Sunday, January 3, 2021

 

irrespponsible mother


பொறுப்பில்லாத அம்மா - ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்


அம்மா!
அப்பாவை பூரிக்கட்டையால்
அடிக்க தெரிந்த உனக்கு
எடுத்த பூரிகட்டையை
அது இருந்த இடத்தில்
உனக்கு வைக்க முடியலையா என்ன
ஏன் இப்படிப் பொறுப்பில்லாத
அம்மாவாக இருக்கிறாய்
என்று கேட்டாவாரே
என் மகள்
ஹாலில் கிடந்த பூரிக்கட்டையை
எடுத்து அது இருக்க வேண்டிய இடத்தில் வைக்கிறாள்

பாவம் நான் இன்னும்
ஹாலில் அடிபட்டு கிழேயே கிடக்கின்றேன்
என் மனைவியின் பொறுப்பின்மையையும்
என் மகளின் பொறுப்புணர்வையும்
பார்த்துக் கொண்டு


இப்படி ஒரு சோதனை யாருக்கும் வரக் கூடாது
 



பத்தடி தூரத்தில் என்னவள் நிற்க
அவளும் என்னை நோக்கினாள்
நானும் அவளை நோக்கினேன்
ஆனால் இருவரும்
புன்னகை பூக்கக் கூட இல்லை
ஏன் பார்வையால் பேசிக் கொள்ளக் கூட இல்லை
ஏன் எங்கள் இருவருக்குள்ளும்
ஊடலும் இல்லை
காரணம் என்னருகில் என் மனைவி நிற்க
அவள் அருகில் அவள் கணவன் நிற்க
நாங்கள் எப்படிப் பேசிக் கொள்ள முடியும்
ஹும்ம் இப்படி ஒரு சோதனை யாருக்கும் வரக் கூடாது



பெண்களுக்கு ஒரு ஆலோசனை

இன்பாக்ஸ் தொல்லைகள் குறைய
உங்களின் ஒரிஜனல்
படங்களை மட்டும்
புரொபைல் படங்களாக வையுங்கள்
பில்டர் செய்து படங்களைப்
போடாதீர்கள்


உண்மையான காதல்


புரொபைல் படத்தை மட்டும்
பார்த்துவிட்டு காதலிப்பது
உண்மையான காதல் அல்ல
ஒரிஜனல் முகத்தைப் பார்த்து விட்டும்
காதலித்தால்
அதுதான் உண்மையான காதல்


ஆயிரம் மடங்கு அன்பை உள்ளே வைத்துக் கொண்டு
எதிரியைப் போலத் திரியும்
ஒரே ஜீவன் அப்பா மட்டுமல்ல
நம்ம மனைவியும்தான்


காதலிக்க நேரமில்லை
மனைவி கூடவே
இருப்பதால்

புத்தாண்டு மனநிலை 

https://avargal-unmaigal.blogspot.com/2021/01/new-year-mood.html

 

 

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :  இவையெல்லாம் பொழுது போகாமல் கிறுக்கிய கிறுக்கல்கள்

6 comments:

  1. எல்லாமே ரசனைதான் தமிழரே...

    ReplyDelete
  2. மார்கழி மாதம் மதுர குறும்பு அதிகமாவதில் வியப்பில்லை...!

    ReplyDelete
  3. Mathura,

    Happy New Year.

    Can you please visit my blog and check the latest one on NFL and share it in your (if thats fine with you. We need more participants) No obligation.

    https://vishcornelius.blogspot.com/2021/01/nfl.html?showComment=1609782599143#c3390435128615996033

    ReplyDelete
  4. ரசனையான கவிதைகள்!

    ReplyDelete
  5. ஏன் இந்தப் புலம்பல் ட்றுத்?:).. புரொஃபைலில் நிஜப் படங்களைப் போடுங்கோ எனச் சொல்லும்போதே புரிஞ்சுபோச்ச்ச்:)).. எங்கினமோ போட்டோவை நம்பிக் களம் குதிச்சு:) ஏமாந்ததன் அறிகுறி தெரிகிறது:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

    அதுசரி பூரிக்கட்டை உடையவில்லைத்தானே?:))

    ReplyDelete
    Replies
    1. ஹலோ புரொபைலில் போலி படம் போட்டு இருந்தாலும் இனிக்க பேசி ஒரிஜனல் போட்டோவை அல்லது வீடியோவை வாங்கிவிடும் ஆள் ஆச்சே நான் யாகு சாட்டில் மிக அனுபவம் மிக்க ஆள் ஆச்சே இந்த பேஸ்புக் எல்லாம் சும்மா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.