Friday, August 7, 2026

 தேவை முடிந்ததும் மாறும் முகங்கள்

     

#Thoughts, ##HumanNature #TodayWorld


சிலர் நம்மை அணைப்பது அன்புக்காக அல்ல, தேவைக்காக

இன்றைய மனிதச் சமூகத்தின் மிகப்பெரிய பரிதாபம் என்னவென்றால், மனிதர்கள் மனிதர்களை நேசிப்பதில்லை. தங்கள் சுயநலத்துக்கான படிக்கட்டுகளாகவே பயன்படுத்துகிறார்கள்.

எதிரில் இருப்பவன் நல்லவனா, நேர்மையானவனா என்று பார்ப்பதை விட, தன் காரியத்துக்கு அவன் எந்த அளவுக்கு பயன்படுவான் என்ற கணக்கைத்தான் பார்க்கிறார்கள்.

தேன் சுவைத்தபின் ஓலை நக்கப்படுவதைப் போல, தேவை முடிந்ததும் உறவுகளும் முகம் மாறிவிடுகின்றன. மனிதத்தின் மாண்பும் குணத்தின் உயர்வும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன; இன்று பலரை இயக்குவது அறமல்ல வெட்கமற்ற சுயநலம்தான்.

      
#Thoughts, ##HumanNature #TodayWorld




அன்புடன்
மதுரைத்தமிழன்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.