Monday, December 12, 2022

 இறந்து போன இந்த தலைவர்கள் எல்லாம்  இன்று உயிரோடு இருந்திருந்தால்???

 

@avargal unmaigal



பாரதியார் மட்டும் இப்பொழுது  இருந்திருந்தால் வெள்ளைத்தாடியை(மோ######டி) எதிர்த்து  நிச்சயம் குரல் கொடுத்து இருப்பார்,  அதன் பின் ஒரு புதிய கோட்ஸே வந்து கொன்று இருப்பார் .

அப்படி  இல்லையென்றால் இளையராஜா மாதிரி வெள்ளைத்தாடியை பற்றிய ஒரு  புத்தகத்திற்கு முன்னுரை எழுதி எம்பியாக பதவி வகித்து இருப்பார்

பாரதியார் ஒரு வேளை இன்று இருந்து  சங்கியா மாறி இருந்தது  ஒரு பாட்டு எழுதி அதற்கு இளையராஜா இசை அமைத்து இருந்தால் அந்த பாடல் மோடி ராகத்திலிருந்திருக்கும்


காந்தி உயிரோடு இருந்திருந்தால் அத்வானியைப் போல மேடையில் நின்று வெள்ளைத்தாடிக்கு வணக்கம் தெரிவித்து இருப்பார்.. அவரை கொன்றதும் ஒருவிதத்தில் நல்லதுதான் இல்லையென்றால் அந்த கன்றாவியை கூட நாம் பார்த்திருப்போம்


எம்ஜியார் இன்று உயிரோட இருந்திருந்தால் வீட்டுக்கு ஒரு ராமர் சிலை வைத்திருப்போம் என்று சொல்லிருப்பார் ராமவரத்தோட்டம் ராமர் கோயிலாக மாறி இருக்கும்

ஜெயலலிதா இன்று உயிரோட இருந்திருந்தால் அண்ணாமலை மீது இந்நேரம் கஞ்சா கேஸில் மாட்டி சிறையிலிருந்திருப்பார்


கலைஞர் இருந்திருந்தால் அண்ணா வழியில் உழைக்கத் தம்பி வெள்ளைத்தாடிக்குத் தோள் கொடுத்து இருப்பார் அவரின் பிள்ளைகளில் ஒன்று இன்று மத்திய அமைச்சரவையில் இடம் பெற செய்து இருப்பார்

சிவாஜிகணேஷன் இருந்திருந்தால் நிச்சயம் வெள்ளைத்தாடியாக யோகியாக ராமராக நடித்து பணம் அள்ளி இருப்பார் என்ன அவர் வெள்ளைத்தாடியாக நடிக்கும் போது துணையாக ஸ்மிர்த்திராணியின் வேடத்திற்கு சாய் பல்லவியை ஜோடியாகப் போட்டு நடித்து இருப்பார்


கொசுறு: அரசியலில் குறுக்கு வழிகளை கடைப்பிடிக்கும் தலைவர்கள்தான் நாட்டின் மிகப்பெரிய எதிரிகள்."- மோ####டி #

வெள்ளைத்தாடி  பொய்தான் பேசுவார் என்று நினைக்கும் நேரத்தில் உண்மையைப் பேசி இருக்கிறார். ஹரே வாவ்



ஸ்டாலின் காரில் மேயர்  ஏறித் தொங்கியது போல வெள்ளைத்தாடி காரில் ஏறித் தொங்கி இருந்தால் வெள்ளைத்தாடி அந்த பெண்ணை கீழே தள்ளவிட்டிருப்பார். காரணம்? வேறென்ன கேமிரா வீயூ மறைக்குதுன்னதான்



அன்புடன்
மதுரைத்தமிழன்

இது ஒரு கற்பனை பதிவுதான் யாரையும் இழிவுபடுத்துவது நோக்க
மல்ல

1 comments:

  1. உலகத்திலேயே கேமிரா பைத்தியம் நம்ம கேடி தான்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.