Saturday, April 14, 2018

@avargalunmaigal
தினத்தந்தியில் இப்படியும் செய்திகள் வரலாம்

சென்னை : மோடியின் தலைமையில் பாஜக கூட்டம் நடைபெற இருப்பதால் போலீசார் முன்னெச்சா¢க்கை நடவடிக்கையின் காரணமாக அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகளை கைப்பற்றி பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர் . அதுமட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை அடுத்த சில தினங்களுக்கு மிக பாதுகாப்பாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீர் மட்டும் பல மாநிலங்களில் பாஜகவை சேர்ந்த இந்துத்துவாவாதிகள் பெண்குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வது மக்கள் அறிந்ததே. அதனால் இது போன்ற சம்பவங்கள்  சென்னையிலும் நடக்க கூடும் என்று  ஐநா சபை தகவல் அனுப்பியதால் இந்த மாதி¡¢ முன்னெச்சா¢க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போலீஸ் உயர் அதிகா¡¢ தொ¢வித்துள்ளார் என்ற செய்தி விரைவில் வந்தாலும் ஆச்ச்சி¡¢யப்படுவதற்கில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்
14 Apr 2018

7 comments:

  1. வரட்டும் அப்பவாவது மக்கள் அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு தனது பிழைப்பை பார்ப்பார்கள்.

    ReplyDelete
  2. சூப்பர் தல. அப்படியே போகிற போக்கில் தினத்தந்தியையும் குப்புறத் தள்ளினதுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஊரில் நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் மோடிதான் காரணமா எனக்கும் மோடியைப் பிடிக்காது. இருந்தாலும் இது கொஞ்சம் டூ மச்

    ReplyDelete
    Replies


    1. சார் நீங்க சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன். இங்கே நான் மோடியை குறை சொல்லவில்லை. அவரின் கூட்டத்திற்கு வரும் பாஜக தொண்டர்களிடம் இருந்து காப்பாற்றதான் குழந்தைகளை போலீஸ் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்திருப்பதாக சொல்லி இருக்கிறேன்ன் ஒரு வேளை நான் சொல்லிய முறை உங்களுக்கு புரியவில்லையோ என்னவோ.....

      மனைவியை விட்டு ஒடிப் போனவர் அந்த விஷயத்திற்கு எல்லாம் லாய்க்கு இல்லைங்க அதுனால அந்த விஷயத்தில் அவர் மீது நான் குறை எல்லாம் சொல்ல மாட்டேன்

      Delete
    2. ஒரு பள்ளி பஸ்சில் தவ்று ஏதும் நடந்துவிட்டால் போலீஸ் வழக்கு தொடுப்பது கைது செய்வது அந்த பள்ளியின் நிர்வாகியின் மீதுதான் அது போல ஒரு டிபார்ட்மெண்டில் தவறு நடந்துவிட்டால் அதன் டிபார்ட் மேனேஜர்தான் பொறுப்பு அது போல ரயில்வேயில் மிக பெரிய வைபத்து ஏற்பட்டால் அந்த ரயில்வே அமைச்சர் மீதுதான் நாம் குற்றம் சொல்வோம். அது போல நாட்டில் நடக்கும் இது போன்ற கொடுர சம்பவங்களை இரும்பு கரம் கொண்டு அடக்காவிட்டால் அதன் பிரதமரை குறை சொல்லுவதில் தப்ப என்ன?


      ஏன் பாரதப் பிரதமர் சிறுமி பலாத்காரத்தில் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு சிறப்பு விசாரணை அமைக்க உத்தரவு ஒட்டு அவர்களை மிக கடுமையாக தண்டிக்க உத்தரவிட்டு மக்களின் மனதில் நம்பிக்கையை ஊட்டக் கூடாது. குற்றவாளிகள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி நமக்கு தேவை உடனடி தண்டனை அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி குற்றங்கள் நடை பெறாமல் இருக்க நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

      Delete
    3. எனது பதிவுகளில் அதிகம் மோடி வருவதற்கு காரணம் அவர்தான் இப்போது பேசப்படும் பொருள அதுமட்டுமல்லாமல் ஆள்பவர் அதனால்தான் அவரைபற்றி மிக அதிகமாக இங்கே பல பதிவுகள் வருகின்றன. மன்மீகன்சிங்க் ஆட்சியில் இருந்த போதும் அவரைபற்றி பல பதிவுகள் வந்து இருக்கின்றன அது போல ஜெயலலிதா கலைஞ்சர் ஸ்டாலின் அன்புமணி போன்ற பல தலைவர்களையும் கிண்டல் கேலி செய்து பல பதிவுகள் வந்து இருக்கின்றன


      மன்மோகன் சிங்க அரசைப்பற்றி இப்போது நாம் எழுதுவதில் பயனில்லை அது போல விபிசிங் போன்ற பல தலைவர்களையும் இப்போது விமர்சைப்பதில் பலன் இல்லை


      மேலும் நான் பல அரசியல் குருப்புகளில் இருக்கின்றேன் அங்கு மோடியின் ஆதரவாளர்கள் செய்யும் அட்ட்காசம் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது.அங்கு பல குருப்புகளில் உள்ள பலருக்கு பதில் கொடுப்பதற்காகவே இங்கு பதிவுகள் இடுகிறேன். அதுதான் காரணம் நம்ம் வலைப்பதிவு நண்பர்கள் படித்து கருத்து சொல்ல இங்கு நான் பதிவுகள் இடவில்லை.... அதுமட்டுல்ல இங்குள்ள பல வலைப்பதிவர்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு அதில் ஒரு குருப் அரசியல் பிடிக்காது என்று இங்கு சொல்லிவிட்டு வேறு பல இடங்களில் கேவலமான் அரசியல் பேசி வருகின்றனர் ஆனால் இங்கு வரும் போது கதை கவிதை கட்டுரை சமையல் குறிப்பு போட்டு நல்லவர்களாக நடிக்கிறார்கள்

      Delete
  4. சிந்திக்க வேண்டிய பதிவு. தந்தி டிவிக்கு ஒரு அடி கொடுத்தது மிகவும் சிறப்பு. கீழே விளக்கம் அருமை. நன்றி மதுரை தமிழா....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.