Sunday, December 26, 2021

 

@avargal unmaigal

புதிய ஆதிபராசக்தியும் புதிய இந்தியாவின் தலைவரும்

புதிய ஆதிபராசக்தி
அன்னபூரணியை தெய்வமாக
வழிபடுவது மூடநம்பிக்கை என்றால்
மோடியை நல்ல தலைவராக
நினைத்துப் பாராட்டுவதும்
மூடநம்பிக்கையில்
ஒன்றாகத்தானே இருக்க முடியும்

அன்பான இந்துமதத்துவர்களை
மனமாற்றம் செய்து
இந்துத்துவா தீவிரவாதிகளாக
மாற்றி அதில் குளிர்காய்வது என்பதுதான்
இந்திய ஆட்சியாளரின் நோக்கம்


இந்துத்வாக்களின் உழைப்பில்
இந்து மதத்தை அல்ல தன்னை
பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
ஒரு அரசியல் தலைவர் மோடிதான்


மோடியின் உழைப்பு நேரத்தில் பாதிக்கு மேல்
அவரின் போட்டோ சூட்டுக்கும்
அழகாகப் பொய் பேசுவதற்கான பயிற்சிக்கும்
 அவர் அழகாக உடுத்தும் ஆடைகளைத் தேர்வு செய்வதற்குமாக போய்விடுகிறது
மீதி நேரம் அதானி அம்பானிக்குமாய் போய்விடுகிறது
இதற்கு இடையில் நேரம் கிடைத்தால்தான்
இந்தியாவைப் பற்றிச் சிந்திக்க அவரால் இயலும்



விடியும் வரைதான்
தெரு விளக்கு பயன்படும்
அது போலத்தான்
ஆட்சிக்கு வரும் வரைதான்
மக்களின் பயன்பாடும்

அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.