Friday, January 19, 2018

@avargalUnmaigal  #humour
கடவுளே எனக்கொரு புதுப் பொண்டாட்டி வேண்டும் அதுவும் அமெரிக்கப் பெண்ணாக வேண்டும் ப்ளிஸ்

Jan 1: மதுரைத்தமிழன் :அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியைப் பார்த்ததும் ஹாய் டார்லிங்க் ஹவ் ஆர் யூ?

ம.த மனைவி :காலையில் அலுவலகத்திற்குப் போகும் போது நல்லாதானே இருந்தீங்க இப்ப என்னாச்சு உங்களுக்கு?

மதுரைத்தமிழன் ஒன்றும் ஆகலை ஹனி ஐம் பைன்....



ம.த மனைவி சரி சரி இந்த டார்லிங்க் ஹனி  அப்படி இப்படின்னு உளறுவதை நிறுத்திவிட்டு காபியைக் குடித்துவிட்டுப் பெண்ணை டியுசன் சென்டரில் இருந்து கூப்பிட்டு வர்ர வழியைப் பாருங்க

ஹும்
 


Jan 2 :மதுரைத்தமிழன் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியைப் பார்த்ததும் ஹாய் இந்த உனக்காகப் பூங்கொத்து வாங்கி வந்திருக்கிறேன்

ம.த மனைவி :ஆமாம் இப்ப இது எதற்கு?

மதுரைத்தமிழன் உன்னைச் சந்தோசப்படுத்ததான் வாங்கி வந்தேன்.

ம.த மனைவி :ஆமாம் காசை கரியாக்கிட்டு வந்து இருக்கிறீங்க இந்தப் பூவு என்ன மல்லிகைப் பூவா தலையில் வைத்து சந்தோஷப்பட. போய் அந்த ப்லவர் வாஷில் போய் வையுங்க இனிமே இது போலக் காசை வேஷ்டாக்காதீங்க

ஹும்ம்..

Jan 3 :மதுரைத்தமிழன் :அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியைப் பார்த்ததும் ஹாய் பொண்டாட்டி இன்று நீ சமைக்க வேண்டாம் நாம் டின்னருக்கு வெளியே போய்ச் சாப்பிடுவோம்

ம.த மனைவி :ஏன் என் சமையலுக்கு என்ன குறைச்சல்....காசை வேஷ்டாக்காமல் வீட்டில் நான் வடித்து வைத்ததை ஒழுங்கா சாப்பிட்டு காலி பண்ண வழியைப் பாருங்க

Jan 4: மதுரைத்தமிழன் :ஹாய் என் செல்லப் பொண்டாட்டி எழுந்துக்கோ உனக்கா நான் சீக்கிரம் எழுந்து மார்னிங்க் பிரேக் பாஸ்ட் சூடாகப் பண்ணி இருக்கிறேன்.. சாப்பிடு

ம.த மனைவி :அது எல்லாம் முடியாது நான் இன்று நான் வெறும் வயித்தோட இரத்த பரிசோதனை பண்ணப் போகனும் . அதனால இதை வேஸ்ட் பண்ணாமல் சாப்பிட்டு முடியுங்க

மதுரைத்தமிழன் ஹும்ம்


Jan 5 : மதுரைத்தமிழன் :அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியைப் பார்த்ததும் ஹாய் பொண்டாட்டி இங்க பாரு உனக்குப் பிடித்த கேக் வாங்கி வந்திருக்கிறேன்.

ம.த மனைவி :என்னங்க் நான் புத்தாண்டிலிருந்து கேக் சாப்பிடறது இல்லை என்று தீர்மானித்து இருக்கிறேன். இப்ப போய்க் காசை கரியாக்கிட்டு வந்து இருக்கிறீங்க முடிந்தால் அதை ரிட்டன் பண்ண பாருங்க

மதுரைத்தமிழன் :ஹும்

Jan 6 : மதுரைத்தமிழன் :அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியைப் பார்த்ததும் அப்படியே அணைத்து ஒரு முத்தம் கொடுத்து நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொன்னவுடன்


ம.த மனைவி :ஏங்க உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா பிள்ளை தலைக்கு மேல் வளர்ந்து இருக்கு அவ முன்னாடி இப்படியா இருப்பிங்க என்று சொல்லி நங்கு என்று ஒரு குட்டு வைக்கிறாள்

மதுரைத்தமிழன் :ஹும்

Jan 7 : மதுரைத்தமிழன் :அலுவலகத்தில் இருந்து தாமதமாக வீட்டிற்குள் வரும் மனையிடம் செல்லம் இன்று நீ சமைக்க வேண்டாம்.. நான் சர்பரைஸாக உனக்காகச் சமைத்து வைத்து இருக்கிறேன்.

ம.த மனைவி :அட என்னங்க நீங்க இன்று அலுவலகத்தில் பார்ட்டி அதனால அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்துட்டேன் அதனால்தான் லேட்டு உங்களுக்கு எதை எப்ப பண்ணனும் என்று தெரியக் கூடவில்லை

மதுரைத்தமிழன் :ஹும்ம்


Jan 8 : மதுரைத்தமிழன் :என்னம்மா இன்று கோயிலுக்குப் போகலாமா? இன்று திங்கள் கிழமை சிவனுக்குச் சிறப்புப் பூஜை அபிஷேகம் பண்ணுவாங்க பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்

ம.த மனைவி :அட எங்க இப்படி அலையிறீங்க நீங்கக் கோயிலுக்கு வருவதே அங்க வரும் பெண்கள் சேலை கட்டி வருவதைப் பார்ப்பதற்க்குதானே.. சும்மா கம்முனு வீட்டில் இருங்க நான் போய்விட்டு வந்துடுறேன்

மதுரைத்தமிழன் :ஹும்ம்


Jan 9. ம.த மனைவி :அலுவலகத்தில் இருந்து தாமதமாக வரும் மனைவி வீட்டிற்குள் நுழைந்ததும் என்னங்க ஏன் எல்லாம் இடத்திலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைச்சிருக்கீங்க.. பவர் கட்டா என்ன?

மதுரைத்தமிழன் :இல்லைம்மா வீடு பார்க்க ரொமாண்டிக் இடம் மாதிரி இருக்கட்டும் என்றுதான் இப்படிச் செய்தேன்

ம.த மனைவி :அடச்சீ காசை கரியாக்குவதிலே இருக்குறீங்க லைட்டை போட்டு முதலில் எல்லாம் மெழுகு வர்த்தியையும் அணையுங்கள் அது எல்லாம் எம்ர்ஜன்சி சமயத்தில் உபயோகப்படுத்துவதற்காக வாங்கி வைத்தது...

மதுரைத்தமிழன் :ஹும்ம்

Jan 10 ; மதுரைத்தமிழன் :அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனைவியைப் பார்த்ததும் ஏய் செல்லப் பொண்டாட்டி இங்க பாரு நான் உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன் என்று?

ம.த மனைவி :என்ன வாங்கி வந்திருக்கீங்க?

மதுரைத்தமிழன் :விக்டோரியா சீக்ரெட்டில் இருந்து உனக்கு இன்னர்வேர் வாங்கி வந்து இருக்கிறேன்.

ம.த மனைவி :என்னங்க உங்களுக்கு அறிவு கொஞ்சம் கூட இல்லையா அதெல்லாம் விலை ஜாஸ்தி.. உள்ள போடுவதற்கு அவ்வளவு விலை கொடுத்து யாரும் வாங்குவாங்களா என்ன காசை கரியாக்குவதிலே இருக்கிறீங்க முதலில் நாளைக்கு அதையெல்லாம் ரிட்டன் பண்ணுங்க... நான் நாயூடுஹாலில் வாங்கிய இன்னர்வேரே நிறைய அதுவும் புதுசாவே இருக்கிறது

மதுரைத்தமிழன் :ஹும்ம்ம்ம்

Jan 11 மதுரைத்தமிழன் :என்னம்ம்மா நீங்க வாக்கிங்க் போன சமயத்தில் உன் வேனை பார்த்தேன் அதில் பெட்ரோல் ரொம்பக் குறைவாக இருந்துச்சு அதனலா பெட் ரோல் புல்லாக நிரப்பி வேனும் கொஞ்சம் டர்ட்டீயாக இருந்ததால் அதை நல்லா வாஷ் பண்ணி கொண்டு வந்து நிறுத்திட்டேன்

ம.த மனைவி : என்னங்க எனக்குனே உங்க அம்மா நேர்ந்துவிட்ட மாதிரி வந்து சேர்ந்து இருக்கிங்க வேனில் பெட்ரோல் குறைவாக இருப்பது எனக்குத் தெரியாதா என்ன? என் தோழி குடும்பத்தோடு நீண்ட் தூரம் பயணம் செய்யவிருப்பதால் வேனை இரவலாகக் கேட்டாள் அவ எப்போதுமே நம் வேனில் பெட்ரோல் நிரப்பிக் கொடுத்தாலும் வேனை திருப்பித் தரும் போது காலியாகத்தான் வைத்துத் திருப்பிக் கொடுப்பாள் அதனால்தான் இன்று அவளிடம் கொடுக்கும் போது எம்டியாகத் தரலாம் என்று நினைத்து வைத்திருந்தேன்  இப்படிச் செய்துவிட்டு வந்திருக்கீங்களே

ஹும்ம்

Jan 12 மதுரைத்தமிழன் :என்னம்மா இன்று வெள்ளிக்கிழமை அதனால இன்று நம்ம இரண்டு பேரும் கண்டிப்பா வெளியே போய்ச் சாப்பிட்டுவிட்டு அப்படியே மூவி பார்த்துவிட்டு வருமோம்

ம.த மனைவி :சரி சரி காரை எடுங்க அப்படியே சரவண பவனுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு ஜாலியாக வருவோம்

மதுரைத்தமிழன் :என்னது சரவணபவனா அதற்கு நம்ம ப்ரிஜ்ஜில் மிச்சம் இருக்கிறதைச் சாப்பிட்டுவிட்டு வீட்டிலே நல்ல மூவியாகப் பார்க்கலாமே

உங்களைக் கட்டிகிட்டதற்குப் பதில் ஒரு அம்பியைக் கட்டி இருந்தால் என் வாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்கும்

ஹும்ம்


Jan 13 சனிக்கிழமை என் மனைவியின் தோழி வீட்டிற்கு விருந்திற்குச் சென்றோம். தோழியின் கணவர் என்ன குடிக்கிறீங்க காப்பி டீ ஜூஸ் என்றார் நான் பதிலுக்கு ஒன்றும் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல அவர் 'தண்ணி'யை வற்புறுத்திக் குடிக்க வைத்தார்.. தண்ணீர் என்றது சரக்கு என்று நினைத்துவிட வேண்டாம் அவர் கொடுத்தது வெறும் தண்ணீர்தான். பாவி மனுஷன் அவர் ஒரு குடிகாரர் அவர் வீட்டிலும் சரக்குப் பாட்டில்கள் இருந்தாலும் காப்பி டீ வேண்டாம் என்றதும் சரக்கைத் தருவார் என்று பார்த்தால் வெறும் பச்ச தண்ணியைத் தருகிறார். ஒரு வேளை அவங்க வீட்டம்மா சரக்கு எதுவும் என் தோழியின் கணவருக்குக் கொடுத்து மானத்தை வாங்கிவிடாதீர்கள் என்று ஒரு வேளை சொல்லி இருக்கலாம். எங்கவீட்டும்மாவும் என் தோழியின் கணவர் சரக்குக் குடிக்கக் கொடுத்தாலும் நீங்கள் அதை வாங்கிக் குடித்து மானத்தை வாங்கிவிடாதீர்கள் என்று சொல்லித்தான் கூட்டிப் போனார்கள். ஹும்ம்


சரி பச்ச தண்ணியைக் குடித்தவாறே என் மனைவியும் அவர் தோழியும் ரகசியமாக என்ன பேசுகிறார்கள் என்று பார்த்தால் என் செல்லப் பொண்டாட்டி என் கணவர் சுத்த மோசம் அன்பா ஆதரவா பேசமாட்டேங்கிறார் அப்ப அப்ப அணைத்து நாலு நல்ல வார்த்தை சொல்ல மாட்டேங்கிறார்.அலுவலகத்தில் இருந்து லேட்டாக வரும் நாட்களிலும் ஏதாவது சமைத்து வைத்துச் சந்தோஷப்படுத்த மாட்டேங்கிறார் ரொமாண்டிக்கா இருக்கமாட்டேன்கிறார் என்று பலவித கம்பெளையண்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார் பதிலுக்கு அவரின் தோழியும் அவரின் கணவரைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஹும்ம் ஆண்கள் நாங்கள் இருவரும் பச்சை தண்ணியைக் குடித்துக் கொண்டு வார இறுதியைச் சந்தோஷமாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்

இப்ப சொல்லுங்க மனைவி அமைவதெல்லாம் வரம் என்று சரக்கு அடித்துக் கொண்டே எழுதியவன் எங்களைப் போல அடிவாங்கிய கவிஞனாகவே இருப்பான்

என்ன நான் சொல்லுறது சரிதானே


Jan 13 மதுரைத்தமிழன் :சர்ச்சிற்குப் போய் ஏசப்பா எனக்கொரு புதுப் பொண்டாட்டி வேணும் அதுவும் அமெரிக்கப் பெண்ணாக வேண்டும் என்றுதான் வேண்ட வேண்டும் அப்படி இல்லையென்றால் இந்தியாவிற்குப் போய் நித்தியானந்தா சுவாமிக்குப் போட்டியாக ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும்.. ஹும்ம்ம் வேற வழியில்லை இந்த மதுரைத்தமிழனுக்கு

அன்புடன்
மதுரைத்தமிழன்

18 comments:

  1. ஹாஅ ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் :) இதிலிருந்து என்ன தெரியுதுன்னா.... இன்னும் மனைவியைப் புரியவே முடியல்ல ட்றுத்தால:).. ஹையோ ஹையோ:)

    ReplyDelete
    Replies
    1. மனைவின்னு சொல்லுறதுக்கு பதிலாக தமிழ் பெண்களை என்று சொன்னால் இங்கு பொருத்தமாக இருக்குமல்லவா? வேண்டுமென்றால் தேம்ஸ் நதிக்கரையோர பெண்ணிற்கு விதிவிலக்கு அளிச்சிடலாம்

      Delete
  2. உங்களை நினைக்க பாவமாத்தான் இருக்கு:)... விடா முயற்சி பண்ணிட்டே இருக்கிறீங்க:).. இதெல்லாத்தையும் விட்டுப்போட்டு முதலில் மாமியோடு 2 மணித்தியாலமா இருந்து பேசி அவட விருப்பு வெறுப்புக்களைக் கண்டறிந்து... கூலாக்கிவிட்டு... பின்பு இந்த அமெரிக்க கல்யாணம் பற்றிக் கேட்டுப் பாருங்கோவன்:)..

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மனைவியிடம் 2 மணித்தியலாமா பேசி காதை புண்ணாக்கி 5 நிமிஷம் சந்தோசமாக இருப்பதற்கு பதிலாக அமெரிக்க பெண்ணிடம் 2 வார்த்தை பேசி 5 நிமிஷம் சந்தோஷமாக இருந்து 10 நிமிஷத்தில் அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடலாம். இதெல்லாம் உங்களுக்கு தெரியாது ஹீஹீ

      Delete
  3. ஹாஆஆஹாஆஹாஆஆ:) ஹையோ பாவம்னு சொல்வேன்னு மட்டும் நினைக்காதீங்க :)

    என் மெயில் ஐடியை உங்க வீட்டம்மாகிட்ட குடுத்தீங்கன்னா நான் நாலு நல்லவார்த்தை அந்த பிள்ளைக்காதில் போட்டு வைப்பேன் அட்வைஜ் :) அப்புறம் பாருங்களேன் நீங்க இப்படி பதிவே போட மாட்டிங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஹலோ எங்க வீட்டம்மா இந்த பக்கம் தலையெடுத்து வைக்கமாட்டார்கள் என்பதால் ஏதோ பதிவுகள் எழுதி கிறுக்கி கொண்டு ஜாலியாக இருக்கிறேன் அதையும கெடுக்க முயற்சி செய்கிறீர்களே இது நியாமா? நீங்க கேட்டு நான் மெயில் ஐடி கொடுத்தால் மலர்வளையம் வாங்கி கொண்டு என் கல்லறைக்குதான் நீங்கள் வர வேண்டி இருக்கும். அதன் பின் நீங்கள் தேம்பி தேம்பி அழுவீங்க அந்த கஷ்டத்தை உங்களுக்கு கொடுக்க விரும்பவில்லை.

      Delete
  4. இங்கே பாருங்க ட்ரூத் :) தமிழ்நாட்டு பொண்ணுங்க மாதிரி இல்லை அமெரிக்க பொண்ணுங்க எதுக்கும் 100 தரம் யோசிச்சி முடிவெடுங்க :)

    ReplyDelete
    Replies
    1. ஹும்ம்ம் யோசித்து பார்க்கிறேன் தமிழ் பெண்கள் கோபப்பட்டால் பூரிக்கட்டையை எடுப்பார்கள் ஆனால் அமெரிக்க பெண்கள் துப்பாக்கியை அல்லவா எடுப்பார்கள்... என்னம்மா இப்படி கருத்து போட்டு மனசில் கிலியை உண்டு பண்ணுறீங்க.. ஒருத்தன் ஜாலியாக இருப்பது உங்களுக்கு பொறுக்காதோ.....ஹும்ம்

      Delete
    2. ஏஞ்சல் நான் நினைச்சத நீங்க சொல்லிட்டீங்க!! கூடவே மத வின் வரிகளையும் சேர்த்துச் சொல்ல நினைச்சேன்..அதான் உங்க மனைவியாவது பூரிக்கட்டைதான் ஆனா அ பெ எல்லாம் துப்பாக்கிய எடுப்பாங்கனு சொல்ல நினைச்சத ரெண்டு பேருமே சொல்லிட்டீங்க....ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  5. Be Careful of what you wish for Mathura.. You might get it...

    ReplyDelete
    Replies
    1. ரியலி அவ்வளவு அதிர்ஷ்டசாலியா நான் ஹீஹீஹீ

      Delete
  6. படித்தேன். ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இப்பூடி எல்லாம் எஸ்கேப் ஆகக்கூடாது:) ட்றுத்துக்கு ஒரு ஐடியாக் குடுங்கோ:)) ஹா ஹா ஹா:)..

      Delete
  7. வணக்கம் சகோதரரே!

    அடடா... மதுரைக்கு வந்த சோதனையோ?
    இல்லையில்லை மதுரைத் தமிழனாகிய உங்களுக்கு வந்த வரவிருக்கிற சோதனையோ?...:))

    படித்தேன்! ரசித்தேன்!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  8. துளசி: ஹா ஹா ஹா ஹாஹா....ரசித்தேன்...

    கீதா:ஹா ஹா ஹா ஹா அது சரி ம த மனைவி வரிகள் எல்லாம் எங்க போகணுமோ அங்க போயாச்!!! ம தன் வுக்கு (இப்படித்தான் நாங்க ஷார்ட்டா சொல்லிக்குவோம்...ஆனா இங்க எழுதறதுஇல்ல..இனி இப்படித்தான் எழுதப் போறேன்...ஹிஹீ) பூரிக்கட்டை அடி வாங்கி ரொம்ப நாளாச்சு போல!!! அது நல்லாவே தெரியுது. அதான்....

    ReplyDelete
  9. ஹா... ஹா... ரசித்தேன்...
    அண்ணி அடிச்சி ஆடுறாங்க... நீங்க நித்யானந்தம் மாதாக்கள் வீடியோ பார்த்து பொண்ணு தேட ஆரம்பிச்சிட்டீங்க....
    வாயைத் திறந்தா என்னமா பேசுதுங்க...
    அதுகளா வேண்டும் உங்களுக்கு...?

    ReplyDelete
  10. சரி ......வேறே நாட்டில் இதை விட நல்ல வேலை உங்களுக்குக் கிடைத்தால் ?

    ReplyDelete
  11. ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு .........மேய்க்க

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.