Monday, December 16, 2013

மோடி பிரதமராக வந்தால்..... 





ஒரு ரூபாயின் மதிப்பு 70 டாலர் ஆயிடும்.

ஒபாமா எத்தனைமுறை இந்திய நாட்டின் விசாவுக்கு விண்ணப்பம் செய்தாலும் நிராகரிக்கப்படும்.

இந்திய நகரங்களை சுத்தம் செய்ய அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளிலிருந்தும் வேலைக்கு ஆட்கள் கொண்டு வரப்படுவார்கள்.

இந்தியாவில் உள்ள குப்பை குளங்களை அனுப்பும் இடம் அமெரிக்காவாக மாறி இருக்கும்

பாகிஸ்தான் உலக வரைப்படத்திலிருந்து அழிக்கப்படும்.

சீன நாட்டு எல்லையோரப் பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் அத்துமிறி முகாம் அமைத்து சென்று வருவார்கள்

சிங்கள மீனவர்கள் இந்திய ராணுவத்தினரால் கைது செய்யப்படுவார்கள் அல்லது சுட்டு கொலை செய்யப்படுவார்கள்.

தமிழ் ஈழம் நமது நட்பு நாடாக இருக்கும்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டி அது இந்துக்களின் மெக்கா என்று அழைக்கப்படும்.

ராமர்பாலத்தில் புல்லெட் டிரெய்ன் விடப்படும்.

பெட்ரோல்,டீசல் லிட்டர் 20 ரூ பாய்க்கும் கிடைக்கும்.

பைப் லைன் மூலம் சமையல் கேஸ் வீட்டிற்கு மிக குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும்.

நதி நீர்கள் இணைக்கப்பட்டு இந்தியா மேலை நாடுகளைப் போல பச்சைபசேலென்று மாறி இருக்கும்..

இந்தியாவில் வசிக்கும் மாற்று மதத்தினர் அகதிகளாக கருதப்படுவார்கள்.

தேசியக் கொடியில் "இந்தியா இந்துகளுக்கே' என்று இருக்கும்.

இந்திய ரூபாயில் காந்தி படத்திற்கு பதில் மோடி படம் இருக்கும்..


மோடி பிரதமராக ஆகிவிடுவார் இந்தியா இப்படி எல்லாம் மாறிவிடும் என்று நினைப்பவர்களாக நீங்கள் இருந்தால் உடனே டாக்டரை சந்திக்கவும் காரணம் இப்படியெல்லாம் ஆசைபட்டு யாராவது புலம்பினால் அவருக்கு மோடியோபியா, நமோயோபியா என்ற தொற்றுவியாதிக்கு ஆளாகியுள்ளார் என்று இந்தியாவின் மெடிக்கல் துறை அறிவித்துள்ளது.


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :நான் படித்த ஒரு துணுக்கை என் வழியில் மாற்றி அமைத்து பதிவாக இட்டு இருக்கிறேன். இதை நகைச்சுவையாக எடுத்து படிக்கவும்

எனக்கு மோடியோபியா இருக்கிறது என்றும் அது லோச்சபா தேர்தல் முடிந்த பின் மோடி மறைவது போல அதுவும் மறைந்து விடும் என்று அமெரிக்க மருத்துவர் சொல்லிட்டார்..

12 comments:

  1. நல்லாத்தான் இருக்கு....மோடியோ போபியோ...........

    ReplyDelete
  2. இப்படிலாம் இந்தியா மாறனும்னா மோடி பிரதமரா வரக்கூடாது. கேப்டன் தான் வரனும்

    ReplyDelete
    Replies
    1. yaaru da sutham vivaram kettavana irukkan captan vantha muthalla vasanam pesittu than adipparu appuram engarunthu

      Delete
  3. கட்டுரை நல்லாத்தான் இருக்கு. இப்போதைய தேர்தல் முறையையே மாற்ற வேண்டும். அமெரிக்காவைப் போல பிரதமரையும் முதல்வரையும் மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் ஓரளவு நாணயமானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில் ஊழல் பெருச்சாளி கட்சிகளுக்குத்தான் மாறிமாறி வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கும். இந்தியா சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கும்.

    ReplyDelete
  4. அமெரிக்க மருத்துவர் தானே சொல்லியிருக்கிறார். இந்திய மருத்துவர் சொல்லலையே. அதனால முதல்ல இந்தியாவுக்கு போய் ஒரு மருத்துவரை கண்டுக்கிட்டு வாங்க தலைவரே. அப்போது தான் உங்களுக்கு மோடியோபியா இருக்குதுன்னு நாங்க நம்புவோம்.

    ReplyDelete
  5. நல்ல நல்ல விஷயமா சொல்ற உங்களுக்கு ஃபோபியான்னு சொல்றாங்க!
    ஆனா பாருங்க பைத்தியம் என்று தன்னைத்தானே ஒரு பைத்தியமும் சொல்லிக்கொள்ளாது.
    அனா இங்கே மட்டும் ஒண்ணு தன்னை அப்படி சொல்லிக்கொள்ளுது... ஏன்?

    ReplyDelete
  6. கடவுளே காப்பாதுப்பா

    ReplyDelete
  7. உங்கள் கருத்துகள் சிந்திக்கத்தக்கவை..
    revmuthal.com

    ReplyDelete
  8. sricchukitte sonnalum romba seeriyasa sollirukkeenga boss....

    ReplyDelete
  9. அனைத்தும் உண்மையாகலாம்! :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.