Wednesday, February 3, 2021

 மோடி & அவர் கூட்டத்தை கதறவிட்ட அமெரிக்க பாப் பாடகி

 

avargal unmaigal

இந்தியாவின் இறையாண்மையைச் சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம் ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல.இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும், இந்தியாவுக்கு என்ன முடிவு செய்ய வேண்டும் என்பதை இந்தியாவே செய்யும். ஒரு தேசமாக ஒற்றுமையாக இருக்கட்டும்.

இப்படிப் பாடம் எடுப்பது வேறு யாருமல்ல பாராளுமன்ற பக்கமே தலையெடுத்து வைக்காத எம்பி சச்சின் டெண்டுல்கர்தான்... விவசாயிகள் பல மாதங்களாக டெல்லி குளிரில் போராடும் போது அதைப் பற்றிப் பேசாமலும் அதற்கு எந்தவித ஒரு குரல் கூடக் கொடுக்காமலும் இருந்தவர்தான்
 


இப்போது அமெரிக்கப் பாப் பாடகி ரிகானா தனது டிவிட்டர் பக்கத்தில் Rihanna @rihanna

 

avargal unamiagl


Feb 2 ல் why aren’t we talking about this?! #FarmersProtest நாம் இதைப் பற்றி ஏன் பேசவில்லை ?! #FarmersProtest என்றதும் இந்தச் சங்கி உடனே தூக்கத்திலிருந்து எழுந்து பதிவிடுகிறார்

சச்சின்மட்டுமல்ல Pragyan Ojha என்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும் இப்படிப் பதிவிட்டு இருக்கிறார் மேலும் பல செலிப்ரெட்டிகளும் பதிவிட்டு மோடிக்குப் பதிலாக இவர்கள் கதறிக் கொண்டு இருக்கிறார்கள்.
@pragyanojha

My country is proud of our farmers and knows how important they are, I trust it will be addressed soon. We don’t need an outsider poking her nose in our internal matters!


ஒரு பாடகியின் ஒரு வரிக்கே மோடி இந்த அளவு பதறுகிறார் என்றால் அவரின் தைரியத்தை என்னவென்று சொல்வது

ஒரு வேளை அமெரிக்க அரசு இப்படி ஏதாவது சொல்லி இருந்தால் இது எங்கள் உள்நாட்டு விஷயம் அதில் தலை இடாதீர்கள் என்று சொன்னால் அதிலாவது கொஞ்சம் நியாயம் என்று சொல்லாம்..

ஆனால் வெளிநாட்டுப் பிரபலம் மனித உரிமைகள் அடிப்படையில் காணும் காட்சிகளைக் கொண்டு பதறிப் போயி தன் கருத்தைச் சொன்னால் இந்திய அரரே பதறுகிறதே அது ஏன்?


 
#avargalunmaigal



ஒரு பாடகி தன் கருத்தைச் சொன்னால் அதற்குச் சரியான மாற்றுக் கருத்தை ஆணித்தரமாக அவருக்கு எடுத்துச் சொல்வதைவிட்டுவிட்டு அந்தப் பாடாகி ரிஹானா எந்த மதத்தைச் சார்ந்தவள் என்பது பற்றிக் கூகுள் சர்ச் பன்றாங்களாம்...அடேய் இதைத் தவிர உங்களுக்கு வேற ஏதும் தெரியாதா என்ன?


ஏன் அந்தப் பாடகி இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவளா கூட இருக்கட்டும் அல்லது விபச்சாரியாகக் கூட இருக்கட்டும் அவள் கருத்துச் சொன்னால் அதற்குப் பதில் கருத்துச் சொல்வதுதானே நியாயமான செயலாக இருக்க முடியும்

 


சரி இந்தியா விஷயத்தில் தலையிடக் கூடாது என்றால் அப்புறம் என்ன ---------க்கு மோடி அமெரிக்கா போயி அப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்ன்னு பிரச்சாரம் பண்ணினார்? Howdy, Modi!’:இப்ப கதறும் இவர்களின் வாய் அப்ப என்ன பண்ணிக் கொண்டிருந்தது.

 

#avargal unmaigal

#avargal unmaigal



இந்தப் பாடகி சொன்ன கருத்திற்குக் கதறும் சங்கிகள் அருணாச்சல பிரதேசத்தில் சீனா வீடு கட்டி இருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இல்லையா என்ன? அப்போது ஏன் இவர்கள் கதறவில்லை

 

#avargal unmaigal



போங்கடா நீங்களும் உங்கள் தேசபக்தியும்

#avargal unmaigal



அட வாங்கோன்னா கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே


என் கனவில்
தமிழக தெருக்களில் '
மோடிநடந்து வந்தார்
வீதி தோறும்
பெண்கள் விளக்கமாரை
கையில் எடுத்தனர்


தப்ப நினைக்காதீங்க
அவர் வரும் வழியைச்
சுத்தம் செய்யத்தான்
எடுத்தார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்






0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.