Thursday, November 17, 2016



விஜய் டிவி நாசமாகப் போகட்டும்

மோடி பொது நிகழ்ச்சியில்  கண்ணிர்விட்டு இந்த நாட்டுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று பேசினார். இந்த உணர்ச்சிகர நடிப்பை பாராட்டி  விஜய் டிவி இந்த வருடத்திற்கான உணர்ச்சிகர நடிகர் பட்டத்தை மோடிக்கு தரவில்லையென்றால் அந்த டீவி கம்பெனி மிக நாசமாக  போகட்டும்

avargal unmaigal
காங்கிரஸ் ஆட்சியில்தான் மோடிக்கு கல்யாணம் நடந்து அதன் பின் மனைவி பக்கமே வராத  கணவர் மோடியை 'வாராக் கணவர்' என்று சொல்லி அவர் மனைவி யசோதாவிற்கு விடுதலை(விவாகரத்து ) தருமா இந்த மோடி அரசு

புதிய இந்தியா பிறந்துவிட்டது மகிழ்ச்சி என்று சொன்ன ரஜினிகாந்த் அப்படியே ஒரு நகர் வலம் வந்து புதிய இந்தியாவில் சாமான்ய மக்களின் அன்றாட வாழ்வு நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்து வாய்ஸ் கொடுப்பரா?


இந்த வாரம் வங்கியில் பணம் வாங்குபவர்களுக்கு கையில் மை வைக்கப்படும் அடுத்த வாரம் வருபவர்களுக்கு நெற்றியில்
நாமம் இடப்படும்

ராகுல்காந்தி வரிசையில் நிற்பதெல்லாம் வேஷம் என்றால் மோடி வேஷம் போடாமல் இயற்கையாகவே நடிக்கிறார் என்று சொல்லாம்தானே

ஹரே மோடி சாப் உமக்கு அறிவு இருக்கா இன்னும் எவ்வளவு நாள்தான் இந்த பணப்பிரச்சனை செய்திகளை கேட்டு கொண்டே இருப்பது...பேசாமல் இராமருக்கு கோவில் கட்டப்போறேன் என்று அடுத்த அறிவிப்பை பண்ணுய்யா? பேஸ்புக் போராளிகள் செய்யும் அலும்பு தாங்கவில்லைய்யா

டிஸ்கி :எனது பேஸ்புக்கில் வெளிவந்த  ஸ்டேடஸ் படிக்காதவர்கள் படிக்க

அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. ஏஸி ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு அறிக்கை கொடுக்கலாம்தான் வீதியில் இறங்கி வந்து பார்க்கணும் சாமாணிய மக்களின் வாழ்க்கையை...
    உண்மைதான் நண்பரே ராகுலும், மோடியும் ஒரே ரகம்தான்

    ReplyDelete
  2. Engal Makkal Vairu eriyuthu enkay evaruu enthiran 2. teaser release bombay kaykutham

    ReplyDelete
  3. சாமான்ய மக்களின் நிலையை 40 வருடங்களுக்கு முன்பு பார்த்திருக்கும் ரஜினிக்கு இப்போ நேரமில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.