Wednesday, December 6, 2017

#avargal#unmaigal
அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழர்களின் சார்பில் ஒரு சிறு  வேண்டுகோள்

குஜராத்தில் கரை ஒதுங்கிய தென் தமிழக மீனவர்கள் தமிழகம் திரும்ப உதவி செய்ய  டிவி சேனல்கள் மூலம் கோரிக்கை வைக்கிறார்கள்.அவர்களிடம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்று அவர்களை
குஜராத் முழுவதும். கூப்பிட்டு சென்று சுற்றிக் காட்டினால் மோடியின் முயற்சியால் சொர்க்கபுரியாக இருக்கும் குஜராத்திலே அவர்கள் தங்கிவிடலாம் அல்லவா. அதுமட்டுமல்ல குஜராத் அருகில் உள்ள கடல்களில் சென்று அவர்கள் மீன்பிடித்து வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தலாம் அல்லவா அப்படி செய்தால் தமிழக மீனவர்கள் இலங்கைகடற்படையிடம் மாட்டிக் கொண்டி அவதிபட வேண்டியது இல்லையே... இதை பாதுகாப்பு துறை அமைச்சர் கண்டிப்பாக செய்யவேண்டும்.

அவர் அப்படி செய்வாரா?


#avargalUnmaigal

  நிர்மலா சீதாராமன் :அட முட்டாள் தமிழக மீனவர்களே! மோடி அலைதான் உங்களை குஜராத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது. குஜராத்தை மோடி சொர்க்க பூமியாக்கி வைத்திருக்கிறாரடா. அங்கு வாழ்வதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருகனுமடா! அதைவிட்டுவிட்டு முட்டாள் தனமாக ஆத்தா தமிழகம் போகனும் அதற்கு எங்களுக்கு டீசலும் சாப்பாடும் தாங்க என்று கேட்க உங்களுக்கு வெட்கமா இல்லையா என்ன?

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. தமிழ் மீனவர்கள் புயலில் அடிக்க பட்டு குஜராத்தில் கரைதட்டினார்கள் என்பதெல்லாம் பொய். குஜராத்தின் வளர்ச்சியை கண்டு அங்கே வாழ்வதற்கு தாமாகவே அங்கே சென்றார்கள்.

    ReplyDelete
  2. நிர்மலா தமிழக மீனவர்களை நிர்மூலமாக்காமல் இருந்தால் சரிதேன் நண்பரே...

    ReplyDelete
  3. கரை ஒதுங்கானவங்க பார்த்துட்டு வந்து சொல்லட்டும் சொர்க்க பூமியை பற்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.