Wednesday, October 7, 2020

'சங்கி; பிராமணர்களின் இருமுகங்கள்

  
The two faces of the  'sanki, Brahmins



 

The two faces of the  'sanki, Brahmins




உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில், சமீபத்தில், தலித் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடும் பாலியல் தாக்குதலுக்கு ஆளான அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, அவசர அவசரமாக நள்ளிரவில், அவரது உடலை காவல்துறை எரியூட்டினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயத்தைப் பிராமணப் பக்தால்ஸ் எப்படிப் பார்க்கிறார்கள் என்று பார்ப்போம்... ஒரு சாம்பிளுக்கு ஒரு பிராமணப் பக்தால்ஸ் எழுதியை அப்படியே தருகிறேன். இதை எழுதி வெளியிட்டது உஷா என்ற ஐயங்கார்  பெண்..
 

2 வாரத்திற்குள் 8 பாலியல் வன்புணர்வு ராஜஸ்தானில் ! காங்கிரஸ் ஆட்சி அங்கு! அதனால் எல்லோரும் அமைதி!பாலிவுட் என்கிற' PRO பாகிஸ்தான்' பிரபலங்கள் நிறைந்த நகரத்தில் இதுவரை தெரிந்து 15 பேர் மர்மமான சாவு !எஸ்எஸ்ஆர்& திஷா உள்பட..பிரபலங்கள், காங்கிரஸ் யாருமே குரல் கொடுக்கவில்லை.உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாதத்திற்கும் மதமாற்றத்திற்கு ம் சரியான நடவடிக்கைகள் எடுத்து போதை மருந்துகளைப் பிடித்துக் குண்டர்களை என்கவுண்டர் செய்ததால்... உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இன்னும் அதிகமாக..யோகிஜி ஆட்சியை வீழ்த்துவதற்காகச் சென்சேஷனல் பரபரப்பாக ஆக்குகிறார்கள்!


எக்கச்சக்கமாகப் போதை மருந்து பிடிக்கப்பட்டது உத்தரப்பிரதேசத்தில்! தொடர்ந்து குண்டர்கள் என்கவுண்டரில் போடப் படுகிறார்கள்.
இவை போதாதா ஆத்திரத்தைக் காட்ட? அதனாலேயே இலக்குகளைப் பிடித்துப் பாலியல் வன்முறை செய்து விட்டு பிறகு கொன்று விட்டு
பிறகு அதை மிகவும் சென்சேஷனல் ஆக்க வேண்டுமென்று. கீழ்த்தரமாக உடலைச் சிதைத்து... பரபரப்பு ஆக்குகிறார்கள்!!யோகி ஆதித்யநாத் சீர்திருத்தங்கள் கொண்டு வந்து உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்குத் தீவிரவாத இயக்கங்கள் அவ்வளவு எளிதாகப் பின்வாங்கி விடுமா என்ன?? பயங்கரவாதம் தீவிரவாதம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆணி வேர் ஊன்றி விருட்சமாக வளர்ந்து இருக்கிறது .அதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அரசுக்கும் சவால்கள் கொடுக்க வேண்டுமென்று சதித் திட்டம் தீட்டிப் பரபரப்பான கொலைகளையும் பாலியல் வன்புணர்வு நிகழ்வுகளும் நடத்திக் கொண்டே தான் இருப்பார்கள். இனியாவது மக்கள் இதற்கெல்லாம் செவி கொடுக்காமல் கல் நெஞ்சத்துடன் விலகி இருந்து கவனிக்க வேண்டும். அவரவர் வீட்டுப் பெண்களைக் குழந்தைகளைக் கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்ளுங்கள் .அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்.



ஒரு தலித் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவசர அவசரமாக நள்ளிரவில், அவரது உடலை காவல்துறை எரியூட்டினர். உஷா அவர்களும் ஒரு பெண்தானே இறந்த பெண்ணிற்காக ஒருவரி வேதனைப்பட்டு எழுதி இருக்கிறாரா என்ன? இப்படிச் செத்தது அய்யங்கார் ஆத்துப் பொண்ணாயிருந்தாலும் இப்படிதான்  அவ பேசுவேளா என்ன?


இவரது பதிவைப் படிக்கும் போது வருத்தத்தை அளிக்கிறது. எங்குமே நடக்கக் கூடாது என்பது தான் நிலைப்பாடாக இருக்க வேண்டுமே தவிர அங்கு நடக்கிறது. இங்கும் நடந்தால் என்ன என்று கேட்பது ரொம்ப வலிக்கிறது. எங்கே போகிறோம்?

இவரைப் போலப் பல பக்தாள்ஸுக்கும் கொடூரமாக ஒரு பெண் கொல்லப்பட்டதுபற்றிக் கவலையில்லை...அந்த மொட்டை ஆட்சியைக் குறை சொல்றாங்களேன்னு கவலை.... இப்படி இருந்தால் நாடு விளங்கிடும்....ஒரு உயிரோட வலியை புரிஞ்சுக்கத் தெரியாத ஜென்மங்கள்தான் இங்கே ராமா சங்கரான்னு ஆன்மீக வேஷம்போடுது...


ஏதாவது பதிலுக்குச் சொன்னால் காங்கிரஸ் இதை அரசியல் ஆக்குகிறது என்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவர்கள், சுஷ்மா சுவராஜ், ஸ்ம்ரிதி இராணி நிருபயா கற்பழிப்பு, மரணம் தொடர்பாகச் செய்தது தொடர் போராட்டங்கள் அரசியல் ஆதாயம் இல்லாமல் வெறும் மக்களுக்கான தியாகச்செயல்களா அது?அதுவும் இது போன்ற கோர நிகழ்வுதானே?அப்போது எந்த ஆளும் கட்சியும் அவர்களைத் தடுக்கவோ, இடையூறோ அப்போது செய்யவில்லையே...

ராஜஸ்தானில் கற்பழிப்புக்கள் நடை பெறுகிறதாம் .ராஜஸ்தானில் கற்பழிப்புக்கள் நடந்தபொழுது அங்குள்ள பிஜெபி என்ன செய்தார்கள் என்று கேட்டால்? அதற்கு இந்தப் பக்தால்ஸ் பதில் ஏதும் சொல்ல மாட்டார்கள்


வேளாண்மைக்காக புதிய சட்டங்கள் அவசர அவசரமாக கொண்டு வந்து ஜனாதிபதி ஒப்பம் வாங்கியவர்களுக்கு இந்த பாலியல் பலாத்காரம் செய்பவர்களின் ஆண் உறுப்பை அறுத்து எறிய அவசர சட்டம் கொன்டு வர முடியாதா என்ன? காங்கிரஸுக்கு மாற்றாக புல் மெஜாரிட்டியுடன் இருப்பவர்கள் இன்றைய ஆளும் கட்சியினதானே.. இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் யார் எதிர்க்கப் போகிறார்கள்



தலித் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் அது இவர்களுக்குத் தவறாகப் படவில்லை ஆனால் தமிழகத்தில் அதே வயதுள்ள ஒரு பிராமணப் பெண்ணைத் தலித் இனத்தவர் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டதும் அவர்களுக்குப் பற்றி எரிகிறது...


உடனே உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து.. அதக்கு 19 வயசுதான் ஆச்சுன்னு வச்சிக்கோங்க.. அதை ஒரு 39 வயசான தடியன் காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்டால் பரவாயில்லையா என்று பதிவிடுகிறார்கள். ஆனால் அது போல 19 வயது இளம்பெண் ஒருவர், நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் போது உங்களுக்கு இது போலப்  பொண்ணு இருந்தால் என்று மட்டும் எழுத அவர்களால் முடிவதில்லை ஏன் கண்டனம் செய்யவும் முடியவில்லை

இது போல உங்க சாதிப் பொண்ணை மட்டும்தான் இப்படிக் கல்யாணம் பண்ணிக்கிறாங்களா என்ன? எல்லாச் சாதிக்காரப் பொண்ணுங்களையும்தானே இப்படிக் கட்டிண்டு போறா. அதை எல்லாம் பாத்துட்டு சும்மாதானே இருந்தேள் எனறு கேட்டால பதில் சொல்ல மாட்டேங்கிறாள்/

தங்கள் சாதியைச் சார்ந்த பெண் இப்படிப் பண்ணிக் கொண்டதும், எரியும் எரிச்சலில் ஒன்று அந்தத் தலித் ஆளைக் காறித் துப்புவது அல்லது அந்தப் பெண்ணின் குடும்பத்தைத் துப்புவது... இதற்கு முன்னால் பிராமணக் குடும்பங்களில் வேறு சாதியைச் சார்ந்தவர்களை அல்லது வேறு மதத்தைச் சார்ந்தவர்களை யாருமே திருமணம் செய்து கொள்ளவில்லையா என்ன?

பலர் அந்தக் குருக்கள் பண்பாட்டைக் கலாச்சாரத்தை அந்தப் பெண்ணிற்குக் கற்றுக் கொடுக்கவில்லையாம்... அப்படிச் சொல்லுபவர்கள் யார் என்று பார்த்தால் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் ஊடகங்களுக்குத் தங்கள் பெண்களை அனுப்பிப் பாடச் செய்து சூப்பர் சிங்கர்களாக ஆக்கச் செய்யும் பெற்றோர்கள்தான்.. அடேய் முதலில் உங்கள் பின்பக்கத்தில் உள்ள அழுக்கைப் பாருங்கள் அதன் பின் அடுத்தவனைப் பாருங்கள்.

இப்படிச் சொன்னால் உடனே இதில் சாதி, மதம் பிரச்சனை எதுவுமில்லை சார். வயசுதான் காரணம் என்கிறார்கள்.... 19 வயது சிந்திக்கத் தெரியாத வயது என்கிறார்கள் அதுவும் பிராமணப் பெண்ணிற்கு இன்றைய உலகில் இப்படிச் சொன்னால் சிரிக்கத்தான் தோன்றுகிறது... 19 வயதுள்ள ஒரு பிராமண இனப் பெண்ணால் சிந்திக்க முடியவில்லை என்றால் அது அந்த இனத்திற்கே அவமானம்தான். இனிமேலாவது மதத் துவேஷத்தை மட்டும் சொல்லி மூளைச் சலவை செய்வதற்குப் பதிலாக உங்கள் வீட்டுப் பெண்களுக்குச் சிந்திக்க இளம் வயதிலே கற்றுக் கொடுங்கள் ஒரு தலித் இளைஞன் உங்கள் வீட்டுப் பெண்ணிற்குப் பெண் விடுதலைகளை, கற்றுத்தந்து அறிவுஜீவித்தனமாய்ப் பேசி, மூளைச் சலவை செய்துவிட்டான் என்று வெட்கம் கெட்டுச் சொல்லித் திரியாதீர்கள் ( ஒரு தலித் இளைஞன் 19 வயது பெண்ணை மணந்தது குற்றம் என்றும் சொல்லும் நீங்கள் ஒரு ஆளுநர் இளம் வயது கல்லூரிப் பெண்களைப் பயன்படுத்திய போது அவருக்குச் சாதகமாக மூட்டு கொடுக்க உங்களுக்கு எப்படி முடிந்தது. அதுமட்டுமல்ல சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பள்ளி ஆசிரியை தன் வகுப்பில் படித்த இளம் மாணவனைக் கல்யாணம் செய்து கொண்ட போது கண்டனம் தெரிவிக்காமல் சிரித்து மீம்ஸ் போட்டு ரசித்தவர்கள்தானே நீங்கள் அப்போது உங்கள் குரலை உயர்த்தாமல் இருந்தது எதனால்?)

உங்கள் சமுகத்தைச் சார்ந்த பெண்கள் அதிக அளவு வேற்றுச் சமுகத்தைச் சார்ந்தவர்களைத் திருமணம் செய்வது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. காரணம் இன்னும் பழைய பஞ்சாங்கத்தைத் தூக்கி பழம் புராணம் இன்னும் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பதால்தான். அதனால்தான் பல பிராமண இளைஞர்களில் பலர் வயது முதிர்ந்தும் இன்னும் கல்யாணத்திற்குப் பெண் கிடைக்காமல் தவிக்கிறார்கள்

உங்கள் சமுகத்தைச் சார்ந்த பண்பாட்டைப் பழக்க வழக்கத்தைக் காத்து வந்து இந்த ஏழைக் குருக்களுக்கு உங்கள் சமுகத்தைச் சார்ந்தவர்கள் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் உதவி இருந்தால் வேறு சமுகத்தைச் சாந்தவன் அந்த வீட்டிற்குள் உதவுவதாக நுழைந்து இருக்க முடியுமா?முளைச் சலவை செய்து இருக்க முடியுமா என்ன?


many brahmins particularly men are blaming either the girl or the father. That is the kind of support poor priests have Now


இனிமேலாவது சங்கிகளாக இருந்து முட்டுக் கொடுக்காமல் புத்திசாலித்தனமாகச் செயல்படுங்கள்


டிஸ்கி: இந்தப் பதிவு சங்கிகளாக இருக்கும் பிராமணர்களுக்காக மட்டுமே எழுதப்பட்டது... மற்றவர்களுக்காக அல்ல. மற்ற பிராமணர்கள் இன்று போல என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.