Sunday, August 14, 2022

@avargal unmaigal

 புரிந்தவன் பிஸ்தா!!!

ஆங்கிலேயரகளிடம் இருந்து சுதந்திரம் கிடைத்துவிட்டதே என்று அமைதியாக இருந்துவிடாதீர்கள் .. உள்ளுர்காரனே உங்கள் சுதந்திரத்தைப் பறித்துவிடுவான் .

யார் எதைச் சாப்பிடுவது எப்போது சாப்பிடுவது  என்று உங்களின் உணவில் கை வைக்க ஆரம்பிக்கிறானோ அப்போது உங்கள் சுதந்திரம் பறி போக ஆரம்பிப்பதற்குப் பிள்ளையார் சுழி போட ஆரம்பிக்கப்படுகிறது.



அப்போதே நீங்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் யார் என்ன படிப்பது ,என்ன வேலை செய்வது, எங்கே வசிப்பது என்று படிப்படியாக உங்களுக்கான சுதந்திரத்தை இழக்க ஆரம்பிப்பீர்கள்


 இது சுதந்திரத்திற்கான போராட்டம், நேற்றிலிருந்து, நாளைக்கான சுதந்திரம்! சுதந்திரப் போராட்டம் எப்போதும் நம் மனதில் அலை போல அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் அணையாத நெருப்பைப் போல இருக்க வேண்டும். சுதந்திர தினவிழா என்பது பெற்ற சுதந்திரம் அணைந்துவிடாமால் தொடர்ந்து எரியச் செய்வதற்கான ஒரு நிகழ்வுதான்



இந்தியர்கள் அனைவருக்கும்  எனது  சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
 
 
 
 பதிவிற்குள் மற்றுமொரு சிறிய பதிவு
 
நேரு உலகின் தலைசிறந்த அரசியல்வாதிகளின் என்ற பட்டியல் எடுத்தால் அதில் எப்போதும்  நேருவின் பெயர் நிச்சயம் இடம் பெறும் அப்படி அந்த பெயர் வாராவிட்டால் அது  ஒரு முழுமையான  பட்டியலாக இருக்க முடியாது,.  ஆனால் மோடிக்கு அப்படி ஒரு இடம் எப்போதும் கிடைக்கப் போவதில்லை அது மோடிக்கு எப்போது ஒரு மன உறுத்தலைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது

நேரு மறைந்து பல காலமாக ஆனாலும் அவரின் பெயர் மோடியை இன்னும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது அதனால் அவருக்கு நேருவின் மீது பொறாமை உண்டு அதன் காரணமாக அவர் மனதில்  எப்போது
ம் ஒரு காழ்ப்புணர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது இப்படி ஒரு காழ்புண்ர்ச்சி மோடிக்கு மூட்டு கொடுப்பவர்களுக்கும் இருக்கிறது. அதற்கு எடுத்துக் காட்டுதான் இந்த படம் சூரியனை கைகளால் முயற்சிதான் இது

 
@avargalunmaigal


 
 
அன்புடன்
மதுரைத்தமிழன்''


1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.