Sunday, August 31, 2014

 
avargal unmaigal




ஸ்டாலினின் பகுத்தறிவு கொள்கையில் மாற்றம் ஏன்?



விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருந்தார். இது பலரின் புருவத்தை சற்று தூக்க வைத்திருக்கிறது




இதர மத பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து கூறி வந்த தி.மு.க., தரப்பிலிருந்து விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்தா? ஏன் ஏதனால் எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது என்று பலரையும் பேச வைத்து விட்டது இந்த டுவிட்



இந்த மாற்றத்தை இவருள் ஏற்படுத்தியது இவரது மனைவியா? மோடியா? ஜெயலலிதாவா? தொடர் தோல்வியா என்று பார்த்தால் எல்லாம்தான் என்று சொல்லத் தோன்றுகிறது



இது வரை மற்ற மத விழாக்களுக்கு மட்டுமே திமுக தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் வெளியாகும். இந்து பண்டிகைகள் குறித்து அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய தொலைக் காட்சியில் கூட மற்ற மத பண்டிகை நாட்களில் அந்த பண்டிகையைக் குறிப்பிட்டு சிறப்பு நிகழ்ச்சி என கொண்டாடுவார்கள்; ஆனால் இந்து பண்டிகை நாட்களில் விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி என்று மட்டுமே குறிப்பிடுவார்கள். இதனால் பெரும்பான்மை மதத்தை சார்ந்த ஒரு பகுதி மக்கள் மன வேதனை அடைந்ததோடு திமுக இயக்கத்தின் மீது வெறுப்பும் வளர்த்து வந்தனர்.



இந்த நேரத்தில் மோடியின் வரவால் இந்துத்துவா சத்தம் சற்று அதிகம் ஒலிக்க தொடங்கியது. இந்த சத்தம் பகுத்தறிவு இயக்கமான திமுகவிலும் சலனத்தை ஏற்படுத்தி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகது.. உண்மையை சொல்லாப்போனால் இந்த காலத்தில் திமுகவில் இருக்கும் பலர் கலைஞரின்பால் உள்ள ஈடுபாட்டால்தான் இருக்கிறார்களே தவிர அந்த கட்சியின் கொள்கையான பகுத்தறிவால் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாமல் கலைஞரின் குடும்ப அரசியல் காரணமாக கலைஞரின் மீது உள்ள ஈடுபாடும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கம் காண்பிக்க ஆரம்பித்து இருக்கின்றன. கலைஞரின் மீது உள்ள ஈடுபாட்டால் பகுத்தறிவு வேஷம் போட்டவர்கள் அவரின் மீதுள்ள ஈடுபாடு குறைய குறைய அவர்களது பகுத்தறிவு என்ற போலி வேஷம் கரையத்தொடங்கி இந்துத்துவா மீது ஈடுபாடு கொள்ள ஆரம்பித்துள்ளனர். இப்படி மனம் மாறுபவர்களை மீண்டும் தங்களது கட்சியிலே அமர்த்தி கொள்ளவே ஸ்டாலின் தனது வேஷத்தில் சிறிதளவு மாற்றி விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார்




இன்று வாழ்த்து சொன்னவர் நாளை தனக்கு நிரந்தர தலைவர் பதவி கிடைக்க வேண்டி முருகனுக்கு காவடி எடுத்தாலும் ஆச்சிரியமில்லை.




மேலும் பிராமண சமுதாய ஒட்டுகளை பெற மார்கழி மாதத்தில் பஜனைகளை மேற்கொண்டாலும் மேறகொள்ளலாம்..



அப்படி நடந்தால் அவர் எப்படி இருப்பார் என்ற கற்பணைதான் இங்கு வந்த படங்கள். இது யார் மனத்தையும் மதத்தையும் புண்படுத்தபட போட்ட படங்கள் அல்ல என்பதை சொல்லிக் கொள்கிறேன்




இன்றைய சூழ்நிலையில் பகுத்தறிவில் இருந்து விலகி விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறியிருப்பதும், மற்றும் தி.முகவின் பழமைவாதிகளின் கண்மூடித்தனமான இந்து எதிர்ப்பு கொள்கையிலிருந்து தற்போது சற்றே மாறுபட்டிருப்பதும் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. Stalin's Vinayaka Chaturthi Greetings

மாற்றம் புதிதல்ல: தி.மு.க.,வில் கொள்கை மாற்றம் என்பது ஒன்றும் புதிதல்ல; ஆரம்ப காலத்தில் இருந்த திராவிட நாடு கோரிக்கையை, காலச் சூழ்நிலைக்கேற்ப அண்ணாதுரை கைவிடவில்லையா?

பழையன கழிதலும் புதிய புகுதலும் தவறில்லை என்பது பழமொழி. காலத்திற்கேற்ப சிந்தனையிலும் கொள்கையிலும் செயலிலும் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டால்தான். தனி மனிதனாக இருந்தாலும் இயக்கமாக இருந்தாலும் நிலைத்து நிற்க முடியும்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இந்த பதிவை வெளியிடும் நேரத்தில் திமுக தலைமை அந்தர் பல்டி அடித்து கீழ்கண்ட தகவலை வெளியிட்டு இருக்கிறது

Stalin's Vinayaka Chaturthi Greetings a Mistake, Says DMK .
Chennai: On Friday, DMK Treasurer MK Stalin, a self-confessed atheist, surprised many when he tweeted greeting all on the occasion of Vinayaka Chaturthi. However, today in a U-turn of sorts, the DMK leadership said the greeting was posted by mistake on …




8 comments:

  1. இப்படியுமா ? ''ஓட்டு''வீங்க.....

    ReplyDelete
  2. இவனுகள எதால அடிக்கிறது...
    வாழ்த்துச் சொன்னது சொல்லியாச்சு அப்புறம் என்ன மிஸ்டேக்கு ஆயிருச்சின்னு ஒரு நியூஸ்...
    ஸ்டாலின் பொண்டாட்டி கோயில் கோயிலா போகுது... இவனுக பகுத்தறிவு பேசுறானுங்க...

    ReplyDelete
  3. ஹாஹாஹா...தமிழா கடைசில இப்படி பல்டி அடிச்சுட்டாய்ங்களே! படங்கள் கற்பனை அருமை!

    ReplyDelete
  4. அண்ணா என்னைக்கு போனாரோ அன்னைக்கே பகுத்தறிவுக்கு மூட்டைக் கட்டியாச்சு.. அதற்கு அப்புறம் உடனடியாக ஆத்திகப் பக்கம் சாய்ஞா, 1940 - 1970 வரையிலான தலைமுறைக்காரர்களிடம் ஆதரவு இருக்காதோ பாருங்கோ. அதான் அந்த தலைமுறை எல்லாம் பாடை ஏறினதும் மெல்ல மெல்ல புற்றுக்குள் பூந்து கிடந்த இந்துப் பாம்பு எட்டிப் பார்க்குது. இனி திமுக - அதிமுக எல்லாம் இந்த பாம்புக்கே பால் ஊற்றும், பெரியாருக்கு பின்னாடி பகுத்தறிவையும், அண்ணாவுக்கு பின்னாடி தமிழுணர்வையும் சமாதி கட்டியாச்சு. சும்மா ஒப்புக்கு மட்டும் தான் பெரியார், அண்ணா திருவுரு எல்லாம். அவங்களோட கொள்கையையோ, போராட்ட இயக்கமோ, சமூக மாற்றமோ எல்லாம் நூலகங்களில் தூங்குகின்றன. சாதிக் கட்சிகள் முளைச்சாச்சு, மதவாதம் கிளைச்சாச்சு, மூட நம்பிக்கையை பட்டி தொட்டி எல்லாம் பரப்பியாச்சு, ஆதலால் இனி தமிழும், பகுத்தறிவும் மெல்ல மெல்ல செத்து மடியும். பெரியாரைப் போல இன்னொரு ஆளுமை உருவாகி வந்தாத் தவிர இவை மீண்டும் தமிழக வரலாற்றில் எழுச்சி பெறுவதற்கான சமிக்ஞைகள் ஒன்றும் காணோம்.. அந்த வெற்றிடத்தை இளைஞர் சமூகம் எதாவது நிரப்பினால் இன்னும் கொஞ்ச காலம் தமிழும், பகுத்தறிவு இயக்கமும் உயிர்ப்புடன் வைக்க உதவும்.

    ReplyDelete
  5. படம் போடுறதுல கில்லி சகா நீங்க:))
    அது பாவம் ஸ்டாலினுக்கே தெரியாமல் யாரோ கொடுதுட்டாங்கலாமே:))

    ReplyDelete
  6. நம்ம மதுரையில் சந்திக்கிறோம்...

    அன்புடன் DD

    ReplyDelete
  7. ஸ்டாலின் மனைவி இந்து மதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். குல தெய்வம் கோயிலுக்கு தவறாமல் போய் வருகிறார். தலைவர்கள் நமக்கு மட்டும் தான் உபதேசம் செய்வார்கள் போல..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.