Monday, February 6, 2012



எழுத்துலகில் "சாரு"  ஒரு தீப்பொறி ஆறுமுகமா ????

சிறந்த எழுத்தாளாரான  எஸ்.ராமகிருஷ்ணன் கனடா நாட்டின் இயல் விருது பெற்றிருக்கிறார்.  (Tamil Literary Garden of Toronto, Canada has Honored Tamil Writer S. RAMAKRISHNAN with ‘Lifetime Literary Achievement Award‘ in Tamil for the year 2011, “IYAL VIRUDHU” as pronounced in Tamil, for his life time achievement in literary contribution to the Tamil Literature. As you are probably aware, starting in 2001, the award is given annually to a person whose contribution to Tamil literature is valuable, substantial and deeply influential. The awards committee, reviewing all the nominations, takes into consideration all aspects of Tamil Studies, including scholarship, pedagogy, and translations etc., He is the eleventh recipient of this prestigious international award ) இதற்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர்கள், திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

ஒரு தமிழன்  வேறு ஒரு நாட்டில் உள்ளவர்களால் பார்க்கப்பட்டு அவன் எழுத்து ரசிக்கப்பட்டு அதை பாராட்டி அவர்கள் அவார்டு கொடுத்து உள்ளார்கள் என்றால் அதைபார்த்து நம் தமிழ் எழுத்தாலர்கள் சந்தோஷப்பட வேண்டும். ஆனால் தமிழனுக்கு என்ற ஒரு குணம் உண்டு அடுத்தவன் பாராட்டப்பட்டால் அதை கண்டு பொறாமையால் பொசுங்கி போவது. அதைத்தான் நவின இலக்கியவாதி என்று தன்னைதானே புகழ்ந்து கொள்ளும் குடிகார இலக்கிய வாதியான சாரு பொறாமையால் பொங்கி எழுந்து கண்டபடி பேசியுள்ளாதாக இணையத்தில் தகவல்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.

சாரு நிவேதிதா. அவர் எழுதிய எக்ஸைல்  புத்தகத்தின் விமர்சனக் கூட்டத்தை சென்னையில் நடத்தினர்.இந்த விழாவில் நிவேதிதா பேசுகையில், ஒரு எழுத்தாளன் அதிக வாசகர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி விட்டார். அவரை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கில், நூல் வெளியீட்டுக் கூட்டங்களையும், விமர்சனக் கூட்டங்களையும் நடத்தும் போக்கு, தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் நிலவுகிறது. அதற்காக, சினிமா நடிகர்களைக் கொண்டு பாராட்டுக் கூட்டங்களை நடத்திக் கொள்கின்றனர்.

தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் என, சினிமா நடிகர் சொல்லும் அளவுக்கு, நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கை, தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தவில்லை என்று பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் கூறியதாவது காமத்தை மையமாகக் கொண்டு நாவல்களை எழுதுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. இன்றைய இளைஞர்கள், காமத்தால் சீரழியும் போது அதை எழுதாமல் இருக்க முடியாது.ஆங்கிலப் புனை கதைகளுக்கு இருக்கும், வரவேற்பு தமிழ் புனை கதைகளுக்கு இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களைத் தெரிவித்தார் நிவேதிதா

ராமகிருஷ்ணன் அவர்கள் ரஜனி என்ற நடிகரால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இந்த அவார்டு கிடைக்கவில்லை. இது அவரது எழுத்து திறமைக்கு கிடைத்த அவார்டு . அந்த அவார்டு விழாவில் பல அறிஞர்களும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அவர் நண்பர் பலரில் ஒருத்தர்தான் ரஜினிகாந்த். அவர் ஒரு புகழ் பெற்ற நடிகர் அதனால் அவர் கலந்து கொண்ட இவ்விழா எல்லா மக்களையும் சென்று அடைந்தது. இதில் என்ன தவறு இருக்க முடியும்.

ஆனால் இதிலும் தவறை கண்டுபிடித்தார் சாரு . இவர் பெயர் சாரு என்பதற்கு பதிலாக சேறு என்று இருந்திருக்கலாம்.குடிகாரனான இவர்  தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் என, சினிமா நடிகர் சொல்லும் அளவுக்கு, நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கை, தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தவில்லை என்று.பேசுகிறார். நான் கேட்கிறேன் நடிகனும் மனிதந்தானே அவன் எழுத்தை படித்துவிட்டு பாராட்டுவது என்ன உலகமாக குற்றமா?நாளையே ஜெயலலிதா இவரை கூப்பிட்டு இவரது எழுத்தை பாராட்டி ஒரு விழா நடத்தினால் நீ ஒரு முன்னாள் நடிகைதானே உனக்கு எல்லாம் என்ன தெரியும் என்று மறுத்துவிடுவாரா என்ன? இன்று உள்ள நடிகர்கள் பலரும் கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கியவர்கள் தான் அவர்களுக்கு நடிக்க மட்டுமல்ல மற்று எல்லாம் நன்கு தெரியும். அவர்களை மதிப்பு குறைத்து எடை போட வேண்டாம்.

முடிந்தால் சக எழுத்தாளன் பெற்ற அவார்டுக்கு அவனை பாராட்டி எழுதுங்கள் அத்ற்கு பதிலாக குடித்து விட்டு உங்கள் வாசகர்களோடு சேர்ந்து பொறாமை தீயில் வெந்து வாய்க்கு வந்தபடி உளராதீர்கள்


விழாவில் ரஜினி அவர்கள் பேசியவை இங்கு வீடியோவடிவில் உங்களுக்காக




அவர் பெற்ற அவார்டுகள் :

He has written and published five novels, ten collections of short stories, 24 collections of articles, four books for children, three books of translation and nine plays. He also has a collection of interviews to his credit.
Among the many important awards won by him are Tagore Litearay Award for his novel Yamam. Sangeetha Nataka Academy Award for Best Young playwright, Iyal Award from Canada, Award for Best Novel from Government of Tamilnadu, Award of Literary Thoughts, CKK Literary Award, Best Novel Award of Progressive Writers’ Union, Jnanavaani Award and Young Achiever Award, Periyar Award. Salem Tamil Sangam award and also the winner of Kannadasn Award.
Three Doctorates and 13 M.Phil. Degrees have been awarded to scholars for researching into his writings. His books have been prescribed as part of syllabi of 2 Universities and 9 Autonomous Colleges.

மிக  எளிமையானவரும் பண்பாளருமான எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களை பதிவாலர்கள் சார்பில் நான் அவரை வாழ்த்துகிறேன்

எழுத்துலகில் சாரு ஒரு தீப்பொறி ஆறுமுகம்
சாரு நிவேதிதா எப்போதுமே சர்ச்சையாகப் பேசக் கூடியவர், சர்ச்சையான எழுத்துக்களை எழுதுபவர். சமூகம் ஒரு பக்கம் சிந்தித்தால் இவர் கோணல் மாணலாக மட்டுமே சிந்திப்பவர். மேலும், தன்னுடைய எழுத்தால் ஈர்க்கப்பட்டு நட்பு பாராட்டிய ஒரு பெண்ணிடம், அநாகரீகமாக, அசிங்கமாக சாட்டில் வாசகங்களை வெளியிட்டு அம்பலப்பட்டு அசிங்கப்பட்டவர் இவர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.. நினைவு இல்லாதவர்கள் நெட்டில் தேடினால் இவரைப்பற்றி பல தகவல்களை அறியலாம்


இதுவரை படிக்காதவர்களுக்கு

குடிப்பவன் பேச்சு இலக்கியமாகி போச்சு

6 comments:

  1. 'ரஜினி' கலந்து கொண்ட விழாவில் ரஜினிக்குள் இருந்த இலக்கியவாதி நம் கண்ணுக்கு தெரிந்தார். 'சாரு" கலந்து கொண்ட விழாவில் 'சாருநிவேதா" என்கின்ற குடிகார நடிகன் தெரிந்தான்,என்பதே உண்மை.

    ReplyDelete
  2. சாரு நிவேதாவை எல்லாம் எப்படி ஒரு இலக்கியவாதியாக ஏற்றுக் கொள்ளமுடியும்? அவர் எழுதுவதற்கு பெயர் இலக்கியமா?.....விட்டு தள்ளுங்கள்.....

    ReplyDelete
  3. நல்ல ஒரு தரமான இசைக் கச்சேரி நடைபெறுகையில்
    இசை ஞானம் அற்றவன் பொறாமை குணம் உள்ளவன்
    அனைவரின் கவனத்தைக் கவர ஒரு தகரத்தைத் தட்டினால் போதும்
    அதுபோல் இவர்கள் பேச்சையெல்லாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை
    அருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. கக்கூஸ் எழுத்தாளர் சாருவின் பேச்சில் கக்கூஸ் மனமே இருக்கும்.

    ReplyDelete
  5. //எழுத்துலகில் சாரு ஒரு தீப்பொறி ஆறுமுகம்சாரு நிவேதிதா எப்போதுமே சர்ச்சையாகப் பேசக் கூடியவர், சர்ச்சையான எழுத்துக்களை எழுதுபவர். சமூகம் ஒரு பக்கம் சிந்தித்தால் இவர் கோணல் மாணலாக மட்டுமே சிந்திப்பவர்//

    இதற்கு மேலே என்ன சொல்ல முடி்யும் சர்ருவைப் பத்தி. எல்லாமே இதில் அடங்கி விட்டது.

    ReplyDelete
  6. இவர் பெயர் சாரு என்பதற்கு பதிலாக சேறு என்று இருந்திருக்கலாம்.

    இது கரெக்ட்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.