Tuesday, December 5, 2017

இப்படியும் சில பெண்கள்...ஹும்ம்ம்

இங்கே தண்ணி எடுத்து கொண்டிருக்கும் பெண்ணிடம்
நீங்கள் அழகு என்றேன்..
அதற்கு அவள் யூ ஆர் சோ ஸ்வீட் என்று சொல்லி
அவள் அருகில் உட்கார அழைத்தாள்.
இப்ப அவ அடித்த தண்ணிக்கும்  சேர்த்து நான் பணம்
கொடுக்க வேண்டியதாயிற்று..

ஹும்ம் அவ அழகாக இருந்தா நமக்கு என்ன இல்லாட்ட நமக்கு என்ன
வாயை வைச்சுகிட்டு சும்மா இருந்திருக்கலாம்



அன்புடன்
மதுரைத்தமிழன்

16 comments:

  1. Replies

    1. ஸ்ரீராம்ஜி புன்னகை எதற்கு என்று சொல்லி இருக்கலாமே இப்ப என் மண்டை காஞ்சு போகுது அழகான பெண்ணிற்க்காக புன்னகையா அல்லது மதுர இப்படி ஏமாந்தற்காக புன்னகையா?

      Delete
    2. மதுரை பணத்தை விட்டதாகச் சொல்லியிருப்பதற்கு புன்னகை.

      மதுரை விவரமான ஆள், அப்படி எல்லாம் விடமாட்டார், நம்மை புன்னகைக்க வைக்கவே சொல்கிறார் என்பதால் புன்னகை.

      இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ, இப்படி சாதாரண பதிவு எல்லாம் போடக்கூடிய ஆள் இல்லையே மதுரை என்பதால் முன் எச்சரிக்கையாக ஒரு புன்னகை.

      மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளலாம், நான் வந்தபோது அங்கு பின்னூட்டமே இல்லையே என்ற ஜாக்கிரதையில் வந்த புன்னகை.

      :))

      Delete
  2. ஹாஹ்ஹா :) எவ்ளோ டாலர்ஸ் இழந்திங்க :) அதையும் சொன்னா சந்தோஷமா நாங்க பார்ட்டி வச்சி கொண்டாடுவோம்ல :)

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் ஏம்பா பார்ட்டினு வேற சொல்லிட்டீங்க அப்ப அவரு டாலர் எவ்வளவு போச்சுனு சொல்ல மாட்டாரே!! வழி இருக்கு... அவங்க வீட்டுக்கு ஒரு கால் போடுவோம் எல்லாம் தெரிஞ்சுரும்...

      கீதா

      Delete
    2. @கீதா @ஏஞ்சல் நான் சொன்னா எங்காத்து மாமி பார்ட்டி கொண்டாடுவாங்க பாவம் அவங்க என்னை அடிச்சு அடிச்சு அவங்க கை வலிக்கும் அதனால விட்டுவிடுவோம்

      Delete
  3. வணக்கம் நண்பரே என் பாட்டுக்கு எதிர் பாட்டா ?
    இங்கும் ரசித்தேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவில் போட்ட கருத்து இங்கு பதிவாக ஆனால் படத்துடன் வந்துவிட்டது

      Delete
  4. தமன்னாவைக் காணோமே...

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி தமன்னா பெயரை சத்தமாக சொல்லிடாதீங்க அப்புறம் இந்த ஏஞ்சலும் அதிராவும் தமன்னாவை என் தங்ககையாக்கிவிடுவாங்க

      Delete
  5. ஹா ஹா ஹா ஹா...மதுரை உங்களுக்கு நேரம் சரியில்லை!!!!நாக்குல சனி!!! சரி எதுக்கும் வீட்டுல வாயில ப்ளாஸ்டர் போட்டு வைச்சுக்கங்க!!! இதுவாது டாலரோடு போச்சு....அது பூரிக்கட்டை அடியும் ஆஸ்பத்திரி செலவும் ஆகிடும் ஹா ஹா ஹா ஹா இதுக்கும் இருக்கு உங்களுக்கு பூரிக்கட்டை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாயை முடினால் பிரச்சனை இல்லையா ஆனால் மதுரை தமிழனுக்கு இப்படி வாய் இல்லைன்னா யாரும் மதிக்கமாட்டாங்க

      Delete
  6. இது எப்போ எங்கின எத்தனை மணிக்கு நிகழ்ந்துது?:).. ஜொல்லவே இல்ல:) ஒரு செல்வி:) ஆவது எடுத்து வந்து போட்டிருக்கலாம்:)).... பறவாயில்லை திங் பொஸிடிவ்:).. அதாவது காசா முக்கியம்:) அருகில இருந்திட்டீங்க இல்ல:)) ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. இப்படி நான் தூக்கத்தில் கனவு காண்கிற போது வாட்ஸ் கட்டுவதில்லை என்பதால் எத்தனை மணிக்கு நிகந்தது என்று தெரியவில்லை ஹீஹீ

      Delete
  7. பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே ......

    ReplyDelete
  8. உண்மையை சொன்னதுக்கு இன்று உங்கள் வீட்டில் பூரி சூட்டு தர போறாங்க நல்ல சாப்பிடுங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.