Monday, May 18, 2020

உலகெங்கும் பேசப்படும்  தமிழ் பதிவர்

அண்ணே அது யாருண்ணே?

அடேய் அது நாந்தாணடா...

என்னண்னே உங்களைப் பற்றி உலகமே பேசுதா?

ஆமாம்டா...

அப்படியென்றால் எனக்கு எப்படித் தெரியாமல் போச்சு

அடேய் டாஸ்மா க்யூவில் இருந்தால் உனக்கு எப்படிடா தெரியும்..

அதுவும் சரிதான் சரி விஷயத்தைச் சட்டுபுட்டுன்னு சொல்லுங்க

அடேய் நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல் அதன்பின் உனக்குத் தன்னால தெரியும்
   
சரி கேள்வியை நீங்க கேளுங்கள்

இப்ப உலகம் முழுவதும் எதைப் பற்றிப் பேசுறாங்க..

மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்த் துறைக்கு விற்று கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றப் போகிறார் என்று பேசுறாங்க அண்ணே..

அடே உலகத்தில் என்ன பேசுறாங்க என்றால் இந்தியாவில பேசுகிறதைப் பற்றிச் சொல்லுறீயே அடேய் மோடி என்ன செய்கிறார் என்று மற்ற நாடுகள் கவலைப்படுவதில்லைடா.. சரி சரியா யோசித்து சொல்லு

அண்ணே கொரோனாவை பற்றித்தான் பேசுறாங்க

வேற என்ன பேசுறாங்க

சைனாக்காரன் அதைப் பரப்பினார்கள் என்று பேசுறாங்கண்ணே

வேற

அமெரிக்க இனிமே வல்லரசு இல்லை இந்தியாதான் இப்ப வல்லரசு என்று பேசுறாங்க

அடே உங்கிட்ட சங்கிகள் என்ன பேசுறாங்கள் என்றா கேட்டேன் கேட்டதற்குச் சரியா பதில் சொல்லு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாமாண்ணே

இப்பதான் கொஞ்சம் நெருங்கி வருகிற?

வேற

அதும் நீயூயார்க் நீயூஜெர்ஸியில் பாதிப்பும் அதிகம் செத்ததும் அதிகமாண்ணே


இதைப் பற்றிப் பேசும் போது என்னைப் பற்றியும்தானே உலகெங்கும் பேசி இருக்கிறது.


என்னெண்ணே சொல்லுறீங்க..... நீங்க இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை ஏதும் செய்து பல உயிர்களைக் காப்பாற்றிணீங்களாண்ணே?

அடேய் நான் அடுத்தவ்ங்களைக் காப்பாற்றும் நிலையிலாடா இருக்கேன்

பாதிப்பே எனக்குதானடா....... ( முதலில் என் மனைவிக்கும் அதன் பின் எனக்கும் கோவிட் -19 பாசிட்டிவ்)அதனாலதான் சொன்னேன் உலகெங்கும் நீயூயார்க் நீயூஜெர்ஸியைப்பற்றிப் பேசிய போது என்னைப்பற்றியும் பேசியதாகவே நான் கருதியால்தான் உலகெங்கும் என்னைப் பற்றிப் பேசினாங்க என்று சொன்னேன்.


அண்ணே உங்களுக்குக் கொழுப்பு இன்னும் அடங்கலை போலிருக்கிறது அவனவன் பயந்து சாகிறான் ஆனால் நீங்க என்னடா என்றால் மோடியை திட்டிக்கொண்டு இருக்கிங்க அதுமட்டுமல்லாமல் இப்படி ஒரு மொக்கைப் பதிவையும் எழுதிக்கொண்டு இருக்கிங்க

அண்ணே இப்ப எப்படி இருக்கிங்க...

இப்ப நான் புதிய இந்தியா மாதிரி இல்லாமல் மிக நன்றாகவே இருக்கிறேன்..

இப்ப சொல்லு உலகெங்கும் என்னைப்பற்றி பேசிக் கொண்டுதானே இருக்கிறார்கள் .

அண்ணே உலகம் பேசிகிறதோ இல்லையோ இந்த சங்கிகள் மட்டும் உங்களை நன்றாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தமிழகத்தில் இருக்கும் எனக்கு நன்றாக தெரியுமண்ணே

சரி தம்பி யார் எப்படியும் பேசட்டும் ஆனால் தலைப்பை நம்பி இந்த பக்கம் வந்துட்டே அதனால உண்மையிலே  தமிழக இளைஞர் ஒருவர் சத்தம் இல்லாமல் பல சாதனைகளை செய்து வருகிறார். அவரைப் பற்றி நாம்  நாளை இங்கு காண்போம் & மனதார பாராட்டுவோம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

23 comments:

  1. உங்கள் குடும்பத்திற்கு பாசிட்டிவ் என்ற போது பதட்டப்பட்டு விட்டேன்... இல்லை என்று முகநூலில் தகவல் வந்த பின்பு தான் மனதில் நிம்மதி...

    அப்புறம் பாராட்ட எல்லாம் காத்திருக்க முடியாது... இப்போதே பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. முதலில் எனக்கு 2 வாரங்களாக உடல் நிலை சரியில்லை அந்த சம்யத்தில் எல்லோருக்கும் டெஸ்ட் பண்ணிய போது நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது அதன் பின் மனைவி உடல்னிலை சுகமில்லாமல் போனதால் மீண்டும் ஒரு டெஸ்ட் பார்த்த போது அவளுக்கு பாசிட்டிவ் என்று வந்தது.. அதன் பின் 2 வாரம் கழித்து மீண்டு எல்லோரும் டெஸ்ட் எடுத்து பார்த்த போது அவளுக்கு பாசிடிவும் இல்லை நெகட்டிவும் இல்லை என்ற ரிசல்ட் வந்ததால் அவ்ள் முழு ரெக்கவர் ஆகவீல்லை என்ற் சொன்னார்கள் அப்போது எனக்கு எடுத்த டெஸ்டில் எனக்கு பாசிடிவ் என்று காட்டியது இப்போது இருவரும் ரெக்கவர் ஆகி வருகிறோம் இன்னும் சில நாட்களில் மீஈண்டு டெஸ்ட் செய்து பார்க்கனும் அது வரை வீட்டில் அரஸ்ட்தான்

      Delete
  2. மதுரைத்தமிழன் இப்போது நலமா? நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமுடன் இருக்க பிரார்த்தனைகள். உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். விரைவில் நீங்கள் அனைவரும் நலம் பெற எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

    யாரைப்பாராட்ட உள்ளீர்கள் என்பதை கொஞ்சம் யூகிக்க முடிந்தது. நீச்சல்காரன் அவர்களைத்தானே?!! எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துகள் பாராட்டுகள் அவருக்கு! அருமையான ப்ணி செய்கிறார்!

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இப்போது 90 % நலம் இந்த வார இறுதிக்குள் முழுகுணம் அடைந்துவிடுவோம் என நம்புகிறோம்...

      நான் இன்னொருவரை பற்றி நாளைய பதிவில் சொல்ல இருந்தேன் நீங்கள் நினைவூட்டியதால் அவரை பற்றியும் எழுதிவிடுகிறேன்

      Delete
  3. வீட்டில் எல்லாரும் சீக்கிரமே குணமடையவேண்டும் என பிரார்த்திக்கிறேன் ட்றுத். வீட்டில் நல்லா ரெஸ்ட் எடுங்க.

    ReplyDelete
    Replies
    1. உண்மை(ட்ரூத்) எப்போதும் தூங்கும் அதாவது ரெஸ்ட் எடுத்துக் கொள்ளும் ஹீஹீ

      Delete
  4. தாங்ளும்க, தங்கள் குடும்பமும் முழு ஆரோக்கியம் பெற பிராத்திக்கிறேக்ன்

    ReplyDelete
  5. உடம்பை பார்த்துக்கோங்க ரெஸ்ட் எடுங்க சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்சல் .... ஆனால் சிக்கிரம் குணமடைந்தால் நான் முழு ஞானியாக முடியாதே....

      Delete
  6. தங்களது குடும்பம் நலம் என்ற ரிசல்ட் வந்தது கண்டு மகிழ்ச்சி நண்பரே...

    ReplyDelete
  7. எதற்கும் அஞ்சாதே நெஞ்சமே ஐயன் புகழ் பாடு

    ReplyDelete
    Replies
    1. அச்சம் இல்லை அச்சம் இல்லை

      Delete
  8. நலம்பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  9. This is also fun for you. One way it is good that you take it easy. I am glad you both are recovering well. Stay safe.

    ReplyDelete
    Replies

    1. டேக் இட் ஈஸியாக எடுத்து கொண்டுதான் இந்த கொரோனா காலத்தில் இருக்கனும் காரணம் எல்லாம் வைரஸ்கையில்தான்.. முடிந்த வரை பாதுக்காப்பாக இருக்கனும் அப்படித்தான் இருந்தோம் இருந்த வரவேண்டும் என்று இருந்திருக்கிறது வந்துவிட்டது நிறைய கற்றுக் கொண்டோம்

      Delete
  10. I didn't know any of these. I was making fun of you in my latest youtube video. Sorry.

    ReplyDelete
    Replies
    1. வீடியோ பார்த்தவுடன் லைக் மட்டும் போட்டுவிட்டேன் அதன் பின் சிறிது நேரம் கழித்துதான் முழுவதும் பார்த்தேன் சிரித்து மகிழ்ந்தேன்

      Delete
  11. மிக மிக விரைவில் தாங்களும் தங்கள் துணைவியாரும் 100% குணம் பெறுவீர்கள். அதுவரை முழு ஓய்வு தேவை.

    //உண்மை[ட்ரூத்] எப்போதும் தூங்கும்; அதாவது, ரெஸ்ட் எடுத்துக்கொள்ளும்//...ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பரமசிவம் சார். எனக்கு நேரம் கிடைக்கும் போது உங்கள் பதிவுகளை பார்ப்பேன் ஆனால் அதில் கமெண்ட் இட முடியாமல் செய்து இருக்கிறீர்கள்..

      Delete
  12. முன்பு இல்லையென்று சொன்னதும் மகிழ்ந்தோம்.மதுரைத் தமிழன் பதட்டம் கொள்ளாமல் எதிர்கொண்டதில் கொரோனா போயே போச்சு. மதுரைத் தமிழனின் பலமே இதுதான். மேலும் நலம் பெற வாழ்த்துகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.