Sunday, July 22, 2018

@avargalUnmaigal
நான் ஒரு பரதேசிங்க...
நல்லா முட்டு கொடுக்கிற நாலு பக்தால்ஸ் சொன்னாங்க...
நான் ஒரு பரதேசிங்க...
ஏற்கனவே சொன்னவங்க திகைச்சி போய் நின்னாங்க...!
எல்லாம் தெரிஞ்சிருந்தும் பொய்யி சொல்ல வந்தேங்க...
நான் ஒரு பரதேசிங்க...


ஊர்சுத்ற கம்னாட்டிய கழுதேனு சொன்னாங்க...
ஏ..ய்... ஏ..ய்... ஏ கழுதே…டேய்...
ஊர்சுத்ற  கம்னாட்டிய கழுதேனு சொன்னாங்க...
முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க...
பேசாதே என்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க...
பீஸ் பீஸா கிழிச்சாங்க... பேஜாரா பூட்டுதுங்க...
நான் ஒரு பரதேசிங்க...

கை சின்னம் இருந்தது கண் சிமிட்டல் காட்டுது...
சுருட்டி கொண்டு போறதெல்லாம் ஆல்ரௌண்டா ஓடுது...
மேல் நாட்டு சுத்தலிலே மோசடி எல்லாம் நடக்குது...
ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைப்பேங்க...
நான் ஒரு பரதேசிங்க...

நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க...
நாலும் தெரியா கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க...
ஆன வரை சொன்னேங்க அடிக்க தானே வந்தாங்க...
அத்தனையும் புழுகின என்னை இளிச்சவாயன் என்னாங்க...
நான் ஒரு பரதேசிங்க...
நல்லா முட்டு கொடுக்கிற நாலு பக்தால்ஸ் சொன்னாங்க...
நான் ஒரு பரதேசிங்க...

நான் ஒரு பரதேசிங்க...
நல்லா முட்டு கொடுக்கிற நாலு பக்தால்ஸ் சொன்னாங்க...
நான் ஒரு பரதேசிங்க...
நான் ஒரு பரதேசிங்க...
பரதேசிங்க... பரதேசிங்க... பரதேசிங்க...


எனது  "இப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்  என்ற பதிவில் இப்படி

"நான் ஒரு ஏழைங்க ரொம்ப நல்லா படிச்ச நாலு பக்தாள்ஸ் சொன்னாங்க நான் ஒரு ஏழைங்க " என்று ஒரு வரி எழுதி புள்ளிதான் வைத்தேன்... ஆனால் அதை பார்த்த ஒரு நண்பர் மிக அழகாக கோலமே போட்டு  எனக்கு அனுப்பி வைத்தார். அவர் இப்படிப்பட்ட பாடல்களை எழுதுவதில் மன்னர்.. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

சந்திரபாபு பாடிய நான் ஒரு முட்டாளுங்க என்ற ராகத்தில்படிக்கவும் மிக அருமையாக இருக்கும் கீழ்கண்ட இந்த பாடலை யார் வேண்டுமானாலும் எடுத்து அழகாக இசை அமைத்து வீடியோவாக எடுத்து வெளியிடலாம் அல்லது பொது இடங்களில் பாடி பலரை மகிழ்விக்க செய்யலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இந்த பாடலை எழுதியது யாராக இருக்கும்??????

5 comments:

  1. அருமையான சொற்கோர்வை நண்பரே மிகவும் ரசித்தேன்.

    எழுதியது ஒரு சிலர் மனதில் ஓடியது ஆனால் சொல்வதற்கு தயக்கம்...

    நண்பர் திரு. டி.என்.முரளிதரன் ???

    ReplyDelete
  2. யார் எழுதி இருந்தால் என்ன கருத்துள்ள பாடல்

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா தலைப்பைப் பார்த்ததும் ட்றுத், தன்னைப்பற்றிய உண்மைகளை எல்லாம் வெளியே கொண்டு வாறாரோ என ஓடிவந்தால் கர்ர்ர்ர்:)) மோடி அங்கிளை வச்சு முசுப்பாத்தி பண்றார்ர்ர்.. மீ வந்ததை விட வேகமா திரும்பி ஓடுறேன்ன்ன்:))

    ReplyDelete
    Replies
    1. யெஸ் அதிரா நானும் அப்படி நினைச்சுத்தான் வந்தேன்....

      கீதா

      Delete
  4. நம்ம நாடு போற போக்குக்கு இப்படிதான் பாடல் எழுதணும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.