Saturday, October 17, 2020

 இவர்களின் மூளைகளை சிறப்பாக பாதுகாத்துதான் வைக்க வேண்டும் 

 

Edappadi and  panneer selvam



ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி மிகத் திறமையாக ஆட்சி செய்து வருகிறார் என்று படித்த மகா ஜனங்கள் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்கள்.. அப்படி என்ன சிறப்பாகச் செயல்படுகிறார் என்றால் நான்கு ஆண்டு ஆட்சியில் இருப்பதே மிகச் சாதனையாகச் சொல்லுகிறார்கள்.. மொத்த தமிழகத்தையே மோடியின் காலில் வைத்துவிட்டு, அவர் போடும் ஆட்சி பிச்சையால் தமிழகத்தில் முதல்வராக இருப்பதுதான் சாதனையா என்ன? ஆமாம் என்றால் இப்படிப்பட்ட ஆட்சிதான் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று வாழ்த்துவதை விட வேற என்ன சொல்ல முடியும்.
 
தமிழகத்திற்கு அல்லது தமிழ் மக்களுக்காக அவர்கள் சார்பாக நின்று மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்துச் சாதித்து இருக்கிறாரா என்ன? அப்படி அவர் எதிர்த்துச் சாதித்து, அதன் பின் தொடர்ந்து முதல்வர் பதவியிலிருந்தால் அதனைச் சாதனை என்று சொல்லலாம் ஆனால் காலை நக்கி ஆட்சியில் தொடர்ந்து இருப்பதுதான் சாதனையா என்ன?

சரி சென்ட்ரலை எதிர்க்க வேண்டாம் .தமிழகத்தில் நடக்கும், நடந்த ஊழல் , திருட்டு மற்றும் கிரிமனல் செயல்களைத்( சிலை திருட்டு, கிராணைட் கொள்ளை, மணல் கொள்ளை, ஜெயலலிதா மரண விசாரணை, பொள்ளாச்சி பாலியல் இப்படி பல..) தடுத்து நிறுத்த நடந்த விசாரணைக்கு நியாயத் தீர்ப்பு அளிக்க எந்தவித முயற்சியாவது செய்தாரா என்றாலும் இல்லை என்று பதில் வருகிறது..

அப்படி இருந்த போதிலும் எடப்பாடியார் சிறந்த ஆட்சியாளர் என்று சொன்னால் உங்களது மூளைகளைச் சிறப்பாகப் பாதுகாத்துத்தான் வைக்கவேண்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. தமிழ்நாட்டு மூளை ஆட்டு மூளையாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆட்டிற்கு இருக்கும் முளை மக்களுக்கு இருந்தாக் கூட போதுமே ஆனால் அது கூட இல்லாதவர்கள் போல அல்லவா இவர்கள் நடந்து கொள்கிறார்கள்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.