் விட்டுத் தர மாட்டார்.. அவர் பிரதமர் பதவியில் இல்லையென்றால் அவர்களின் கட்சிக்காரர்களே எந்த அளவிற்கு அவருக்கு  மரியாதை தருவார்கள் என்பதை நன்கு அறிந்தவர் அதுமட்டுமல்ல பிரதமர் என்ற பதவியில் இல்லையென்றால் உலக நாடுகளில் அவருக்கு எந்த விதமான இடம் கொடுக்கப்படும் என்பதை நன்கு அறிந்தவர். அதனால் என்ன விலை கொடுத்து என்ன செய்தும் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வார்,

மற்ற கட்சிகளில் அந்த கட்சித்தலைவர்கள் பதவிகளில் ஆட்சியில்  அமைப்பில் இல்லை என்றாலும் அவர்களுக்கு என்று ஒரு தனி இடத்தை கொடுத்து தொடர்ந்து மரியாதை செய்வார்கள் ஆனால் பாஜக கட்சியிலோ நிலை தலைமாறு அந்த கட்சியில் உள்ள தலைவர்கள் கட்சி பதவிகளிலோ அல்லது ஆட்சி அமைப்பிலோ இல்லாவிட்டால் அவர்களை மலத்தை ஒதுக்குவது போல ஒதுக்கிவிடுவார்கள் இதெல்லாம் அறிந்தவர்தான் மோடி

மற்ற தலைவர்கள் போல அவருக்கு என்று குடும்பமோ மனைவியோ குழந்தைகளோ இல்லை அதனால் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று நிலை இல்லை எல்லாம் தான்தான் தனக்குத்தான் என்று இருப்பவர் . மேலும் அவர் தனது நண்பர்களுக்காகவும் தன் இனமான குஜராத்திகளுக்காகவும் பல யாருமே செய்யாத அளவிற்கு உதவுகிறார் உதவிக் கொண்டு இருக்கிறார் அது அவரின் மிகப் பெரிய பலம்

மேலும் உகல்கிலேயே மிகப் பெரிய நிதி நிலையைப் பெற்ற ஒரு கட்சி என்றால் அது பாஜகதான் அதற்கு வெகு அருகில் கூட உலகில் உள்ள கட்சி கள் ஏதும் நெருங்கிவிட முடியாத செல்வத்தை அந்த கட்சி கொண்டு உள்ளது அதனால் என்ன விலை கொடுத்தும் மோடி தன் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வார் அந்த கட்சி தக்க வைத்துக் கொள்ளும்  அவருக்குத் தென் மாநிலங்களிலிருந்து கிடைக்கும் சீட்டுகளைப் பற்றி கவலை இல்லை அவருக்கு உபி போன்ற  பெரிய வட  மாநிலங்களிருந்து எத்தனை சீட்டுகள் கிடைக்கும் அதற்காக  ஒரு வோட்டுக்கு லட்சங்கள் கொடுத்தும் ஜெயித்துவிடும் வல்லமை அவருக்கு உண்டு கறுப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் தருவேன் என்ற சொன்ன மோடி தன் கணக்கில் உள்ள கணக்கு வழக்கு இல்லாத பணத்திலிருந்து பணத்தை வாரி இறைத்து வெற்றியைத் தக்க வைத்துவிடுவார்

அதுமட்டுமல்ல அரசின் உயர் அமைப்புகளை தன் சொற்படி  கேட்க வைத்து இருப்பதுமட்டுமல்லாமல் அந்த அமைப்பின் தலைவர்கள் தன் சொற்படி கேட்பவர்களாகவே நியமித்து இருக்கிறார். ஒரு வேளை மக்கள் மனதில் அவருக்கு எதிராக மாற்றம் ஏற்பட்டால் இந்த அமைப்புகளின்  உதவியோடு அதையும் அடக்கி மாற்றிவிடுவார்.

அதுமட்டுமல்ல அவருக்கு எதிரான எதிர்க்கட்சிகளில் போதிய ஒற்றுமை இது வரை ஏற்படவில்லை தேர்தலுக்கான தூரமும் அதிகம் இல்லை எதிர கட்சிகள் ஒன்று கூடி உறவு கொண்டு பிள்ளை பெறுவதற்கு முன்பு இவர் பதவியில் அமர்ந்து இருப்பார்



ஜனநாயக இந்தியாவில் மோடிதான் இறுதி பிரதமர் அதன் பின் சர்வாதிகார நாடாகும் இந்தியாவின்  முதல் அதிபரும் மோடிதான் டாட்


ஹிட்லரும் தாடிஜியும் ஒன்றா? 


 

 

 


நேரு மட்டும் இந்துவாக இல்லாமல் இந்துத்துவா வாதியாக இருந்திருந்தால்?


 

 

 

 

 

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.