Monday, May 11, 2020

விதைத்த விஷ விதைகள் இப்போது துளிர்க்க ஆரம்பித்து இருக்கிறது....அதன் பலன்? The sown poisonous seeds have now begun to sprout .... What is its benefit?

விதைத்த விஷம் இப்போது துளிர்க்க ஆரம்பித்து இருக்கிறது....அதன் பலன்?



"சென்னையில் இஸ்லாமியப் பணியாளர்கள் இல்லை" என்று விளம்பரத்தில் குறிப்பிட்ட ஒரு பேக்கரி உரிமையாளர் கைது செய்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.. அதற்கு அவர் கூறிய காரணம், அவர் இனத்து மக்கள் இஸ்லாமிய ஆட்களால் தயார் செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் பலர் வாங்க வரவில்லை, அதனால்தான் அவர், தான் அப்படி விளம்பரம் செய்தேன் என்று கூறி இருக்கிறார்..

உண்மையில் அவர் என்ன செய்து இருக்க வேண்டும். என் கடையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் 'இந்து ஆட்களால் மட்டும்' தயாரிக்கப்பட்டது என்று மட்டும் விளம்பரம் செய்து இருக்க வேண்டும் அப்படிச் செய்து இருந்தால் யாராலும்  அவரைக் குறை சொல்ல முடியாது... ஆனால் அவர் அப்படிச் சொல்லாமல் மாற்று மதத்தினரை அதுவும் ஒரு குறிப்பிட்ட மதத்தவரைச் சொல்லும் போதுதான் அது தவறாகக் கருதப்படுகிறது.. ஏன் ஜெயின் இன மக்கள் அவர்கள் தயாரித்து விற்கும் பொருட்களில் "ஜெயின் புட்ஸ்" என்று சொல்லி விற்கிறார்கள் அதை யாரும் தப்பு என்று சொல்வதில்லை.. காரணம் அவர்கள் சில பொருட்களை தங்கள் உணவில் சேர்க்கமாட்டார்கள் அதைத் தெரிவிப்பதற்கு ஜெயின்(சமண) புட்ஸ் என்று உறைகளில் ப்ரிண்ட் செய்வார்கள் அது சரிதான் அதில் தப்பேதுமில்லைதான் இது நாள் வரை அதை யாரும் குறை சொன்னது இல்லைதானே
.

இந்த செய்தியை அறிந்த சில அரைவேக்காடுகள் உடனே  ஹலால் என்பதன் குறியீடென்ன? அவர்கள் மட்டும் அப்படிப்  போடலாமா என்று கேள்விகள் எழுப்பி தங்களின் அறிவீனத்தை வெளியே காட்டுகிறார்கள்


இப்போது ஹாலால் உணவு பற்றிப் பார்ப்போம். அது ஒன்றும் இப்போது தோன்றிய பழக்கம் அல்ல இஸ்லாம் மதம் தோன்றிய போது ஏற்படுத்தப்பட்ட ஒரு மதப் பழக்கம். அது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் வாழும் அனைத்து இஸ்லாமியர்கள் அந்த பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர். இப்படிக் கடைப் பிடிக்க வேண்டும் என்று அவர்கள் மத நூலிலும் குறிக்கப்பட்டு இருக்கிறது இதைப் போல யூத இனமக்களும் கோசர் என்ற உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்..

இஸ்லாமியர்கள் ஒரு கடைக்கோ அல்லது உணவகங்களுக்குச் செல்லும் போது அங்கு விற்கும் மாமிசம் ஹாலல் முறையில் வெட்டப்பட்டு செய்யப்பட்டதா என்று பார்க்கிறார்கள் அப்படி இல்லாத சமயத்தில் அந்த உணவைத் தவிர்த்துவிட்டு அந்த உணவகங்களில் இருக்கும் சைவ உணவுகளைச் சாப்பிட்டு விட்டு வெளியே வருகிறார்கள் அதுமட்டுமல்ல  மாற்று மதத்தினர் நடத்து கடைகளில்  ஹாலல் முறையில் வெட்டப்பட்ட மீட் வகைகளை வாங்கி சாப்பிடவும் செய்கிறார்கள் அவர்களை ஒதுக்குவதில்லை அவர்களைப் பொருத்த வரை  அது ஹாலால் முறையில் வெட்டப்படுகிறதா என்பது மட்டும்தான் கேள்வி


இப்போது ஒரு சின்ன கேள்வி. இஸ்லாமிய மற்றும் யூத மதத்தில் இது ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு பழக்கத்தில் இருந்திருக்கிறது.. அது போல இஸ்லாமியர்கள் அல்லாதவர்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளைத்தான் உண்ண வேண்டும் என்று எந்த வேதங்களிலாவது குறிப்பிடப்படு இருக்கிறதா? இல்லை எந்த வேதத்திலாவது 2020  ஜனவரிக்கு அப்புறம் இஸ்லாமியர்கள் அல்லது வேற்று மதத்தினர் கைப்பட்டுத் தயாரிக்கும் உணவுகள் சாப்பிடக் கூடாது என்று சொல்லி இருக்கிறதா என்ன? இதற்கு முன்னால் சாப்பிட்டது எல்லாம் எந்த கணக்கில் வருகிறது என்பதை அறிவு உள்ளவர்கள் கூறமுடியுமா

அல்லது வேதங்களைத் திருத்தி  எழுதும் அதிகாரம் மோடி அரசுக்கும் இந்துத்துவாவிற்கு மட்டும் உள்ளதா என்ன? வேதங்களில் கீழ்சாதி ஆட்கள் தொட்டதை மேல் சாதி ஆட்கள் தொடக் கூடாது  உண்ணக் கூடாது என்று வேண்டுமானால் இருக்கலாம் அதைத்தான் இதுவரை மேல் சாதிக்காரர்கள் கடைப் பிடித்து வருகின்றனர்,

இன்று மூஸ்லீம்கள் , நாளைத் தலித் இனமக்கள் பணிபுரியும் உணவங்கள் வியாபாரத்தலங்களும் ஒதுக்கப்பட வேண்டும் என்று இவர்கள் சொல்ல இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியதில்லை

இதுதான் உண்மை.....

 எப்படி இந்துக்கள்  வேத மந்திரங்களையும், சடங்கு சம்பிரதாயங்களையும் மனுதர்மத்தின் பெயரால் கடைப்பிடித்து வருகிற்களோ.அதேபோல் இஸ்லாமியர்களும்  இறைத்தூதர் முகம்மதுநபி அவர்கள் எதை இஸ்லாம் மார்க்கத்தின் பெயரால் கடைப்பிடிக்கச் சொன்னார்களோ அதையே அவர்கள் பின்பற்றி வருகிறார்கள். இதில் யாருக்கும் எந்த வித கருத்து வேறுபாடுகளும் இருக்காது அல்லவா


விஷயம் இப்படி இருக்க......


முஸ்லீம் வணிகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று இந்துத்துவா வாதிகள் மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.  இதை விதை போட்டு ஆரம்பித்து வைத்தது இந்துத்துவா வாதிகள்தான் அந்த விதைகள்தான் இப்போது இந்த மாதிரி வெறுப்புகளாகத் துளிர்க்க ஆரம்பித்து இருக்கிறது...வளர்வது விஷ செடி இது வளர்ந்த பின் நம் நாட்டில் உள்ள கருவேல மரம் மாதிரிதான். இது இப்படி நம் நிலங்களை பாதித்ததோ அது போலத்தான் இந்த விஷ செடிகளும்  அதற்குச் சாதி மதம் எதையும் பார்க்காது அனைவரையும் அழித்து விடும்


இதுபோல் பிரச்சனைகளுக்கு மூலம் ,சாதியையும் மதத்தையும் மூலதனமாக வைத்துக்கொண்டு சில விசமிகள் தங்கள் சுயநலத்திற்காக. அரசியல் செய்யும் வியாபார வினையே  இது.  அதைப்  புரிந்தது கொள்ள முடியாதவர்களாக நீங்கள் இருந்தால் தாங்களும் கொஞ்சம் கொழு
த்திப் போடுங்கள் நன்றாகப் பற்றி எறியட்டும்.. அதன் பின்

மனித நேயமும். சமத்துவமும்.சகோதரத்துவமும் மட்டுமல்ல  நாடும் உங்கள் வருங்கால சந்ததிகளும் நாசமாகப் போகட்டும்



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : ஒரு இன மக்கள் ஒதுக்கப்படும் போது அவர்கள் வாழ்வு ஆதாரங்கள் பாதிக்கப்படும் அவர்கள் பஜனை பாடிக் கொண்டு இருக்கமாட்டார்கள் அவர்கள் வாழ் வன்முறை கையில் எடுக்கப்படும் புரட்சிகள் எழும் இதனால் அவர்களுக்கு ஒன்று நஷ்டம் இல்லை காரணம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டதால் பலர் மரணத்தைத் தழுவி இருக்கலாம் அதனால் மேலும் மரணத்தைத் தழுவுவதில் அவர்களுக்கு இன்றும் பிரச்சனை இல்லை.. ஆனால் அது புரியாமல் இந்த இந்துத்துவா வாதிகளுக்கு ஆதரவு தெரிக்கும் போது அதனால் பலன் அடையும் இந்துத்துவா வாதிகள் மிகப் பாதுகாப்பாக இருப்பார்கள் ஆனால் மற்ற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடலாம் குடும்பத்தில் உள்ள உறவுகளை இழக்க நேரிடலாம்.. அதனால் நன்றாக யோசியுங்கள்.. ஒரு வேளை நீங்கள் ஒரு இனத்தை ஒழிக்கும் போது உலகமும் உங்களை ஒதுக்கும் அதன் பின் இன்னொரு பாகிஸ்தானாகத்தான் இந்தியாவும் மாறும்

***************************************************************************



***************************************************************************

2 comments:

  1. ஜெயின் புட்ஸ் என்று கூறியிருக்கலாம். அனாவசியமாக சேர்த்துவிட்டு.....

    ReplyDelete
    Replies
    1. அதை செய்து இருந்தால் பிரச்சனை இருக்காது ஆனால் இவர்கள் நோக்கமே மக்கள் மனசில் விஷ விதையை விதைப்பதுதானே

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.