Friday, June 25, 2021

 

 
@avargal unmaigal


உலகிலே மிகப் பெரிய கொடுமை என்ன தெரியுமா?

நாம தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கிட்டு இருப்போம். கடைசியாக ஒரு வழியாக நல்லா தூங்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் நமது உடம்பு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டி எழுப்பிவிட்டுவிடும். அதுதானய்யா மிகப் பெரிய கொடுமை (நேற்று இரவு அனுபவித்த கொடுமை இது )



மனைவி நம்மை பூரிக்கட்டையால் அடிச்சால் நம்மால் அவர்களைத் திருப்பி அடிக்க முடியாது.. நம்மால் முடிந்ததெல்லாம் கிச்சனில் இருக்கும் பாட்டில்களை எல்லாம் நன்றாக இறுக்கி முடி வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவதுதான்.. மவளே யார்கிட்ட

 
@avargal unmaigal



நாம் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத மனைவி நாம் பக்கத்துவீட்டம்மா கூட பேசுகிறதை எல்லாம் கவனமாகக் கேட்கிறார்கள்

 

 

 

@avargal unmaigal




அன்புடன்
மதுரைத்தமிழன்



6 comments:

  1. நேற்றிரவு ஏதோ சம்பவம் நடந்திருப்பது உறுதி...!

    ReplyDelete
    Replies
    1. நேற்று இரவுமட்டுமல்ல எல்லா நாட்களுமே சம்பவங்கள் நத்து கொண்டுதான் இருக்கின்றன

      Delete
  2. நேற்று பூரிக்கட்டை அடின்னு சொல்லுங்க! ஹாஹாஹா மறுபடியும் வெயிட்டிங்க் போல!!!!

    கீதா

    ReplyDelete
    Replies

    1. எல்லா நாட்களிலும் பூரிக்கட்டை அடி இல்லாமல் நாட்கள் முடிவதே இல்லை

      Delete
  3. பூரிக்கட்டைக்கு பதில் நடவடிக்கை செம...   நல்ல ஐடியா!

    வீட்டில் மனைவி காத்திருக்கிறாள், மெதுவாகச் செல்லவும் வார்த்தைக்கு இன்னொரு அர்த்தம் இன்றுதான் நீங்கள் சொல்லிதான் புரிகிறது!

    ReplyDelete
  4. பூரிக்கட்டை - பழகி இருக்குமே உங்களுக்கு!

    வீட்டில் மனைவி காத்திருக்கிறாள் - ஹாஹா... நல்ல ஹாஸ்யம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.