Tuesday, February 16, 2021

 

@avargal unmaigal

உடல் ஆரோக்கியத்திற்கு பால் குடிப்பதற்கு பதிலாக இதைக் குடிக்கலாம்தானே


மோடி ஆதரவாளர்களே உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பால் குடிப்பதற்கு பதிலாக கோமியம் குடிக்கலாம்தானே #Gobackmodi

மோடி விற்ற டீ பாலில் தயாரித்து விற்கப்படவில்லை கோமியத்தில் தயாரித்து விற்கப்பட்டது  #Gobackmodi

சென்னையில் பத்தாயிரத்திற்கு அதிகமான போலீஸ் பாதுகாப்ப்பில் ஈடுபட்டுள்ளனர். மக்களிடம் இருந்து மோடியை பாதுகாக்க அல்ல கேடியிடம் இருந்து மக்களை பாதுக்காக்கத்தான்  #Gobackmodi

மோடி போடும் திட்டங்களில் எல்லாம் வெற்றி பெறும் திட்டங்கள் அவர் போடும் சதி திட்டங்கள் மட்டுமே #Gobackmodi
 

வீட்டிற்கு தலைவனாக இருந்தாலும் வீட்டிற்க்கு வரும் கணவனை வீட்டுக்குள் வராதே என்று மனைவி சொல்லி திட்டுவதும் வீட்டுக்குள் வாரதே என்று குழந்தைகள் அப்பாவை பார்த்து திட்டுவது போலத்தான் மோடி தமிழகம் வரும் போது #GoBackModi என்று சொல்வது. அவருக்கு இந்தியாவின் பிரதமர் மற்றும் இந்தியாவின் குடிமகன் என்ற உரிமையில் தமிழகத்திற்கு வர உரிமை இருக்கிறது... ஆனால் அவரின் வரவை எதிர்க்கும் நிலையில்தான் தமிழகத்தில் அவரது செயல்கள் இருக்கிறது


மோடி மட்டும் இல்லாவிட்டால் இந்தியா பிரிவினைவாதிகளின் கையில் சிக்கிச் சிதறி இருக்கும் என்று சங்கிகள் பேசுவதைக் கேட்கும் போது எனக்குத் தோன்றுவது எல்லாம் கடலில் நீந்தி வரும் மீனுக்குப் படகு உதவி இல்லாவிட்டால் அக்கறை வந்து சேராது என்பது மாதிரி தோன்றுகிறது. #ஆமாம் எனக்கு ஏன் இப்படி எல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது



நடிகர் திலகம் சிவாஜியின் ரசிகர்கள் மோடியின் ஆதரவாளர்களாக தெரிவது என் கண்ணிற்க்கு மட்டும்தானா என்ன?

நான் மோடியை பற்றி எழுதி கலாயப்பதால் என்னை அன்பிரண்ட் செய்துவிட்டு போகும் நண்பர்களை பார்க்கும் போது நான் சரியான இடத்தில்தான் மிளகாயை சொருகிக் கொண்டு இருக்கின்றேன் என்பது புரிகிறது

கொரோனாவால் மேலை நாடுகளில் பலர் அழிந்து கொண்டிருக்கின்றனர்... அந்த கொடிய வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பி வந்தாலும் மோடியிடம் அது சிக்கி தவிக்கிறது... அதுமட்டுமல்ல அதிலிருந்து அவ்வளவு எளிதில்  இந்தியர்கள் தப்ப முடியாது




அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. /^நான் சரியான இடத்தில்தான் மிளகாயை சொருகிக் கொண்டு இருக்கின்றேன்//

    ஹா.. ஹா.. ரசித்தேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.