இது ஒரு நபரை ஒரு எக்ஸ்ட்ரீம் லெவலுக்குக் கொண்டு செல்லச் செய்யலாம் .ஏன் அது சில நேரங்களில் அது உயிருக்கு ஆபத்தானது மற்றும் தற்கொலை செய்து கொள்ளவும் செய்யும்
யாரவது ஒரு நபர் இங்கே உதவி கேட்கும்போது முடிந்தால் அவர்களை அணுகி அவர்களின் வலியைக் குறைக்க உதவுங்கள். அட்லீஸ்ட் நாம் செய்யக்கூடியது காது கொடுத்துக் கேட்பதுதான், உடனே எந்த முடிவிற்கும் வந்து தீர்ப்பளித்து மட்டும் விடாதீர்கள்
தயவுசெய்து, மனச்சோர்வு பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாவிட்டால் அதிலிருந்து விலகி இருங்கள் அதைத் தவிர்த்துவிட்டு தவறான மேற்கோள்களைச் சொல்லி கருத்துகளைப் பகிராதீர்கள் அது அவர்களை மேலும் மனச்சோர்வுடைய செய்துவிடும். அதுமட்டுமல்ல கடவுளிடம் சரணடையுங்கள். ஆன்மிகம் உதவுகிறது என்று மொட்டையாக மேம்போக்காகச் சொல்வதை நிறுத்துங்கள்.மேலும் அதிகம் யோசிக்காதீர்கள், ஒவர் ஆக்ட் பண்ணாதீர்கள் என்று சொல்லுவதையும் நிறுத்துங்கள். அப்படி நீங்கள் சொல்வீர்கள் என்றால் நீங்களும் மனநிலை சிகிச்சை பெற வேண்டியவர்களில் ஒருவரே .