Sunday, May 25, 2025

 ஏன் அமெரிக்கா வாழ் இந்து கலாச்சார காவலர்கள் அமைதிக் காக்கிறார்கள்?

  



நான் வேற்று மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தமிழகத்திலிருந்து  அமெரிக்காவில் வந்து வாழும் எனக்கு  அமெரிக்காவில்
இருந்து ஒலிபரப்பப்படும்  NPR-ந் ஊடக செய்தியாளர் வெளியிட்ட இந்த செய்தி  என் மனதைப்  புண்படுத்துவதாகக் கருதுகிறேன்

ஒரு செய்தியாளர் ஒரு தகவலைப் பகிரும் போது அதன் பின்புலத்தை அல்லது கலாச்சாரத்தை அறிந்து செய்திகள் வெளியிடுவதுதான் பண்பாகும். அதுவும் வேற்று மதக் கடவுளைப் பற்றி ஒரு செய்திகள் வெளியிடும் போது சிறிதாவது கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.. ஆனால் அதை இந்த ஊடகவியாளர் அறிந்து இருக்கவில்லை என்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இந்துக் கடவுகள் பல அவதாரங்களாகப் பலவிதமாகக் காட்சி அளித்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒர் பெயர் இருக்கிறது அது போலத்தான் ஹனுமான்... அவரை ஹனுமான் என்றுதான் அழைக்க வேண்டுமே தவிர நாம் அறைகுறையாகப்  புரிந்து கொண்டு குரங்கு கடவுள் என்று அதுவும் ஊடகத் துறையில் உள்ளவர்கள் அழைப்பது மிகவும் கண்டிக்க தக்கது.

இனிமேலாவது வருங்காலத்தில் அவர் மட்டுமல்ல மற்ற ஊடகவியலர்கலும் இது போன்ற தவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும் நான் வேண்டு கோள்விடுவிக்கின்றேன்.


ஒரு சிலர் மட்டும் இதை கண்டித்து அவருக்கு கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்... ஆனால் வேறு யாரும் ஏன்  நமது அமெரிக்கா வாழ் இந்து கலாச்சர காவலர்கள் இதற்கு  சிறிதும் இதுவரை எதிர்ப்புக்கள் தெரிவிக்கவில்லை என்பது எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது. வேற்று மதத்தை சார்ந்த எனக்கே இந்த செய்து உறுத்தலாக தோன்றும் போது அவர்களுக்கு இது  தவறாக தோன்றவில்லையா அல்லது அமெரிக்காவில் இருந்து வரும் செய்தி என்பதால் நம்ம ஜீயை போல வாய்யை முடி அமைதி காக்கிறார்களா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

Reporter: @diaa.hadid  Diaa Hadid/NPR
Producer: @kerencarrionphoto  Keren Carrion/NPR

 

 

#RespectAllReligions | #CulturalSensitivity | #MediaResponsibility | #HinduCulture | #HanumanRespect | #MindfulJournalism | #ReligiousRespect |#AvoidStereotypes
#CulturalAwareness | #MediaEthics 
 
#மதங்களைமதிக்கவேண்டும் | #பண்பாட்டு உணர்வு | #ஊடகப் பொறுப்பு
#இந்து பண்பாடு |#ஹனுமான் மரியாதை | #அறிவார்ந்த ஊடகம்
#மத மரியாதை | #புரிதல் தவிர்ப்பு | #பண்பாட்டு விழிப்புணர்வு
#ஊடக நெறிமுறைகள்
 


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.