Wednesday, December 4, 2013

கடவுள் ஏன் பெண்னை மென்மையாக படைத்து இப்படி கஷ்டப்படுத்துகிறார்?




விக்கரமாதித்தன் கதையில் வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறுவது மாதிரி இந்த மதுரைத்தமிழனும் மீண்டும் மீண்டும் பூரிக்கட்டையால் அடிவாங்குவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.


அவளிடம் அடி வாங்குவதால் எனக்கு ஏற்படும் வலியை விட அவள் என்னை அடிப்பதினால் அவளுக்கு ஏற்படும் கைவலி அதிகமாக இருக்கிறது என்று புலம்பினாள். நானும் அவள் மேல் இரக்கப்பட்டு அவளுடைய கைகளுக்கு மஜாஜ் பண்ணிக் கொண்டிருந்தேன்.

அப்படி செய்த கொண்டு இருந்த போது அவளிடம் கேட்டேன்... நான் இறந்து போனால் வேறு கல்யாணம் ஏதும் பண்ணிக் கொள்வாயா என்று கேட்டேன்.

அதற்கு அவள் மிகவும் சீரியஸாக நீங்கள் இறந்து போனால் நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் பேசாமல் என் தங்கையுடன் இருந்து கொள்வேன் என்றாள்.

அதன் பிறகு அதே கேள்வியை அவள் என்னிடம் கேட்டாள். நிங்கள் என்ன செய்வீர்கள் என்றாள்.

அதற்கு நான், நானும் உன் தங்கைகூட போய் இருந்து கொள்வேன் என்று சொன்னேன்.

அதை கேட்ட உடனே பூரிக்கட்டையை உடனே எடுத்து என்னை மீண்டும் அடிக்க ஆரம்பித்து விட்டாள்.

நான் சொன்னதில் என்ன தப்புங்க...

இப்ப அவளை கண்டால் எனக்கு பாவமாக இருக்கிறது என்னை அடித்துவிட்டு அவள் கை வலிக்கிறது என்று அழுவாள் என்று.... என் இந்த கடவுள் பெண்ணை மிக மென்மையாக படைத்து இப்படி கொடுமை பண்ணுகிறான் ...

இறைவா என் இந்த ஏற்பாடு நீ சொல் சொல் சொல்!!!



அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : என் தலைமையை ஏற்றுக் கொண்டு என்னோட கும்மி அடிப்பவர்கள் இந்த தளத்தில் ப்ளோவராகவோ அல்லது https://www.facebook.com/avargal.unmaigal இங்குவோ தொடரலாம். இதை நான் விஜயகாந்துடன் போட்டி போடும் நோக்கத்தில் கூறவில்லை



9 comments:

  1. இப்படி எல்லாம் பேசி அடி வாங்கத்தான் உங்களை(ஆண்களை) தடிமாடுகள் போல் படைத்திருக்கிறோம் என்றார் கடவுள்! ( நான் சொல்லலை மதுரை சாமீ....!)

    ReplyDelete
    Replies
    1. அதே கடவுள் தான் உங்கள் பதிலை படித்து விட்டு எங்கிட்ட சொன்னார் உங்களுக்கு (பெண்களுக்கு) தடிமாடுகள்தான் கணவராக இருக்க லாய்க்கு என்று என் காதில் சொல்லிவிட்டு சிரித்து விட்டு போனார். ஹீ.ஹீ

      Delete
  2. பட்டிமன்றம் தொடங்கிவிட்டதா

    ReplyDelete
  3. நல்லாவே காமெடி பண்றீங்க! அருமை!

    ReplyDelete
  4. மனைவி சொன்னது தன் கையாக்கும் .
    ...

    ReplyDelete
  5. த.ம. 3

    அடிகள் தொடர்கிறது! :))))

    ReplyDelete
  6. அதானே! நீங்கள் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது!!! இதுக்கு போய் யாராவது பூரிக் கட்டையால அடிப்பாங்களா? உலக்கையால இல்ல அடிச்சிருக்கணும்!!!

    ReplyDelete
  7. கடவுளே, (அழகான) தங்கையுள்ள பெண்களின் கைகளை மட்டும் மென்மையாக ஆக்கிவிடு. மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

    இது ஒரு விலையில்லா ஆலோசனை.

    கே. கோபாலன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.