Saturday, January 14, 2023

  தமிழகத்தின்  சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான்
    

@avargalunmaigal



தமிழ்நாட்டைத் தமிழகம் என்பது அழைப்பது சரிதானா என்றால் அப்படி அழைப்பதில் தவறேதுமில்லை என்றுதான் நான் சொல்வேன் . (ஒவ்வொருவருக்கும் அஃபிசியல் பெயர் இருந்தாலும் அவர்களுக்கு அந்த பெயரை ஒட்டி ஒரு செல்லப் பெயர் இருக்கும் அது போலத்தான் தமிழ்நாட்டின் செல்லப் பெயர். தமிழகம் என்பது அந்த செல்லப் பெயரை எல்லா இடத்திலும் எல்லோராலும் பயன்படுத்த முடியாது & கூடாது )தமிழ்நாட்டை பல்வேறு மக்கள் மற்றும் தலைவர்கள்  தமிழகம் என்றே பல முறை அழைத்து வந்து இருக்கிறார்கள்.. ஆனால் இப்ப ஏன் அது தவறு என்று   சொல்லப்படுகிறது என்றால் அதை யார் எந்த நோக்கத்திற்காக  எந்த டோனில்  பேசுகிறார்கள் & பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தான் அமைகிறது.
ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டுச் செயல்படுபவர்தான் இந்த ஆளுநர் ரவி.. அவர் தமிழகம் என்பதைப் பயன்படுத்துவது என்பது நல்ல நோக்கில் அல்ல. ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்கு நல்லது என்பதே தெரியாது அதுமட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ்காரார்களுக்கு தமிழ்நாடு என்று சொல்லும் போது அது ஒரு தனிநாடு என்ற உணர்வே அவர்களுக்கு வருகிறது.. காரணம் இந்தியாவில் மற்ற மாநிலத்தவர்களை எல்லாம் முட்டாளாக்கி அவர்கள் ஆண்டு வரும் போது தமிழ்நாட்டில் அப்படி அவர்களால்  செய்ய முடியாத போது அவர்களுக்கு ஆத்திரம் வருவது இயல்பே. அதனால் தமிழ்நாட்டிற்கு இருக்கும் தனித்தன்மையை அழிக்க அவர்கள் பல வகைகளில் முயல்கிறார்கள் அந்த முயற்சியில் ஒன்றுதான்  இந்த தமிழகம் என்பதும் .  தமிழர்களின் பண்டிகையாகவே பார்க்கப்பட்டு  மாற்று மதத்தினரும் கொண்டாடி வந்த பொங்கலை (அது இந்துகளின் பண்டிகையாக இருந்தாலும் சரி ) இந்துக்களின் பண்டிகைதான் என்று சொல்லி தமிழர்களிடையே இருக்கும் ஒற்றுமையை குலைக்க சிதைக்க என்று  முயல்வதும் இப்படி ஒவ்வொன்றாகச் சிதைத்து தமிழ்நாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதுதான்

@avargalunmaigal



இதற்கு ஒரு துணையாக யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால் தமிழகத்தின் நவீன எட்டப்பன்களான பன்னீர் செல்வமும் எடப்பாடியும்தான். தங்களின் சுய நலத்திற்காக ஒரு மாபெரும் கட்சியான அதிமுகவைக்  கரையான் போல அரித்து அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்

ஒருவேளை எதிர்காலத்தில் பாஜக பெருச்சாளிகள் தமிழகத்தில் நுழைந்து இருந்தால் அதற்கு இடம் கொடுத்தது  சாக்கடை தொட்டிகளான இந்த எடப்பாடி பன்னீர் செல்வம் என்ற சாக்கடைகள்தான் காரணம்..

அன்புடன்
மதுரைத்தமிழன்



3 comments:

  1. தமிழ் நாட்டில் பெரும்பாலானவர்கள் தாய் மொழி தெலுங்கு
    பிராமணர்களுக்கு தமிழ் பிடிக்காது . மற்றவர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் இல்லை
    பெரும்பாலானவர்கள் ஜாதி துவேசம் பிடித்தவர்கள்
    திருடுபவர்களை ஆதரிப்பவர்கள் அல்லது புகழ்பவர்கள் . உதாரணம் . சசிகலா , ஸ்டாலின், ஜெய
    கேவலமான தமிழ் நாட்டில் பிஜேபி வந்தால் என்ன . திருட்டு திமுக இருந்தால் என்ன எல்லாம் ஒன்றுதான்

    ReplyDelete
  2. இதுவரை இல்லாத மோசமான ஆட்சி தமிழகத்தில் இப்போது
    நடைபெற்று வருகிறது. சாக்கடையை விட மோசமானது
    திமுகவும் அதன் தலைவர்களும்.எடப்பாடி தேவலை என்றாகி விட்டது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.