Friday, May 15, 2020


சட்டத்தை காற்றில் பறக்க விட்டு வருமானத்திற்காக  வானில் பறக்கும் அமெரிக்க விமானங்கள்


அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சமூக தூரத்தை பராமரிக்க உறுதி அளித்துள்ளது. ஆனால் அளித்த உறுதியை மீறி இருக்கிறது என்பதை இந்த வீடியோவைப் பார்க்கும் போது தெரிகிறது  சமுக இடைவெளி இல்லாமல் பயணிகள் பயணித்து இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது அமெரிக்காவில் ஏன் சாவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது புரியும்




For the latest on the pandemic
American Airlines has vowed to maintain social distancing. But on this “85 per cent full” flight, some passengers still had to sit in the middle seat.

Courtesy : scmp .

வளர்ந்த நாடுகளிலேயே இப்படி என்றால் வளர்ந்து வரும் நாட்டில் டாஸ்மாக் கடை திறந்து பற்றி என்ன குறை சொல்ல முடியும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. டாஸ்மாக் கடை திறப்பு வெட்கக்கேடு...

    ReplyDelete
    Replies
    1. அதைவிட மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இதன் மூலம் சமுக நலனுக்காக வழக்கு தொடர்பவர்களுக்கு இந்த் நீதி மன்றம் என்ன சொல்ல வருகிறது.

      Delete
    2. மூடிக்கிட்டு வீட்டில் இருன்னு சொல்லுது

      Delete
  2. பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானோ?!

    ReplyDelete
  3. மரணபயம் யாருக்கும் இல்லை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மரணபயம் எல்லாம் இருக்கும் அதை பற்றி யோசிப்பதில்லை. நோய்வாய்பட்டு படுக்கும் போது மரணபயம் வரும்

      Delete
  4. பணம்/வருமானம் மட்டுமே முக்கியம் என்று அனைவருமே நினைக்கிறார்கள். எங்கே போய் முடியப் போகிறதோ? எல்லா நாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது நிலை. சில வெளியே தெரிகின்றது. பல விஷயங்கள் வெளியே தெரிவதில்லை - அவ்வளவே வித்தியாசம்.

    ReplyDelete
    Replies

    1. பணம் இன்றைய வாழ்க்கைக்கு அவசியமாகி போய்விட்டது... பாருங்கள் அது இல்லாமல் இந்தியாவில் எத்தனை மக்கள் நூற்றக்கணக்கான மைல்கள் பசி பட்டினியோடு நடக்கும் அவலம் பார்க்கிறோமே

      Delete
  5. Replies
    1. ஆமாம் எல்லாவாற்றையும் கண் முன்னால் பார்க்கும் போது வேதனையாகத்தான் இருக்கிறது

      Delete
  6. பொருளாதாரத்தைதான் நினைக்கிறார்கள் வளர்ந்த நாடுகளே இப்படி இருக்கும் போது என்ன சொல்வது. பூமியில் அதிகரித்திருக்கும் மக்கள் தொகை குறைவதுவும் நலன் தரும் என பாதுகாப்பை குறைக்கிறார்கள் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது இது எவ்வளவு உண்மையோ தெரியவில்லை.

    ReplyDelete
    Replies


    1. பொருளாதாரம் மிக முக்கியமாகத்தான் இருக்கிறது

      Delete
  7. அங்கு பொருளாதாரமே மிக மிக முக்கியமாகக் கருதப்படுவதாகச் செய்திகளில் வாசிக்கிறோம். வருமானமே முக்கியம் என்று நினைக்கும் போது இது எப்படி முடியும் என்பது கவலையாகவே இருக்கிறதுதான். மக்களும் அப்படித்தானோ இல்லை என்றால் பிரயாணம் செய்ய முடியாது என்று எதிர்க்கலாமே அது அங்கு சாத்தியமில்லையா? லாக்டவுன் கூடாது திறந்துவிடுங்கள் என்று போராட்டம் செய்தார்களே.

    உயிரைவிட, மக்கள் நலனைவிட பொருளாதாரம் வருமானம் முக்கியம் என்று யோசிப்பது, முரண் தான் என்றாலும் ஒரு விதத்தில் யோசித்தால் சரிதான் இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள்வது என்பது மக்கள் பெருக்க நாடாகிய அதுவும் விளிம்பு நிலை மனிதர்கள் அதிகம் இருக்கும் நம் நாட்டில் கொஞ்சம் கஷ்டம்தான். பல நாடுகளிலுமே இப்படித்தானே இருக்கிறது. இந்தத் தொற்று எல்லாவிதத்திலும் ஆட்டி வைப்பது என்னவோ உண்மை.

    துளசிதரன்
    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.