Sunday, December 12, 2021

 

@avargal unmaigal

அவன் ஏன் சுதந்திரத்தை இழக்கின்றான்?



கட்டிப்  போட்ட உயிரினங்கள் அனைத்தும்
சுதந்திரத்தை  இழக்கின்றன.
இதைப் படித்தவன்  அறிவான்.
அப்படி இருந்த போதிலும்
அவன் பெண்ணை தாலியால் கட்டிப் போட்டான்.
இயற்கையின் நிகழ்வு படி
அந்த பெண் சுதந்திரத்தை இழந்திருக்க வேண்டும்.
ஆனால் நடப்பது என்னவோ கட்டிப் போட்டவன் எவனோ
அவன்தான் தன் சுதந்திரத்தை இழந்து நிற்கிறான்




இந்த இணைய உலகில்
பலர் ஒரிஜனல் புகைப்படங்களை
 தங்களது புரொபைலில் பதிந்து இருந்தாலும்
 அவர்கள் போலித்தனமாகவே இருக்கிறார்கள்
அதனால்
அப்படிப்பட்ட இந்த போலி உலகத்திற்கு
 நாம் நிஜமானவர்கள் தான்
என நிரூபிக்கத் தேவையில்லை!




வாய் பேச முடியாதோர்  
மட்டுமல்ல...
கருத்தைச் சுதந்திரமாகச் சொல்ல முடியாத
மக்களும்

ஊமைகள் தான் இங்கு


 
@avargal unmaigal



காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி

நேற்றுவரை சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
பணம் (ஐந்து கோடி) வந்து நான் எண்ணிவச்சா
நிம்மதி ஆகுமடி



பேஸ்புக்கில் பல கிறுக்கர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஏதாவது ஒரு நடிகன் நடிகை  , இயக்குநர்   பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஏதாவது ஒரு தலைவன் இப்படி  எவரின் பிறந்தநாள் வந்தால் உடனே ஒரு பதிவு எழுதி வாழ்த்து சொல்லுகிறார்கள்.. என்னமோ அவர்கள் தான் இவர்களைத் தூக்கி வளர்த்த மாதிரியும் அவர்கள் கூடவே இவர்கள் வாழ்ந்து வந்த மாதிரி ஏதாவது எழுதி வாழ்த்து சொல்லி லைக்ஸ் பெறுகிறார்கள் அப்படி எழுதுபவர்களின் எவனாவது ஒருவன்  தன்னை  வயிற்றில் சுமந்த அன்னையையோ அல்லது தோளில் தூக்கிச் சுமந்த தந்தையையோ பற்றி எழுதி அவர்களின் பிறந்தநாள்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுவதில்லை ஏன் அவர்களை நினைவு கூட கூர்வதில்லை எனக்கென்னவோ இப்படிப் பதிவு எழுதுபவர்கள் சோறுதான் தின்று வளர்ந்தார்களோ அல்லது வேற ஏதாவது தின்று வளர்ந்தார்களோ என்று கேட்கத்தான் தோன்றுகிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. உங்களின் கோபம் புரிகிறது...

    ReplyDelete
  2. மதுரை தமிழன் உங்களின் ஆதங்கம் நியாயமானதே. கடைசி பாராவில் சொல்லியிருக்கும் டார்க் கறுப்பு எழுத்து வரிகள் சரியே.

    துளசிதரன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.