"அந்த" நாட்களின் இன்பம் எங்கே போனது? யாரால் போனது?
உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, April 3, 2012

"அந்த" நாட்களின் இன்பம் எங்கே போனது? யாரால் போனது?



"அந்த" நாட்களின் இன்பம் எங்கே போனது?யாரால் போனது?


அதிகமில்லைங்க சுமார் முப்பது மூப்பதைந்து  வருடங்களுக்கு முன்பெல்லாம் எல்லோருடைய வீடுகளிலும் காலை நேரத்தில் பெண்கள் வாசல் தெளித்துக் கோலம் போடுவார்கள். பெண் குழந்தைகள்  எழுந்து காலையில் படித்து விட்டு பின் வீட்டின் பின்புற தோட்டத்தில் பூத்திருக்கும் பூக்களைப் பறித்துத் தொடுத்து, பின் குளித்து தலைவாரி  பூ சூடிக் கொண்டு பள்ளிக்கூடம் செல்வார்கள் இதற்கு இடையில் கிடைத்த நேரத்தில்  அம்மாவிற்கு ஒத்தாசையாக வீடு பெருக்குவது, நீர்  இறைப்பது, அம்மியில் அரைத்து கொடுப்பது போன்ற சின்ன சின்ன வீட்டு வேலைகளையும் ஆசையாக செய்வார்கள்.

ஆண் குழந்தையாக இருந்தால் காலையில் எழுந்து படித்து விட்டு  தொலைதூரங்களில் இருந்து  குடிநீரை சைக்கிளில் கொண்டு வந்து தருவதுகடைக்குப் போவதுதோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணிர் ஊற்றுவது  போன்ற வேலைகளைச் செய்துவிட்டு பள்ளிக்குப் போவார்கள்.

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த நொறுக்கு தீணிகளை தின்றுவிட்டு தெருவில் போய் விளையாடுவார்கள். அதன் பின் ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி கைகால் கழுவி , வீட்டுப் பாடங்களை எழுதிப் படித்து விட்டு எட்டு மணிக்கு இரவுச் சாப்பாட்டை சாப்பிடுவார்கள். அதன் பின் வீட்டு வாசலில் பெரியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் அவர்களுடன் உட்கார்ந்து சிறிது நேரம்  உரையாடிவிட்டு அப்படியே அம்மாக்களின் மடியில்  தூங்கி  விடுவார்கள்.

பெண்களும் காலையில் குழந்தைகளை பள்ளிக்கும் , கணவரை வேலைக்கும் அனுப்பி விட்டு பாத்திர பண்டங்களை கழுவி, துணி தொய்த்து  குளித்து விட்டு மதியம் ஒரு குட்டிதூக்கம் போட்டு எழுந்து காய்ந்த துணிகளை மடித்து போட்டு குமுதம் ஆனந்த விகடன் கல்கி கல்கண்டு போன்ற புத்தகங்களை சிறிது நேரம் படித்து வீட்டு அதன் பின் பள்ளியில் இருந்து வந்த குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் கொடுத்து விட்டு இரவு நேர உணவை தயாரிக்க சென்று விடுவார்கள் இரவு குழந்தைகள் மற்றும் கணவருக்கு உணவு தந்துவிட்டு அதன் பின் வீட்டு வாசலில் உட்கார்ந்து பக்கத்து வீட்டுகாரர்களிடம் பேசிவிட்டு ஒன்பது அல்லது 10 மணிக்கு படுக்கைக்கு சென்று இரவு நேரத்தில் வரும் ரேடியோ பாடல்களை கேட்டு தூங்கிவிடுவார்கள்

 இன்றைய காலங்களில் பலமாடி கொண்ட அப்பார்ட்மெண்டில் குடி இருப்பதால் காலையில் வாசல் தெளித்துக் கோலம் போடும் வசியமில்லை அது போல வீட்டு வேலைகளைச் சுலபமாக்க கேஸ் அடுப்பு, மைக்ரோ வேவ், குக்கர் ,மிக்ஸி , வாஷிங்மெஷின், ஃப்ரிஜ், போன்ற ஏகப்பட்ட சாதனங்களால் செய்யும் வேலை நேரங்கள் குறைவது மட்டுமல்ல , உபயோகிப்பதும் எளிதாகிறது. அது மட்டுமல்லாமல் இப்போது கடைகளில்  எல்லா உணவுப் பொருட்களும் ரெடிமேடாக   கிடைப்பதால்  வேலை நேரங்கள் மிக குறைகிறது  அது மட்டுமல்லாமல் சமைப்பதும் மிக எளிதாக இருக்கிறது. விஷேச நாட்களிலோ ஆள் வைத்து சமைக்கிறார்கள் பலகாரங்கள் செய்கிறார்கள் மேலும்   இப்போது உள்ள கணவன்மார்களும் அந்த கால ஆண்களைப் போல அல்லாமல் வீட்டு வேலைகளில் அதிக அளவு உதவி செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல் கடைக்கு சென்று கூட பலசரக்கு போன்றவைகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை போனில் ஆர்டர் செய்தால் வீட்டு கிச்சனுக்குள் கொண்டு வந்து கொடுத்துவிட்டு செல்லும் வசதியும் வந்து விட்டது.

இவ்வளவு வசதிகள் இருந்தும் இன்றைய நவின கால  பெண்களோ எப்போதும் நேரம் இல்லை நேரம் இல்லை நேரம் இல்லை நேரம் இல்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

நவின காலம் ,பெண்களுக்கு ஆண்களைவிட அதிக வசதி செய்து கொடுத்து இருப்பினும் ,அவர்களின் புலம்பல்கள் வசதிகளைப் போலவே அதிகரித்து கொண்டிருக்கின்றன.

பெண்களின் நேரங்கள் எப்படி களவாடப்படுகின்றன என்று பார்த்தால் அதில் முக்கிய பங்கு வகிப்பன செல்போன், லேப்டாப், டிவி

பெண்ணின் கையில் செல்போன் இல்லையென்றால் அவளின் உடம்பில் உயிர் இல்லை என்று நினைக்கும் அளவிற்கு நிலமை போய்விட்டது. அது போல கணவருக்கும் ,தன் குழந்தைகளுக்கும் ,பெற்றோர்களுக்கும் காலையில் குட்மார்னிங் சொல்கிறார்களோ இல்லையோ லேப்டாப்பை திறந்து வைத்து உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் முகம் தெரியாதவன் ஒருவனுக்கும் குட்மார்னிங்கும் குட்நைட்டும் சொல்லி கொண்டு அதற்கு அவன் சொல்லும் பதிலுக்கு 1000 முறை லேப்டாப்பை ஒப்பன் செய்து பார்த்து கொண்டிருப்பார்கள். அடுத்தாக டிவி பார்த்து அதில் வரும் சீரியலை பார்த்து தாமும் அதை போல கஷ்டப்படுவதாக கற்பனை செய்து அழுது கொண்டிருப்பார்கள் அல்லது அந்த சீரியலை பார்ப்பதன் மூலம் எப்படி சண்டை போடுவது என்பதை கற்று கொண்டிருப்பார்கள்.

இந்த சனியன்களின் உபயோகத்தை மிகவும் குறைத்தால் எல்லா இன்பமும் அவர்களின் காலடியில் வந்து நிற்கும். அதை செய்வார்களா அல்லது இதை படித்ததும் உண்மையை போட்டு உடைத்த மதுரைத்தமிழனை கட்டையால் அடிக்க வருவார்களா காலம்தான் பதில் சொல்லும்.
.
அன்புடன்
மதுரைத்தமிழன்


Download As PDF

8 comments:

  1. ஒரு கேள்விதான்... அதுக்கு ஆரம்பித்த விதம் அடேங்கப்பா.அதுவும் தலைப்பு ம் ம் ம்

    ReplyDelete
  2. sarithAan!
    vaazhthukkal

    kattai varaaathu-
    vaazhthu attaiye varum!

    ReplyDelete
  3. ஆமாம்ப்பா... ஸ்கூல் முடிந்து வந்ததும் ஒரு மணி நேரமாவது தெருவில் விளையாடி விட்டுத்தான் வீட்டுக்குள் வருவேன் நான். இன்றைய குழந்தைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது, நீங்க செர்ல்லிருக்கற மத்த விஷயங்களும் மிகமிகச் சரி.

    ReplyDelete
  4. இந்தியாவுல எத்தனை பெண்கள்கிட்ட லேப்டாப் இருக்குன்னு நம்புறீங்க. சொற்ப எண்ணிக்கையில்தான் சகோ. இன்னிக்கும் 4 மணிக்கு எழுந்து மாடாய் உழைக்கும் பெண்கள் உலகத்தின் எல்லா மூலையிலும் இருக்காங்க சகோ.

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வது இல்லத்தரசிகளாக
    வீட்டில் இருப்பவர்களுக்கு இது பொருந்தும்
    வேலைக்கும் போய் வந்து வீட்டு வேலைகளும் செய்கிற பெண்கள்
    உண்மையில் கஷ்டம்தான் படுகிறார்கள்
    சிந்திக்கவைக்கும் பதிவு
    தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அது எப்படிங்க எல்லா பெண்களையும் நீங்க சொல்லலாம் . இப்பவும் என்னைய மாதிரி சகோதரிகள் வீட்டு வேலைகளையும் பார்த்துவிட்டு , அலுவலக வேலைகளையும் பார்த்துக்கொண்டு இடையிடையே எங்கள் தமிழ் ஆர்வத்தையும் ஆண் ஆதிக்க வர்க்கத்திடம் வசவுகளை வாங்கியபடி அன்றாட நிகழ்வுகளை கழிக்கிறோம் .வசதி வாய்ப்புகளும் , முழுமையான பெண் சுதந்திரமும் இன்னமும் துணிச்சல் இல்லாத எதிர்த்துப் பேசத் துணியாத பெண்களிடம் இன்னமும் வரவில்லை என்றே சொல்லாலம் .

    ReplyDelete
  7. //இந்த சனியன்களின் உபயோகத்தை மிகவும் குறைத்தால் எல்லா இன்பமும் அவர்களின் காலடியில் வந்து நிற்கும்.//

    இவ்வரிகள் இல்லந்தோறும் (அதுவும் நடுத்தர
    குடும்பங்கள்)எழுதி வைக்க வேண்டியன ஆகும்
    நன்று நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  8. லேப்டாப் எல்லோருக்கும் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் தொல்லைகாட்சிகளும்.செல் போன்களும் அனேகமாக பெண்களை ஆட்டிப்படைத்துக்கொண்டு தான் இருக்கிறது.இருக்கும் கவலைகள் போதாதென்று தொடர்களின் கவலைகளும் சேர்த்து ஆட்டிப்படைத்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் பெண்களுக்கு கோபம் வரத்தான் செய்கிறது.ஒன்றும் செய்ய முடியாது.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

>

Popular Posts

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை (197) தமிழ்நாடு (106) அரசியல் (88) பெண்கள் (74) சிந்திக்க (66) இந்தியா (58) அமெரிக்கா (57) தமிழன் (52) வெட்கக்கேடு (51) ஜெயலலிதா (40) தமிழர்கள் (37) தலைவர்கள் (35) தமிழ் (32) நக்கல் (30) வீடியோ (29) மனைவி (27) வாழ்க்கை (26) அனுபவம் (24) இந்தியன் (22) கணவன் (22) சமூக பிரச்சனை (22) கலைஞர் (21) தேர்தல் (20) ஆண்கள் (19) செய்திகள் (19) மொக்கைகள் (18) யோசிங்க (18) உபயோகமான தகவல்கள் (17) பயனுள்ள தகவல்கள் (17) உணர்வுகள் (16) எண்ணங்கள் (16) ஹெல்த் டிப்ஸ் (16) குடும்பம் (15) புது தகவல்கள் (15) காதல் (14) எஜுகேஷன் (13) குழந்தை (13) சினிமா (13) அம்மா (12) எலக்சன் 2011 (12) விகடன் (12) ஹெல்த் (12) இளைஞர்கள் (11) கேள்வி பதில் (11) சட்டம் (11) சந்தோஷம் (11) சுயநலவாதிகள் (11) மகளிர் (11) மருத்துவம் (11) உடல் நலம் (10) எதிர்கால உலகம் (10) கேள்விகள் (10) வேதனை (10) இழப்பு (9) எதிர்பார்ப்பு (9) காதலி (9) குற்றம் (9) தகவல்கள் (9) தலைவன் (9) நம்பிக்கை (9) நல்ல சிந்தனை (9) பதிவாளர்கள் (9) வாழ்க்கை அனுபவம் (9) வெற்றி (9) உன்னால் முடியும்.... (8) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் (8) கொடுரம் (8) சமுக சீரழிவு (8) ட்ரிங்ஸ் (8) படித்ததில் பிடித்தது (8) மரணம் (8) Blogger (7) இறப்பு (7) இலங்கை (7) உணவு (7) என்றும் படிக்க புது புது தகவல்கள் (7) கல்வி (7) திமுக (7) மாணவன் (7) வியக்கதக்க தகவல்கள் (7) வெட்ககேடு (7) Drinks (6) அதிமுக (6) இளஞிகள் (6) எச்சரிக்கை (6) சாரு நிவேதிதா (6) சோகம் (6) டெக்னாலாஜி (6) தீபாவளி (6) துணிச்சல் (6) நீதி கதை (6) பாஸிடிவ் எண்ணம் (6) பெண் (6) பெண்ணுரிமை (6) வாழ்த்துக்கள் (6) அன்பு (5) அறியாமை (5) ஆண் (5) இல்லறம் (5) உங்களுக்கு தெரியுமா (5) உலகம் (5) கருணாநிதி (5) கலைஞர் கடிதம் (5) கல்லூரி (5) கிறுக்கல்கள் (5) கோயில்கள் (5) சமையல் குறிப்பு (5) தத்துவம் (5) நடிகர்கள் (5) நட்பு (5) நிருபர் (5) பயணம் (5) பாதுகாப்பு (5) பாராட்டுகள் (5) பெற்றோர்கள் (5) போலீஸ் (5) மனம் (5) மருத்துவ குறிப்பு (5) யூகச் செய்தி (5) விஞ்ஞானம் (5) 2012 (4) Anna Hazare (4) Educational (4) tamil joke (4) அப்பா (4) அறிவியல் (4) இறைவன் (4) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? (4) உறவுகள் (4) ஊழல் (4) கவிதை (4) சக்தி வாய்ந்த நாடு (4) சமூகச் சீரழிவுகள் (4) சாதனை (4) சினிமா உலகம் (4) சிறுவன் (4) சோஷியல் (4) டாக்டர் (4) டிப்ஸ் (4) டிராவல் (4) பதிவர் கூட்டம் (4) பதிவாளர் (4) புதிய கண்டுபிடிப்பு (4) பொதுநலம் (4) NRI (3) best school (3) hurricane sandy (3) அட்டாக் (3) அரசாங்கம் (3) அரிய புகைப்படங்கள் (3) அழகு (3) அழுகை (3) ஆச்சிரியம் (3) ஆனந்தம் (3) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் (3) இளமை (3) எக்கானாமி (3) கட்சி (3) கதை (3) கற்பழிப்பு (3) காங்கிரஸ் (3) சீனா (3) செக்ஸ் (3) தரமான பதிவுகள் (3) பாசம் (3) பாதுகாப்பான உறவு (3) பிரபலம் (3) பெண்ணின் சாதனை (3) பொது மக்கள் (3) பொருளாதாரம் (3) மகளிர் மட்டும் (3) மஞ்சள் பத்திரிக்கை (3) மது (3) மனவளம். ஆனந்தம் (3) முயற்சி (3) மொக்கை (3) ரஜினி (3) ரெசிபி (3) வேலைவாய்ப்பு (3) 2 G Scam (2) Award (2) Child Sexual Abuse (2) Dark Secret (2) New year (2) THE WHOLE TRUTH (2) U.A.E (2) Warning (2) sexual harassment (2) vikatan (2) wife (2) அனுபவம். இழப்பு (2) அன்னை (2) அப்துல் கலாம் (2) ஆப்பிள் நிறுவனம் (2) இறப்பு செய்தி (2) உணர்வு (2) கனிமொழி (2) குடும்ப நலம் (2) க்ரின்கார்டு (2) தந்தையர் தினம் (2) தமிழக பயண அனுபவம் (2) தரம் (2) தலைப்பு செய்திகள் (2) தின தமிழ் செய்தி தாள் (2) தினமலர் (2) தீபாவளி வாழ்த்து (2) தேவதை (2) தொழில் நுட்பம் (2) நன்றி (2) நல்ல வலைத்தளங்கள் (2) நெட்வொர்க் (2) நெல்லை (2) பரிசுநல்ல சிந்தனை (2) பிறந்தநாள் (2) புத்தகம் (2) மகளிர்தினம் (2) மதன் (2) மனித உரிமைகழகம் (2) மலர் (2) மலையாளி (2) முல்லை பெரியாறு (2) ரகசியம் (2) லேகியம் (2) வரலாறு (2) விசா (2) விமர்சனம் (2) விருதுகள் (2) ஸ்கூல் (2) ஸ்ரீலங்கா (2) ஹிந்து (2) #I-T ACT SECTION 66 A (1) 2011 Best Tamil Blog (1) Cell (1) Good news to be proud (1) Google (1) Hindu (1) Hindu Ritual (1) IIT (1) IPad (1) IPhone (1) ITouch (1) July 9th (1) Know Your English (1) Modern Mahatma (1) NASA (1) New year Eve's spacial (1) Perfect Mobile Plan (1) Social networking danger (1) big ben london (1) black friday (1) dinamalar (1) facebook theorem (1) india (1) mobile phone (1) music (1) photos (1) power cut (1) price (1) rape (1) sandwiches (1) tamil (1) tamil eelam (1) walmart (1) அனிமல் (1) அன்னையர் தினம் (1) அறிமுகம் (1) ஆணுறை (1) ஆண்களை வசிகரிக்க (1) இத்தாலி (1) இந்திய ராணுவம் (1) ஈரோடு (1) உன்னால் முடியும் (1) எழுத்தாளர் (1) ஒலிம்பிக் 2012 (1) கடல் (1) கடிதம் (1) கணக்கு (1) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி (1) கண்டணம் (1) கரடி (1) கவிதைகள் (1) கிறிஸ்துவ பாடல்கள் (1) குடியரசு தினம் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) கூடங்குளம் (1) கேரளா (1) கொலு (1) கோலம் (1) சமையல் (1) சமையல் குறிப்பு. ரெசிப்பி (1) சிக்கல் (1) சிறுகதை (1) சிறுநீரில் கல்லா? (1) சுகம் (1) சுதந்திரம் (1) செய்திகள். செக்ஸ் (1) ஜப்பான் (1) ஞானாலயா (1) தங்கமான தமிழ் சங்கங்கள் (1) தடை (1) தந்தை (1) தந்தையர்தினம் (1) தமிழ்தத்துவங்கள் (1) தமிழ்மணம் (1) தாஜ் மஹால் (1) தாய்ப்பால் (1) திருமணநாள் (1) நகராட்சி (1) நலஸ் செய்தி (1) நவராத்திரி (1) நிரிழிவு நோய் (1) பசி கொடுமை (1) பஞ்சாங்கங்ம் (1) பணம் (1) பரிசு (1) பிரதமர் (1) பிரிவு (1) புதிய கடவுள் (1) பொங்கல் (1) போட்டோ (1) போட்டோடூன் (1) மகாத்மா காந்தி (1) மதுரை (1) மதுவிலக்கு (1) மனிதன் (1) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? (1) மனைவியை மயக்க (1) மறைவு (1) மாற்று சிந்தனை (1) முதலைமைச்சர் (1) முத்தம் (1) முனிசிபால்டி (1) மூளைக்கு வேலை (1) மெனோபாஸ் (1) மெளனம் (1) மைசூர் பாகு (1) ராக்கெட் (1) ராமதாஸ் (1) ரெசிப்பி (1) வரதட்சணை (1) வாழ்வு (1) விண்வெளி (1) வெடி (1) வேட்டையாடு (1) ஸ்டாக் மார்க்கெட் (1) ஸ்வீட் (1) ஹாலிவுட் (1)