Sunday, July 14, 2024

 யாருக்குத்தான் பிரச்சனைகள் சோகங்கள் இல்லை?

https://youtu.be/Y2zN6g_V57k



பிரச்சனைகள் , சோகங்கள் எல்லோருக்கும் உண்டு .
அதைச்  சமுக இணைய தளங்களில் சொல்லிக் கொண்டிருப்பதால்
எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை ..
உண்மையில் நம் பிரச்சனைகளுக்குச் சோகங்களுக்குத்
தீர்வு காண வேண்டுமானால்  

நம்முடன் படித்து வளர்ந்த  நம் நண்பனிடமோ,  
அல்லது
நம்முடன்  தினமும் வேலை
பார்த்துக் கொண்டிருக்கும் உற்ற நண்பனிடமோ
அல்லது நம்  மேல் உண்மையில் அக்கறை உள்ள
 நம் உறவுகளிடத்தோ சொன்னால்
அவர்கள் உண்மையான அறிவுரைகளையோ
அல்லது  நல்ல ஆலோசனைகளையோ
அவர்களால் முடிந்த உதவிகளையோ,
மனமுவந்து செய்வார்கள் .

அப்படி அல்லாமல் சமுக இணையதளங்களில் பதிந்தால்
எங்கோ உள்ளவர்கள் ஒரு கேர் இமோஜியைவோ
ஒரு லைக்கையோ அல்லது
ஒரு ஹார்ட் பட்டனையோ தட்டிவிட்டுக்
கவலைப்படாதே கடவுள் உன்னைக் காப்பாற்றுவார்  என்றோ
அல்லது காலம் உன் வாழ்க்கையை மாற்றும் என்றோ
ஒரு காசுக்கும் பிரயோசனமும் இல்லாத
அறிவுரையைத்தான்  கருத்தாக இட்டுச் செல்வார்கள் ..

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.