Saturday, May 17, 2025

 மோடி தீட்டிய மாயா மந்திரம்- மதுரையனந்தா சும்மா யோசிக்கையிலே
   

ஒரு நாள், பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் அமர்ந்து,  தமிழகத்தில் எதிர்வரும் 2026-க்கான தேர்தலுக்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தார்.

திடீரென்று, அவரது அறைக்கு அமித்ஷா  வந்தார்."ஜீ தமிழக மக்கள்  மிகவும் புத்திசாலிகள். சாதாரண வாக்குறுதிகள் போதாது.
ஏதாவது மாயாஜாலம் செய்ய வேண்டும் என்றார்!"
மோடி சிந்தித்தார். "மாயாஜாலம்? அதுவும் அரசியலில்? நல்ல யோசனை!"

அடுத்த நாள், ஒரு பிரம்மாண்ட கூட்டத்தில் மோடி பேசினார்:"

இந்த தேர்தலில், நாங்கள்  ஒரு புதிய திட்டம் கொண்டு வருகிறோம் ,அதற்கு 'மாயா மந்திரம்' என்று பெயர்!"

மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். "மாயா மந்திரம்?""

ஆமாம்! நீங்கள்  எங்களுக்கு வாக்களித்தால் போதும்,

உங்கள் வீட்டில் தானாகவே இலவச Wi-Fi, மின்சாரம், மற்றும் ஒரு புதிய ஸ்மார்ட் போன் தோன்றும்!" நீங்கள் இணைய தளங்களில் பதிவிடும் ரீல்ஸ்களுக்கு  வரும் லைக்ஸ்களுக்கு தகுந்து உங்கள் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் போடும்,,  சிறந்த ரீல்ஸ்களுக்கு மத்திய அரசு விருது தரும்.

மக்கள் உற்சாகமாகக் கைதட்டினார்கள்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மக்களே இது  மோடி மஸ்தான் வேலை. "இது எப்படிச் சாத்தியமாகும் என்றார்?"

மோடி  மக்களைப் பார்த்துப் புன்னகைத்து . "நம்பிக்கை வைத்தால், எல்லாம் சாத்தியமே! என்று அடித்துப் பேசினார்"

மக்களும் எவ்வளவு நாள்தான் திமுக அதிமுகவிற்கு  வாக்களித்தே ஏமாறுவது இந்த தடவை பாஜகவிற்கு வோட்டு போட்டுப் பார்க்கலாம் என்று நினைத்து  மக்கள் பாஜகவிற்கு வாக்களித்தார்கள்.

பாஜகவும் வெற்றி பெற்றது ஆட்சியிலும் அமர்ந்தார்கள்.

ஆனால், வீட்டில் Wi-Fi, மின்சாரம், ஸ்மார்ட் போன் எதுவும் தோன்றவில்லை.

மக்கள் மோடியைச் சந்தித்தார்கள். "சார், எங்கள் மாயா மந்திரம் எங்கே என்றார்கள்?"

மோடி சிரித்தார்.  அட கூமுட்டை மக்களே

நான் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவனைத் திட்டம் அறிவித்து எத்தனை ஆண்டுகள் ஆச்சு

அது கட்டி முடிக்கப்பட்டதா என்ன?  

அதுவே முடிக்கப்படவில்லை என்கிற போது

நீங்களும் மீண்டும் என் பேச்சை நம்பியது என் தப்பா உங்கள் தப்பா?

அது அரசியல் மாயாஜாலம்! நீங்கள் நம்பினீர்கள்,

அதுவே  என் வெற்றி!" உங்கள் தோல்வி.

மக்கள் தலைகுனிந்தார்கள். "அரசியல் என்பது உண்மையில் ஒரு மாயாஜாலமே!"


ஆமாம் மக்களே இப்படித்தான் 2014ல் சொன்னார் இந்தியாவை வல்லரசு நாடாக்குவேன். அமெரிக்க மக்கள் வேலை வாய்ப்பிற்காக இந்தியா வருவதற்கு இந்தியத் தூதரக வாசலில் நிற்பார்கள் என்றெல்லாம் பேசினார் உலக நாடுகளுக்கெல்லாம் சென்று தலைவர்களைச் சந்தித்துவிட்டு எல்லோரும் என் நண்பர்கள் என்றார்... ஆனால் கடந்த வாரத்தில் நடந்த பிரச்சனையில்  உலக நாடுகள் எங்கே நின்றன என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமா என்ன?


அதனால் சொல்லுகின்றேன் வருகிற தேர்தலில் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் நீங்கள் கோமணம் கட்டித்தான் திரிய வேண்டிய நிலை ஏற்படும் எத்ற்குக் முன் ஜாக்கிரதையாக இருங்கள்


Over 11 years, 72 countries, and 129 visits, crores of taxpayers' money have been spent. The net outcome is zero. None of the countries supported



Now Operation Sindoor is also being sold like a product and its advertisements are being given with Modi's photo. I have no words to describe how cheap the BJP party is. See the sample:

  



அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.