Friday, April 17, 2020

@avargal unmaigal
A Great Psychology Guide For Our Mental Health With COVID 19 Pandemic   மன ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த உளவியல் வழிகாட்டி(படித்ததில் பிடித்த பயனுள்ள தகவல்கள்)
 
படித்ததில் பிடித்த பயனுள்ள தகவல்கள் நீங்களும் பயன் பெற இங்கே பகிர்கிறேன்


கொரோனா லாக்டவுன் சமயத்தில் என்ன மாதிரியான மனநலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது பற்றியும் அதை நாம் எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று  இந்த சகோதரி  செல்வநாயகி மயில்சாமி அவர்கள் பேசிகிறார்,


6.03 நிமிடங்களுக்கு மேல் இவர் ஒரு கையேடு  வைத்து பேசுவதை கண்டிப்பாக பார்க்க தவறவேண்டாம் இது இங்குள்ள சைக்காலிஸ்ட் தாயரித்தது இந்த கொரோனோ மாதிரி  வரும் சமயத்தில் மனிதனுடைய் மன உணர்வுகள் என்னவாக இருக்கும் அதில் இருந்து அவனை மீட்டுக் கொண்டு வருவதற்கு அவனுள் இருக்கும் விஷயங்களை கொண்டே தீர்வு காண்பது எப்படி என்பதற்கான ஒரு கையேட்டை உருவாக்கி விளக்கி இருக்கிறார்

படித்த படிக்கும் இளம் வயதினர்களுக்கு இது மிகவும் பயன்படக் கூடியது;

இந்த கையேட்டில்  Fear zone, Learning Zone, Growth Zone  என்று  மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டு அருமையாக விளக்குகிறார்கள் 

மீதி  இந்த வீடியோவை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்


செல்வநாயகி மயில்சாமி அவர்கள்  பல விஷயங்களை சிறப்பாக அலசுகிறா. அவரைத் தொடர விரும்புபவர்களுக்கான பேஸ்புக் முகவரிக்கான லிங்க இது   அவரின் யூடியூப் சேனலான  eNNangaL uNarvukaL seyalkaL EAST and WEST   க்கான லிங்க இது

 சகோதரி  செல்வநாயகி மயில்சாமி அவர்களுக்கு பயனுள்ள தகவல்களை தருவதற்காக எனது பாராட்டுக்கள்.... தொடருங்கள் நன்றி

அன்புடன்
மதுரைத்தமிழன்

16 comments:

  1. இங்கும் மென்ட்டல் ஹெல்த்தில் யோகா சொல்லித்தராங்க .முறையான ஆசிரியர்கள் தான் சொல்லித்தராங்க மருத்துவமனைகள் refer செய்றாங்க . 

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இவர்களை கற்று தருபவர்களாகவே கருதுகிறார்களே ஒழிய அவர்களை தெய்வத்திற்கு ஈடாக மதித்து அவரகளிடம் சரணாகதி அடைவதில்லை

      Delete
  2. ஹாஹா :) மெசேஜ் forwarding எனது ரிலேடிவ்ஸில் சிலர் செய்றாங்க .நான் பார்க்காமலே டிலீட்டுவேன் 

    ReplyDelete
    Replies
    1. எனக்கு போனில் யாரும் பார்வோட் செய்வதில்லை அப்படியே யாரும் செய்தார்கள் ஒரு தட்வை வார்னிங்க் இரண்டாம் தடவை ப்ளாக்தான்

      Delete
    2. செய்றது என் வழி சொந்தம்னா துவைச்சு பிழிஞ்சிருப்பேன் :) எல்லாம் நாத்தனார் இவர் சிஸ்டர்ஸ்  தம்பிங்க :) 

      Delete
  3. அருமையான விளக்கமான காணொளி ..தெளிவா சொல்றாங்க ..நான் போன வாரம் எங்க சர்ச்சில் உள்ள முதியோர் எல்லாருக்கும் (8 பேருக்கு ) போன் கால் செய்து பேசினேன்.அனுபவ பூர்வமா சொல்றேன் அவங்களுக்கு அத்தனை சந்தோஷம் .ஆயிரம் நெகட்டிவிட்டி நம்மை சுற்றி இருக்கும் அதை விட்டுத்தள்ளுவதே நல்லது .நல்லதை மட்டும் கண்ணுக்கு தெரியறமாதிரி பார்த்துக்கணும் இனிமே .மிகவும் சரியான கொள்கை மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் நானும் வளர்த்துக்கணும் :)மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு ஒரு eye opener இந்த காணொளி .நன்றி ட்ரூத் :)இன்னிக்கு என்னமோ தோணிதான் புது போஸ்ட் போட டாஷ்போர்ட் வந்தேன் இல்லேன்னா உங்க பின்னூட்டம் கிடைச்சிருக்காது இந்த பதிவையும் மிஸ் செஞ்சிருப்பேன் .கூடவே எனது கிராஃப்ட் வேலைகளை மீண்டும் துவங்கனும்னு ஒரு உத்வேகம் வந்திருக்கு 

    ReplyDelete
    Replies
    1. நான் இந்த காணொளியை பார்த்து பிடித்ததினால் அதுமட்டும்மல்லாமல் என் கருத்துகளோட ஒத்துப் போனதால் செல்வநாயகி அவர்கலின் அனுமதி பெற்று இங்கே பகிர்ந்து இருக்கிறேன்

      Delete
  4. மிக்க நன்றி மதுரைத் தமிழன். உங்கள் அன்புக்கு மகிழ்ச்சி. Angel என் காணொளி உங்களுக்கும் பயனுடையதாக இருந்தது என அறியும்போது மேலும் இது போல் கொண்டு வர ஊக்கம் பிறக்கிறது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. என் தளத்தில் பதிவிற்கு வரும் கமெண்ட்கள் குறைவாகவே இருக்கும் ஆனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்று வரை அதிகமாகத்தான் இருக்கிறது. அநேக பேர் சைலண்ட் வாசகர்களாக வந்து போய்க் கொண்டிருக்கிறாகள் இங்கே அதனாலே நானும் இங்கே தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்

      Delete
  5. மேலே உள்ளது என் நன்றி. பெயர் வரவில்லை.

    செல்வநாயகி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பேச்சும் கருத்தும் இதுமாதிரியான பயனுள்ள காணொளியும் என்னை கவர்ந்து இருப்பதால் இங்கே பகிர்ந்து இருக்கிறேன் எங்களுக்கு நல்ல கருத்தை கொடுத்து ஊக்கமளிக்கும் உங்களுக்கும் எங்களின் ஊக்கம் கண்டிப்பாக உண்டு

      Delete
  6. செல்வநாயகி அவர்களை அறிமுகப்படித்தியதற்கு நன்றி. இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு காணொளி.

    ReplyDelete
  7. இதற்கு முன் உள்ள பின்னூட்டத்தை அடியேன் தான் பதிவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  8. நிறங்கள் "என்று வலைத்தளம் வைத்து மிக அருமையாக பதிவுகள் எழுதி வந்தவர். இப்போது அவரை நான் முகநூலில் தொடர்கிறேன்.
    மிகவும் பயனுள்ளது.
    பகிர்ந்த உங்களுக்கு நன்றி மதுரை தமிழன்.
    செல்வநாயகிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    இந்த காலகட்டத்திற்கு ஏற்ற காணொளி , சிறியவர் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பயனுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அவர் வலைபதிவர் என்பதை அறிவேன் ஆனால் அவரின் வலைதள பெயர் தெரியாது உங்களின் மூலம் தளப் பெயரை அறிந்து கொண்டேன் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.