Saturday, May 30, 2020

அமெரிக்காவில் தொடரும்  இனவெறி வெறுப்புக் குற்றங்கள்



அமெரிக்காவில் ‘கோவிட்-19’ பெருந்தொற்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில்,அமெரிக்காவின் மின்ன சொட்டா மாநிலத்தின் மின்னியாபோலிஸ் நகரில், காவலர் ஒருவரால் குரல்வளை நசுக்கப்பட்டு, “ உயிர்விட்ட கறுப்பின மனிதர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம், அமெரிக்காவின் பெரும் நகரங்களில் கலவரங்கள் மற்றும் போராட்டங்கள் நடந்து வருகின்றது கடந்த 4 நாட்களாக மின்னியாபோலிஸ் நகரில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. கறுப்பின மக்களின் கோபம் பல இடங்களில் வன்முறையாக வடிவெடுத்திருக்கிறது.

இதற்குக் காரணம் மே 25 இரவு 8 மணி அளவில், மின்னியாபோலிஸ் நகரில் உள்ள ’  கடைக்குச் சென்றிருந்த ஃப்ளாய்டு, ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி இருக்கிறார் அதற்காக அவர் கொடுத்த 20 டாலர் நோட்டு கள்ளநோட்டு என்று அந்தக் கடையில் வேலை பார்த்த ஊழியர் கருதியிருக்கிறார்கள்.வழக்கமாக இப்படி யாரவது கள்ள நோட்டைக் கொடுத்தால் அது நல்ல நோட்டாக இல்லாவிட்டால் அதற்குப் பதிலாக நல்ல நோட்டு இருந்தால் கொடுங்கள் இல்லையென்றால் பொருள் இல்லை என்றுதான் பொதுவாகக் கடைக்காரகள் கூருவது வழக்கம்.. ஆனால் இங்கு அப்படி நடக்காமல் அது குறித்து உடனே போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்துக்குப் போலீஸ் வந்தபோது, ஃப்ளாய்டு அந்த அங்காடிக்கு வெளியில்தான் இருந்திருக்கிறார்.

ஆனால், அவர் தனது காரில் அமர்ந்திருந்ததாகவும், காரைவிட்டு வெளியே வருமாறு உத்தரவிட்டபோது அதை ஏற்க மறுத்துவிட்டார் என்றும் காரணம் சொல்கிறார்கள் போலீஸ்காரர்கள். ஆனால், அருகிலிருந்தவர்கள் எடுத்த காணொளி ஆதாரங்கள் உண்மையைப் பட்டவர்த்தனமாக்கிவிட்டன.
  
கைவிலங்கு மாட்டப்படுவதற்குக்கூட எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதியாக நின்றிருந்தவரைக் கீழே தள்ளி, அவரது கழுத்தின் மீது தனது முழங்காலை அழுத்தியபடி நின்றிருக்கிறார் டெரெக் சாவின் எனும் காவலர். அருகிலிருந்தவர்கள் அதை வேடிக்கை பார்ப்பதையும், படமெடுப்பதையும் தடுக்கும் வகையில் அந்தக் காட்சியை மறைத்தவாறு டோ தாவோ, தாமஸ் லேன், அலெக்ஸாண்டர் குயெங் ஆகிய மூன்று காவலர்கள் நின்றிருந்தனர். நால்வரும் வெள்ளையினத்தவர்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

உடல்ரீதியாக முற்றிலும் முடக்கப்பட்டிருந்த ஃப்ளாய்டு, “என்னால் சுவாசிக்க முடியவில்லை. என் வயிறு எரிகிறது. கழுத்து வலிக்கிறது. எல்லாமே வலிக்கிறது. அம்மா” என்று கதறியிருக்கிறார். “என்னைக் கொன்றுவிடாதீர்கள்” என்று மன்றாடியிருக்கிறார். அருகில் இருந்தவர்களும் அவரை விடுவித்துக் காரில் ஏற்றுமாறு கேட்டிருக்கிறார்கள். “அவர் அசைவற்றுக் கிடக்கிறார். அவரது நாடித் துடிப்பைப் பரிசோதனை செய்யுங்கள்” என்றும் கெஞ்சியிருக்கிறார்கள். ஆனால், காவலர்கள் நால்வரும் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.


http://globalnews.ca/news/6986935/minneapolis-police-arrest-death/

ஆம்புலன்ஸ் வந்து ஃப்ளாய்டை ஏற்றிச்செல்லும் நிமிடம் வரை, அவர் கழுத்தில் மீது முழங்காலை வைத்து அழுத்திக்கொண்டே இருந்தார் காவலர் சாவின். மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட ஃப்ளாய்டு ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். ஒரு கறுப்பின மனிதரின் வாழ்க்கை வெள்ளையின் காவலர்களின் நிறவெறியால் இப்படியாக முடிவுக்கு வந்துவிட்டது.



அமெரிக்காவில் கறுப்பின மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனவெறிக் குற்றங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதற்கு இன்னொரு உதாரணமாகியிருக்கிறது ஃப்ளாய்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

செவ்வாய்க்கிழமை காலை, மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில் கறுப்பின சமூகத்திடம் மன்னிப்பு கேட்டார் .

அமெரிக்காவில் கறுப்பராக இருப்பது மரண தண்டனையாக இருக்கக்கூடாது. ஐந்து நிமிடங்கள், ஒரு வெள்ளை அதிகாரி தனது முழங்காலை ஒரு கருப்பு மனிதனின் கழுத்தில் அழுத்துவதைப் பார்த்தோம். ஐந்து நிமிடங்கள். யாராவது உதவிக்கு அழைப்பதை நீங்கள் கேட்கும்போது, ​​நீங்கள் உதவ வேண்டும். இந்த அதிகாரி மிகவும் அடிப்படை, மனித அர்த்தத்தில் தோல்வியடைந்தார், ”என்று ஃப்ரே பதிவிட்டார்.

இந்தச் சம்பவத்தால் ஃப்ளாய்டின் குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கறுப்பினச் சமூகமும் நொறுங்கிப்போயிருக்கிறது. “பட்டப்பகலில் என் அண்ணனைக் கொலை செய்துவிட்டார்கள்” என்று குமுறியிருக்கிறார் அவரது சகோதரர் ஃபிலினாய்ஸ் ஃப்ளாய்டு. “கறுப்பின மக்கள் கொல்லப்படுவதைப் பார்த்துப் பார்த்துக் களைப்படைந்துவிட்டேன்” என்று சொல்லியிருக்கும் ஃபிலினாய்ஸ், வன்முறை போராட்டங்களைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.ஆனால் அதைக் கேட்கும் நிலையில் கறுப்பின மக்கள் இல்லை


“A riot is the language of the unheard,” Martin Luther King Jr said in a 1967 speech that is currently reverberating through social media for obvious reasons. “And what is it that America has failed to hear? It has failed to hear that … the promises of freedom and justice have not been met. And it has failed to hear that large segments of white society are more concerned about tranquility and the status quo than about justice, equality and humanity.”

That speech was 53 years ago and America still isn’t listening. The uncomfortable truth is that, sometimes, violence is the only answer left.

மார்ட்டின் லூதர் கிங் முதல், மால்கம் எக்ஸ் வரை எத்தனையோ கறுப்பினத் தலைவர்கள் போராடிப் பல உரிமைகளைப் பெற்றுத் தந்திருந்தாலும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீதான வெறுப்புணர்வு இன்னமும் முற்றிலும் மறைந்துவிடவில்லை.பல இடங்களிலும் கறுப்பினத்தவர்கள் ஏதேனும் ஒருவகையில் பாரபட்சமாக நடத்தப்படும் சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து நடக்கின்றன. எப்படி நமது நாட்டில் சுதந்திரம் வாங்கி அதன் பின்னர்ப் பல சட்டங்கள் கொண்டுவந்தும் இன்னும் சாதியக் கொடுமைகள் ஒழியவில்லையோ அது போலத்தான் இங்கும் இனவெறி குறையவில்லை


அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 900 முதல் 1,000 பேர் வரை, போலீஸ்காரர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இப்படிப் போலீஸாரால் கொல்லப்படுபவர்களில், வெள்ளையினத்தவர்களை ஒப்பிட கறுப்பினத்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுபோன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் வெள்ளையின் காவலர்களில் பெரும்பாலானோர் குற்றமற்றவர்களாக வழக்கிலிருந்து வெளிவந்துவிடுகிறார்கள். அதேசமயம், இதுபோன்ற வழக்குகளில் தொடர்புடைய கறுப்பினக் காவலர்களுக்குத் தண்டனை கிடைத்துவிடுகிறது.


காவலர்களால் கறுப்பினத்தவர்கள் கொல்லப்படும் சம்பவம் குறித்துப் பெரிய அளவில் முன்பு விவாதங்கள் எழுந்தன. காவலர்கள் தங்கள் உடலில், கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 2015-ம் ஆண்டு வாக்கிலேயே 95 சதவீதக் காவலர்கள், தங்கள் உடல்களில் கேமராவைப் பொருத்திக்கொண்டனர். எனினும், அதனால் பெரிய மாற்றம் வந்துவிடவில்லை.


நியூஜெர்ஸியின் கேய்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, குற்றவியல் நீதித் துறைப் பேராசிரியர் ‘தி கான்வெர்சேஷன்’ இதழில் எழுதியிருக்கும் கட்டுரையில், ‘அமெரிக்காவின் காவல் துறையினரின் வரலாறு என்பது அடிமைகளைக் கண்காணிக்கும் பணியிலிருந்தவர்களிலிருந்து தொடங்குகிறது. அடிமை முறை தொடர வேண்டும் என்று விரும்பிய தென் மாநிலங்களில் கறுப்பின அடிமைகள் தப்பிச்செல்லாமல் தடுக்க வெள்ளையினக் குழுக்கள் செயல்பட்டன. வட மாநிலங்களிலும், அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஆபத்தான மனிதர்களைக் கண்காணிக்கும் பணியில் பல குழுக்கள் செயல்பட்டன. அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களில் பலர் கறுப்பினத்தவர்கள்தான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக, அமெரிக்காவில் கண்காணிப்பு, காவல் அமைப்பு என்பதன் அடிநாதமாக இன்னமும் இனவெறி இருக்கிறது என்பது அவரது வாதம். அதனால்தான், காவல் துறையினரிடமிருந்து இனவெறி உணர்வை அவ்வளவு எளிதில் அகற்ற முடியவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எந்த ஒரு பிரச்சினையையும் தனது ‘பாணி’யில் அணுகும் மோடியின் சகோதரர்  ட்ரம்ப், மின்னியாபோலிஸ் நகரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, ‘லூட்டிங் (கொள்ளை) நடக்கும்போது ஷூட்டிங் (துப்பாக்கிச் சூடு) தொடங்கும்’ என்று ட்வீட் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ட்வீட்டை ட்விட்டர் நிறுவனம் நீக்கிவிட்டது இது பரபரப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.


இங்கே போராட்டங்கள் கலவரங்கள் அமெரிக்காவின் முக்கியமான நகரங்களில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது மற்ற இடங்களில் உள்ள மக்கள் இயல்பு மாறாமல் ஏதோ ஒரு நாட்டில் நடப்பது போலக் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் இப்படிப் பெரும் நகரங்களில் போராட்டம் நடக்கக் காரணம் அந்தப் பகுதிகளில்தான் கறுப்பினத்தைச் சார்ந்த மக்கள் அதிகம் வாழ்கிறார்கள்... இந்தக் கலவரங்கள் பெரும் நகரங்களில் நடை பெறுவதும் ஊடகங்களில் அதிகம் பேசப்படுவதாகவும் இருக்கிறது...

மற்ற இனமக்களைப் பொருத்தவரை இது வழக்கமாக நடை பெரும் ஒரு நிகழ்ச்சியாகவும் ஒரு பேசப்படும் செய்தியாகவும் கருதுவதாகவே எனக்குப் படுகிறது. அதுமட்டுமல்லாமல் வேறு எந்த இனமக்க்களும் இந்தக் கருப்பினர்களுடன் சேர்த்து அவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கவில்லை.. ஒரு வேளை அப்படிச் செய்தால் வருங்காலத்தில் தாங்களும் அப்படிப் பாதிக்கப்படுவோமோ என்ற பயமும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்


ஒன்றுமட்டும் தெரிகிறது பல கருப்பினமக்கள் சுதந்திர நாட்டில் வசித்தாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் ஒரு மிகப் பெரிய பய உணர்ச்சி ஒடிக் கொண்டு இருக்கிறது என்பதை அவர்களின் பேச்சுகளிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது அவர்களின் குழந்தைகள் நன்கு படித்து வந்தாலும் எதிர்காலத்தில் தங்களுக்கோ அல்லது தங்களின் குழந்தைகளுக்கு இப்போது நடந்த சம்பவங்கள் மாதிரி அவர்களுக்கும் நடந்துவிடுமோ என்ற பய உணர்ச்சியுடனே வாழ்கிறார்கள்

இந்த மாதிரி நிகழ்வுகள் அமெரிக்க நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் மற்றும் பல நாடுகளில் அங்குள்ள தலைவர்களால் தங்களின் சுயநலங்களுக்காக மக்களிடையே ஒரு வெறுப்புணர்வை ஒரு விஷ விதையாக ஊன்றி வளர்த்து அறுவடை செய்துவருகிறார்கள். இப்படிச் சுயங்கலம்மிக்கத் தலைவர்கள் நம்மை ஆளும் வரை உலகெங்கும் இப்படி ஒரு நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்

ஜெய்ஹிந்த் சாரி இது ஏதோ வழக்கமாக இந்தியாவில் நடக்கும் ஒரு நிகழ்வு என்று நினைத்து அதற்காக ஒரு பதிவு எழுதுவாதாக நினைத்து  ஜெய்ஹிந்த்  என்று சொல்லிவிட்ரே சாரி..

இப்ப சரியாக சொல்லுகிறேன் God Bless America


அன்புடன்
மதுரைத்தமிழன்




17 comments:

  1. அங்கயும் கள்ள நோட்டு, இனவெறிக்கொலை. இந்த உலகம் முழுதும் ஒன்றுதான் போலிருக்கிறது.

    ReplyDelete
  2. வெறி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக...

    ReplyDelete
    Replies
    1. எல்லா நாடுகளிலும் மனித வடிவில் மிருகங்கள் ஒழிந்து இருக்கின்றன

      Delete
  3. Replies
    1. உயிர்களை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை இதையெல்லாம் பார்க்கும் போது வேதனைதான்

      Delete
  4. கருப்பினத்தவர் தவிர மற்ற நிறத்தவர் நிலை எப்படி

    ReplyDelete
    Replies
    1. கருபித்தனவர்கள் போலவே ஸ்பானிஷ் இன மக்களும் நடத்தப்படுகிறார்கள்

      Delete
  5. தொலைக்காட்சியில் பார்த்தேன் இந்த செய்தியை.கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாமல் இப்படி செய்கிறாரே என்று வேதனை ப்ட்டேன்.

    ReplyDelete
  6. வேதனை
    வல்லரசாய் இருந்து என்னபயன், நல்லரசாய் இல்லையே

    ReplyDelete
  7. மிக கொடூரமான செயல். ஆனால் எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் பாலியல் வல்லுறவு குற்றச்செயலில் ஈடுபட்டவனை, நானாக இருந்தால் சட்டம் தண்டிக்கும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் நானே தண்டனை கொடுத்து விடுவேன் என்று சொல்லியிருந்தீர்கள். அதேபோல் இந்த காவலரும் பொறுமையின் எல்லைக்கு போயிருக்க வாய்ப்பு இருக்கிறது. கொலைசெய்யப்பட்டவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு இவர்களுக்கு பெரும் தலையிடி கொடுத்திருக்கலாம்.

    நானும் ஒரு நாட்டின் சிறுபான்மை இனத்தவர், பல வருடங்களாக உலக நடப்புகளை கூர்ந்து கவனித்து வருகிறேன். அநேகமாக எல்லா நாடுகளிலும் உள்ள சிறுபான்மை மக்கள், பெரும்பான்மை மக்கள் தமக்கு அநீதி இழைக்கிறார்கள் என்று கூப்பாடு போடுகிறார்களே தவிர, தாங்களும் அந்த நாட்டின் குடிமக்கள் என்பதை உணர்ந்து அந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நாட்டுப்பற்றுடன் நடந்து கொள்வதில்லை. பெரும்பான்மை மக்கள் தமக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்கிறார்களே தவிர, இவர்கள் பெரும்பான்மை மக்களின் கலாசாரத்தை மதித்து அவர்களுடன் இணக்கமாக வாழ தயாராகவே இல்லை. சிறுபான்மையினரின் செயல்கள் ஒவ்வொன்றும் அந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் ஈகோவை சீண்டி விடுவதாகவே இருக்கிறது. இந்த நிலை மாறும் வரை அடக்குமுறையும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    ReplyDelete
  8. I think you should stop speculating NONSENSE like this, IDIOT!!

    "அதேபோல் இந்தக் காவலரும் பொறுமையின் எல்லாஇக்கு போயிரூக்க வாய்ப்பிருக்கு. கொலை செய்யப்பட்டவர் தொடர்ந்து குற்றசெயலில் ஈடுபட்டு பெரும் தலையிடி கொடுத்து இருக்கலாம்"

    இலங்கையில் இருந்து இதுபோல் எல்லாம் உளறக் கூடாது. உன்னைமாரி நாதாரிகளால்தாண்டா உலகமே இப்படி போய்க்கிட்டு இருக்கு.

    அமெரீக்கா,கறுப்பினர்னா என்னடா தெரியும் உனக்கு வெண்ணை!

    வந்துட்டான்பெரிய புடுங்கியாட்டம். இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம்னு. உன் ஆத்தா கூட ஊருப்பயலுக்கு உன்னை பெத்து இருகல்லாம். டி என் எ டெஸ்ட் பண்ணி இருக்கியா? உன்ன் லாஜிக்தாண்டா முண்டம்!

    Shut the fuck up!

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் சொல்வதை போல நீ ஒரு சைக்கோ தான். உனக்கு என்னை பற்றி என்ன தெரியும்? என் நாட்டை பற்றி என்ன தெரியும்? இது வேறொருவரின் தளம் என்பதாலும், இவர் உன்னை போல பொறுக்கி இல்லை என்பதாலும் உன் கேள்விகளுக்கு இங்கே பதில் சொல்லவில்லை, அதை உன் தளத்திற்கு வந்து சொல்கிறேன்.

      Delete
    2. Well, whatever you say in my blog will go to garbage can because I dont want to listen to idiots like you. So, dont waste your time.

      Yeah, I dont know about your country, you live the way you wish to. It is your life, after all. But DONT TALK about MY COUNTRY. I am a recent immigrant to this country but I dont want to be discriminated like ezha tamils getting discriminated in your nation. Our amendments do not suggest that minority should "get adjusted" to what majority says. Our nation originally belongs to Indian tribes who lived here for thousands of years. That original race (minority) is almost eradicated by the european immigrants, who are the majority now. So, your fucking logic of "minority (tamils) should lick majority (singalese) behind wont work here.

      I think you are a singalese who knows how to read and write in Tamil. You clearly support the idea of minority Tamils should "RESPECT" majority singalese. That is what you are trying to imply here. You live your life the way you wish to IN YOUR COUNTRY. But DONT EVER extrapolate your fucking logic to other countries. That kind of logic wont work in a nation like America where the native people had been "eradicated".

      We have had slaves in this country. I dont think your nation ever had slaves. So, Dont compare apples and oranges here. I dont want you to talk about how majority whites should treat minority blacks who have been abused as slaves for centuries. Do you understand you crazy fuck?!!

      Delete
  9. வருந்தத்தக்க விஷயம்

    ReplyDelete
  10. சிறப்பான அலசல்
    காலம் பதில் சொல்லும்

    ReplyDelete
  11. வேதனையான விஷயம் மதுரை தமிழன்.

    துளசிதரன்

    விசு எழுதிய பதிவைப் பார்த்த போது கூட இந்தச் செய்தி குறித்ததுதான் என்று டக்கென்று புரியவில்லை ஏனென்றால் அவர் வரலாற்றுச் செய்தியையும் குறிப்பிட்டிருந்தார். அதன் பின் தான் மெதுவாகத் தெரிந்தது உங்கள் பதிவை அன்று பார்த்ததும் முதலில் பட்டது படங்கள்.....எனக்கு அதை ஏற்கும் சக்தி இல்லை மதுரை. மனம் ரொம்பவே வேதனை அடைந்தது.

    தண்டிக்கப்படணும் அக்காவலர்கள்.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.