Tuesday, July 10, 2018

இந்தியாவில் தமிழகத்தில்தான் 'இது' அதிகம்


தமிழகத்திற்கு வந்த அமித்ஷா பொதுக் கூட்டத்தில் பேசும் போது தமிழக அரசை பாராட்டி இப்படி ஒரு ஒன்றை சொல்லி சென்று இருக்கிறார்.

இந்தியாவில் தமிழகத்தில் தான் மிக அதிக ஊழல் நடக்குது- அமித்ஷா

இப்படி வெளிப்படையா சொல்லிட்டு போகிறார் ஆனால் இதற்கு ஒரு சிறு எதிர்ப்பைகூட சொல்ல திராணி இல்லாமல் எடப்பாடி , பன்னீர் செல்வம்  மற்றும் அமைச்சர்கள்  வாய் மூடி மெளனிகளாக  வெட்கம்கெட்ட அடிமைகள் போல இருக்கின்றனர்.


சரி இவர்களை விடுங்கள் இதை அறிந்தும் கவர்னரோ அல்லது மோடியில் தலமையிலான மத்திய அரசோ நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் தேசப்பற்றோ?


இப்படி கேட்டால் நாங்கள் கவனித்து கொண்டிருக்கிறோம் எங்களுக்கு இன்னும் ஒரு முறை ஆள வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்று பதில் சொல்லுவார்களோ என்னவோ

--------------------------------

மோடி எல்லா விழாக்களிலும் 70 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறார். ஒரு டீக்கடைக்கராரை பிரதமர் ஆகும் அளவிற்கு காங்கிரஸ் ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளது.- மல்லிகார்ஜுன கார்கே. நச்சுன்னு நடு மண்டையில் கொட்டினா மாதிரி பதில்.
அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. மல்லிகார்ஜுன கார்கேயின் பதில் சரியானதே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.