Thursday, July 5, 2018

ஆண்களை தப்பு செய்ய வைப்பதே பெண்கள்தான்

ஆணகள் தொடர்ந்து தப்பு பண்ணுவதற்கு காரணமே மனைவிதான்


நாம தப்பு பண்ணும் போது அதற்கு தண்டனையாக நம்மிடம் ஒரு மாதம் பேச மாட்டேன் என்று சொல்லுவதுதான் ஆண்களை தொடர்ந்து தப்பு பண்ண செய்கிறது என்று புள்ளியல் விபரங்கள் தெரிவிக்கிறது...ஆமாம் எங்கிருந்து இந்த புள்ளியல் விபரங்களை சேகரித்தீர்கள் என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம் இந்த விபரங்கள் எங்கள் வீட்டில் இருந்துதான் திரட்டப்பட்டது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன் ஹீஹீ அப்ப பூரிக்கட்டை அடி எல்லாம் இப்ப கிடையாதா என்று கேட்பவர்களுக்கு பேசாமல் இருந்தால் அடி கிடைக்காது என்று எவன் சொன்னான் அதுக்கும் இதுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்து கொள்கிறேன்


மனைவின் தொடர் முயற்சியே கணவனின் வெற்றிக்கு காரணம் ஆமாம் அந்த கணவனிற்கு இரண்டாம் மனைவி கிடைத்துவிட்டாள்...இது அவனால் கிடைத்த வெற்றி அல்ல...

இந்த தகவலுக்கும் முதல் தகவலுக்கும் எந்த வித சம்பந்தமில்லை.....மனைவி சீக்கிரம் ஆபிஸ் போன நேரத்தில் சிந்திக்க சிறிது நேரம் கிடைத்ததால் இப்படி பட்ட சிந்தனைகள் வருகிறது...


கணவரின் நல்ல செயல்களுக்கு பின் மனைவியின் கண் உருட்டல் நிச்சயம் இருக்கும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. இன்னிக்கு நிச்சயம் பூரிக்கட்டை இல்ல உருட்டுக் கட்டையடி உறுதி...கடவுள் பலத்தைக் கொடுத்துவிட்டார்....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
  2. பைபிளின்படி மனுஷனைப் பாவம் செய்யும்படி தூண்டியது மனுஷிதான்.
    “புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ ?”
    “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்”

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.