Friday, March 5, 2021

 திமுக தலைவர்களிடம் ஒரு கேள்வி
 

@avargal unmaigal

இங்கே வேட்பாளர் தேர்விற்கு வந்து இருப்பவர்கள் யார்? உங்கள் கட்சியில் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்கள்தானே? அவர்கள் எதற்க்காக வந்து இருக்கிறார்கள். உங்கள் கட்சியோடு சேர்ந்து நாட்டு மக்களுக்கு உழைப்பதற்காகத்தேனே .உங்களிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு நேர்முகத் தேர்விற்கு வந்து இருக்கிறார்கள்...
 


அப்படி வந்து இருக்கும் அனைவருக்கும் உங்களால் சீட்டுக் கொடுக்க முடியுமா என்றால் முடியாதுதானே ...அப்ப என்ன சொல்வீர்கள் வழக்கமாகக் கலைஞர் சொல்வது போல உங்களுக்கு என் இதயத்தில் இடம் தந்து இருக்கிறோம் என்றுதானே சொல்லுவீர்கள். அதில்லாமல் வேறு ஏதாவதா சொல்லுப் போறீங்க


அப்படி எல்லாம் இதயத்தில் இடம் கொடுக்க நினைக்கும் நீங்கள் உங்களுக்காக, உங்கள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு, உங்கள் எதிரில் ஒரு சேர் போட்டு அதில் உட்கார வைத்து இருந்திருந்தால்  நம்மையும் தலைவர் சரி நிகர உட்கார வைத்து மதிக்கிறாரே என்று சந்தோஷம் பட்டு இருப்பார்களே..

சமத்துவம் கற்றுத் தந்த உங்கள் தலைவர்கள் இதை எல்லாம் உங்களுக்கு கற்றுத் தரவில்லையா என்ன?


முடிந்தது முடிந்துவிட்டது இனிமேலாவது இப்படி சின்ன சின்ன செயல்கள் செய்து உங்கள் கட்சிக்காரர்களைச் சந்தோஷப்படுத்தலாமே

@avargal unmaigal




அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. நியாயமான கேள்வி தமிழரே...

    ReplyDelete
  2. திரு தங்கம் தென்னரசுவை உட்காரவைத்துதான் நேர்காணல் நடத்தினார்கள்.  

    ஆனால் இதெல்லாமே தேவி இல்லாத நாடகங்கள் என்று தோன்றும் - அது எந்தக் கட்சியானாலும்!  ஜனநாயகமுறைப்படி செயல்படுகிறார்களாம்!

    ReplyDelete
    Replies
    1. சே...   தேவி இல்லாத இல்லை, "தேவை இல்லாத" என்று படிக்கவும்!

      Delete
  3. ஆம்...தவிர்க்கக் கூடிய தவிர்க்க முடிந்த சிறிய விசயந்தான்.பார்ப்போம்..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.