Tuesday, July 17, 2018

பாலியல் வன்புணர்வு  செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்

இரவு தூங்கி காலையில் நான் எழுந்ததும் சமுக வலைத்தளங்கள் நாளிதழ்கள் செய்தி சேனல்கள் எங்கும்  சென்னையில் செவித்திறன் குறைபாடுள்ள 11வயது சிறுமியை  கடந்த ஆறு மாத காலமாக 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் அது பற்றிய நல்ல மற்ற கேவலமான கருத்துகளும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன்..


இந்த  செய்தி அறிந்ததும் பலர்  வழக்கம் போல இப்படி பாலியல் வன் கொடுமை செய்தவர்களை அடித்து கொள்ளனும் அறுத்துவிடனும் என்றும் அரபுநாடுகளில் தண்டனை கொடுப்பது போல தண்டனை கொடுக்கனும் என்று கூறுகிறார்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. தண்டனை இதைவிட கடுமையாக கொடுக்க வேண்டும் அதுவும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது..

வேறு ஒரு சிலரோ அந்த பெண்ணின் தாயார் மீது குற்றம் சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்...அந்த வீட்டின் குடும்ப சூழ்நிலை தெரியாமல் அவர் மீது கல்லெறிவது மிக தவறு அந்த தாயாரின் மீது குற்றம் சொல்ல கை நீட்ட துவங்கும் போது அவரைமட்டுமல்ல அந்த குடியிருப்பில் இருந்த மற்றவர்களையும் நாம் சேர்த்தேதான் குறை சொல்லவேண்டும் இந்த குழந்தைக்குதான் செவிதிறன் குறைபாடு என்றால் அவர் வசித்த குடியிருப்பு வசித்த குடியிருப்பு வாசிகளுக்கும் செவிமட்டுமல்ல கண்ணிலும் குறைபாடுகளா என்ன? 7 மாதம் நடந்த நிகழ்வை ஒருவரும் கவனிக்கவில்லை என்றால் அவர்கள் மனிதர்கள்தானா அல்லது மிருகங்கள்தானா.... பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் டிவிகளின் முன்பும் ஸ்மார்ட் போன்களின் முன்பும் நம் கவனம் இருப்பதை என்ன வென்று சொல்லுவது....ஐந்தறிவாம் மிருகத்துக்கு
ஆறறிவாம் மனிதனுக்கு இப்படி இருப்பதை விட ஐந்தறிவு மிருகமாக கூட இருப்பது என்னவோ நல்லதாகத்தான் படுகிறது.காரணம் விலங்குகளின் கவனம் எல்லாம் அதன் குழந்தைகளிடம்தான் எப்போதும் இருக்கிறது ஆனால் ஆறு அறிவுபடைத்தவனின் கவனம் எல்லாம் குழந்தைகள் மீது இல்லாமல் தான் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனின் மீதுதான் வைத்திருக்கிறான்.

சரி விசயத்திற்கு வருவோம் இப்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் பண்ணுவதுமட்டும்தான் தவறா என்று பார்த்தால் இல்லை எந்த வயது பெண்மணியிடமும் பலாத்காரம் பண்ணுவதும் தவறுதான்...இப்படி 17 ஆண்கள் பலாத்காரம் பண்ணியது தவ்று என்று பொதுமக்கள் கொந்தளிக்கிறார்கள்...காரணம் இப்படி பலாத்காராம் பண்ணியவர்கள் சமுகத்தின் கடை நிலை ஊழியர்கள் என்பதாலா என்ன? இப்படி கொந்தளிக்கும் பொதுமக்கள் கடந்த சில வாரங்களாக நடிகை ஸ்ரீரெட்டி சமுகத்தில் செல்வாக்குமிக்கவர்கள் தனக்கு படவாய்ப்பு தருவதற்கு தன் உடலை கேட்டு பாலியல் உறவுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய போது கேலி பேசிக் கொண்டிருக்கிறார்கள்

என்னை பொறுத்தவரையில் அதுவும் பாலியல் பலாத்காரம்தான்..... திரைப்பட உலகில் செல்வாக்குமிக்கவர்கள் இப்படித்தான் பாலியல் பலாத்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் காரணம் அவர்களின் செல்வாக்குதான் ஆனால் அப்படி இல்லாத கடைநிலை ஊழியர்கள் இப்படித்தான் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள் இருவரின் செயலும் குற்றம்தான் என்றாலும் நாம் கடைநிளை ஊழியர்களை மட்டும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சொல்வதுமட்டும் எந்த விதத்தில் நியாம்? குற்றம் செய்யப்படும் முறையில் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் குற்றம் குற்றமே அதனால் தண்டனைகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும்.


ஸ்ரீரெட்டி வேண்டுமானல் வயதில் சற்று பெரியவராக இருக்கலாம் ஆனால் வாய்ப்பு கேட்டு வந்தவரிடம் இப்படி உறவு கொள்வது சரிதானா என்ன? இது சரிதான் என்றால் நாளை உங்கள் குழந்தைகளுக்கு பள்ளி அட்மிஷன் கேட்டு போகும் போது அந்த கல்வி நிர்வாகத்தை சேர்ந்த ஆண்கள் உங்கள் குழந்தைக்கு அட்மிசன் வேண்டுமென்றால் எங்களிடம் நீங்கள் உறவு கொள்ள வேண்டும் என்று சொன்னால் அதையும் இது போலத்தானா எடுத்து கொள்வீர்கள்


இப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக நாங்க வாதாட போவதில்லை என்று சொன்ன வக்கில்களே இது போல ஒற்றுமையாக இருந்து ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டிய செல்வாக்கு மிக்கவர்கள் மீது நீங்கள் எல்லோரும் சேர்ந்து பொது நல வழ்க்கு தொடுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கி தருவீர்களா? இப்படி செய்தால் பல பாலியல் குற்றங்கள் குறையுமே?


திரைப்பட துறையில் செல்வாக்கு மிக்க ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண்களே உங்கள் கணவர்கள் இப்படி செய்யும் தவறுகளை பார்த்து சும்மா இருந்து கொண்டு இருப்பது நல்லதுதானா? இப்படி எத்தனை பெண்கள் சினிமா துறைக்கு வாய்ப்புக்கள் தேடி வரும் போது உங்களின் கணவர்கள் பாலியல் பலாத்காராம் செய்கிறார்கள் அதை எல்லாம் தட்டி கேட்க மாட்டீர்களா?

இறுதியாக குழந்தைகள் கடத்துகிறார்கள் என்று செய்தி அறிந்தது சில நபர்களை அடித்து கொன்று இருக்கிறார்கள் அதிகம்படிக்காத கிராமவாசிகள் ஆனால் இப்படி 17 பேர் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் பண்ணிய செய்தியை அறிந்தது அப்படி அடித்து கொள்ளாமல்  சமுக வலைத்தளங்களில் ஸ்டேடஸாக போட்டு கொண்டிருப்பதுதான் படித்த நகரத்து வாசிகள் செய்யும் செயலா என்ன? கோர்ட்டில் வக்கில்கள் குற்றவாளிகளை அடித்தார்களாம் வக்கில்களே அப்படி அடிக்கும் உங்களில் ஒருவருக்கு கூட தெரியவில்லையா குற்றவாளின் ஆண்குறியில்  ஒங்கி ஒரு உதைவிடனும் என்று...



சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஏன் நீதி விசாரணை அது இது என்று சட்டநடவடிக்கைகள்? இது அறிந்தே செயல்படுத்தப் பட்ட அராஜகம்.

பிஞ்சுகளின் தளிர் உடலில் இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல அவர்களின் ஆண் உறுப்புக்கள்தான் அதுவும் பொது இடத்தில் வைத்து..

இதை கண்டு மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி கேட்டால் வெட்டி தள்ளுங்கள் அந்த குற்றவாளிகளோடு சேர்த்து


அன்புடன்
மதுரைத்தமிழன்


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 பேரும், பட வாய்ப்பு கேட்டு வந்த ஸ்ரீ ரெடிட்டியுடன் உறவு வைத்த திரைப்பட பிரபலங்களும் சமுகத்தில் உள்ள விஷவித்துக்கள்தான் அவர்களும் வேரோட அறுக்கப்படவேண்டும்


5 comments:

  1. மிகவும் வேதனையாக இருக்கிறது சமூகத்தின் போக்கு...

    ReplyDelete
  2. சரியான கருத்து

    ReplyDelete
  3. தண்டனைகளை சொல்வது எளிது,ஆனால்...
    அரசு அதை ஏற்க்கவில்லையே...!
    அதுதான் கொடுமையிலும் கொடுமை...

    ReplyDelete
  4. நல்ல செய்திகளை மட்டும்கேட்கும் நாள் என்றோ

    ReplyDelete
  5. துளசி: என்ன சொல்ல என்று தெரியவில்லை அந்த அளவிற்கு வேதனைப்படுகிறது.

    கீதா: வேதனை ஒரு புறம் ஆனால் கேள்விகள் நிறைய எழுகின்றன...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.