Monday, July 30, 2018

தமிழக தொல்லைக் காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு & வாட்ஸப் வதந்திகளில் இருந்து உங்களை மீட்க ஒரு பதிவு 

ஆண்கள் இப்படி செய்தால் பெண்களுக்கு பிடிக்காது

பெண்கள் விடுகதை போன்றவர்கள் அவர்களை பற்றி அறிந்து கொள்வது அவ்வளவு எளிது இல்லை. ஒவ்வொரு பெண்களும் வித்தியாசமானவர்கள் என்றாலும் அவர்களிடம் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஒன்று போலத்தான் இருக்கிறது

ஆண்கள் செய்வது ஏதுமே பெண்களுக்கு பிடிக்காது என்றாலும் நான் கிழே சொல்வது அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கவே பிடிக்காது

ஆண்களே உங்களுடன் உங்கள் தோழியோ காதலியோ அல்லது மனைவியோ  இருக்கும் போது எவ்வளவுதான் அழகான பெண் உங்களை கடந்து சென்றால், திருட்டு தனமாக கூட பார்த்து விடாதீர்கள் அப்படியே பார்த்தாலும் அவளை பாராட்டிவிடாதீர்கள் முதலில் பார்ப்பதே தவறு, அதில் அவர்களை பாராட்டினால் அவ்வளவுதான்


ஆண்களே  உங்களின் தோழிக்கோ காதலிக்கோ அல்லது மனைவிக்கோ நிறைய ஆண் நண்பர்கள் இருக்கலாம். அவர்கள் நட்பு வலையத்தை விட்டு அடுத்த லெவலுக்கு வர முயற்சி செய்வதை நீங்கள் நன்கு அறிந்தாலும் அதை மட்டும் இந்த பெண்களிடம் சொல்லிவிடாதீர்கள்.. நீங்கள் சொல்வதில் 100 % உண்மை இருந்தாலும் .அது அந்த பெண்களுக்கே நன்றாக தெரிந்திருந்தாலும் அதை கேட்க அவர்கள் விரும்ப மாட்டார்கள்


பெண்கள் எப்போதுமே ரொம்ப பிஸியாகத்தான் இருப்பார்கள் நீங்கள் பல தடவை அவர்களுக்கு போன் பண்ணி இருந்தாலும் அவர்கள் எடுக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் அவர்கள் திரும்ப கால் பண்ணும் போது இரண்டாவது ரிங்க் டோன் போவதற்குள் எடுத்துவிடுங்கள் இல்லையென்றால் நீங்கள் அவர்களை பதிலுக்கு பழி வாங்குவதாக நினைத்து கொள்வார்கள் அதுமட்டுமல்ல அவர்களை பொருத்த வரை நீங்கள் வேலை ஏதும் செய்யாமல் எப்போதும் பிரேக்கிங்க் நீயூஸ் மட்டும் பார்த்து கொண்டிருப்பதாக நினைக்க கூடும்


உங்கள் காதலி தோழி மனைவி இவர்களுடன் வேறு ஒரு ஆண் தவறான எண்ணத்தில் பேசுகிறான் என்று தெரிந்தாலும் அவர்களிடம் கோபப்பட்டு பேசிவிட வேண்டாம் அடித்துவிட வேண்டாம். காரணம் அவர்கள் உங்கள் பெண்களிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறார் அப்படி நீங்கள் செய்தால் உங்கள் பெண் உங்களை காட்டுமிராண்டி என்று கருதுவார்கள்


உங்களுக்கு என்று ஒரு பெண் இருந்து உங்களுக்கு என்று பேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால் தப்பி தவறி வேறு எந்த பெண்ணாவது புரொபைல் பிக்சர் அப்டேட் பண்ணினால் தப்பி தவறி லைக்ஸோ அல்லது அருமை அழகு பியூட்டி என்று மட்டும் போட்டுவிடாதீர்கள். அப்படி செய்தால் ஏற்படும் வீபரிதங்களில் இருந்து கடவுளே வந்தாலும் உங்களை காப்பாற்ற  முடியாது

காதலியோ மனைவியோ வந்த பின் நாம் நண்பர்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து அவர்களை கவனிக்க தவறினால் அதன் பின் அவர்கள் நமக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு முக்கியதுவம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் அதன் பின் அவர்களை நம் பக்கம் இழுப்பது என்பது இயலாதது

உங்கள் உறவு கிடைத்துவிட்டது என்பதால் அவர்கள் எல்லா உறவுகளையும் வீட்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் இந்த கால கட்டத்தில் அது நடக்காது

என்ன அவசர நிலையிலும்(மழை அல்லது குளிர் ) உங்கள் சர்ட்டை காதலி அல்லது மனைவியின் அனுமதியுடன் கூட கொடுத்துவிடாதீர்கள்.. அதை எந்த பெண்ணும் விரும்ப மாட்டார்கள் அப்படி தருவது உங்கள் மீதுள்ள நெருங்கிய உணர்வை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பது மாதிரிதான்




உங்களவளுக்கு ஏதாவது பிரச்சனையின் போது நீங்கள் என்ன பிரச்சனை என்று கேட்கும் போது அவர்கள் ஒன்றுமில்லை என்று சொன்னவுடன் உடனே ஒகே என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடக் கூடாது. அவர்கள் அருகில் அமர்ந்து அக்கறையுடன் கேட்கவில்லை என்றால் அவர்கள் மீது கேர் இல்லை என்று அவர்கள் கருதுவார்கள்

சரி அப்படி அவர்கள் நினைப்பார்கள் என்பதற்காக அவர்களின் பிரச்சனையை மிகவும் அதிக அளவில் நோண்டக் கூடாது. ஏனென்றால் அவர்களுக்கும் ஒரு எல்லை உண்டு. எதை யாரிடம் சொல்ல வேண்டும் என்று, அதனால் அவர்களின் எல்லையை நாம் மீறாமல் பார்த்து கொள்ள வேண்டும்

கடைசியாக உங்கள் காதலி அல்லது மனைவி உங்களுடன் வரும் போது ஏதாவது ஒரு பெண்ணை சுட்டிக் காட்டி அவள் மிக அழகு என்று சொன்னால் உடனே ஆமாம் என்று தலையாட்டி வீடாதீர்கள் அதற்கு பதிலாக என் பார்வையில் உன்னை தவிர வேறு அழகு யாரும் கிடையாது என்று ஒரு பொய்யையாவது சொல்லுங்கள் அந்த பதிலைத்தான் அவர்கள் விரும்புவார்கள் உங்களின் ஹானஸ்டான பதிலை விரும்புவதில்லை...


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. அருமையான பதிவு நண்பரே,ரொம்ப அனுபவம் போல...

    ReplyDelete
    Replies

    1. கொஞ்சம் உண்மை அனுபவம் கொஞ்சம் மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டது அவ்வளவுதான்

      Delete
  2. அனுபவத்தினால் வரும் குறிப்புகள் எப்போதுமே பாயனுள்ளவை. மற்றவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுக்கவும் ஒரு பெருந்தன்மை வேண்டும்.

    சபாஷ்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா. ஸ்ரீராம் கலக்கல்....ஐ லைக் இட்....நான் கலாய்ச்சு சொல்ல நினைச்சத் நீங்க அழகா சொல்லிட்டீங்க...ஹாஹாஹாஹா

      கீதா

      Delete
    2. ஹும்ம் நான் படும் கஷ்டத்தை பார்த்து வருத்தப்படாமல் நீங்க ரெண்டு பேரும் பேமிலியா வந்து கலாய்க்கிறீங்களோ.....

      Delete
  3. நாட்டு மக்களுக்கு உதவக்கூடும் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. அது என்ன நாட்டு மக்கள் என்று பொதுவாக சொல்லி தப்பிக்கிறீங்க எனக்கும் உதவக் கூடும் என்று தைரியமாக சொல்லனுமாக்கும்

      Delete
  4. அனுபவம் தந்த பாடம் எப்போதுமே உயர்வு தான்! ஹாஹா.... அனைத்தும் நல்ல அறிவுரைகள். தேவைப்படுபவர்கள் பயன்படுத்தலாம்!

    ReplyDelete
    Replies
    1. ஆண்கள் கஷ்டப்படக் கூடாது என்பதனால் என் அனுபவத்தை பகிரிந்து இருக்கிறேன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.