Wednesday, May 28, 2014

 
 
@avargal unmaigal


 
சரக்கை அடித்தால் முப்பதே நிமிஷத்தில் நீங்கள் எளிதாக ஆங்கிலம் பேசலாம் அதோடு மட்டுமல்லாமல் ஆங்கிலம் உங்கள் தாய்மொழிபோல பயப்படாமல் பேச வரும்
 
@avargal unmaigal



சரக்கு அடித்தவர்களை அடித்தாலும் உதைத்தாலும் உண்மையை மட்டும் பேசுவார்கள் உண்மையைத்தவிர வேறு ஏதும் பேசுவதில்லை

சரக்கு அடித்தவர்கள் நேச்சுரல் டான்ஸர். அவர்கள் டான்ஸ் அசல் யாரையும் அவர்கள் காப்பி அடித்து ஆடுவதில்லை

சரக்கு அடிப்பவன் விடாமுயற்சி கொண்ட வீரன் எத்தனை முறை கீழே விழுந்தாலும் எழுந்திருந்து மச்சி இன்னொரு பெக் குடுடா என்று கேட்பான்.

சரக்கு அடிப்பவர்களுக்கு மலச்சிக்கலே இருக்காது....

சரக்கு அடிப்பவனுக்கு உதவி செய்ய நண்பர்கள் பலர் வருவார்கள் உலகெங்கும் எளிதில் நட்பு வட்டம் பெருகும்

சரக்கு அடிப்பவர்கள் எந்த இடத்தையும் எளிதில் அட்ஜஸ் பண்ணிக் கொள்வார்கள் படுக்கப் பஞ்சு மெத்தைதான் வேண்டும் என்பதில்லை தெருவோரத்திலோ அல்லது குப்பை தொட்டிக்கு அருகிலோ தூங்கி கொள்ளத் தயங்க மாட்டார்கள்

சரக்கு அடிப்பவர்கள் உயிரோட இருக்கும் போதே சொர்க்கத்தை அனுபவிப்பார்கள்.
 
@avargal unmaigal



சரக்கு அடிப்பவர்கள்தான் தத்துவ மேதைகள். இப்படி பட்ட தத்துவ மேதைகளைக் காண் வேண்டுமானால் டாஸ்மாக் பக்கம் சென்று வாருங்கள்

சரக்கு அடிப்பவர்களால்தான் தமிழகம் வாழ்கிறது & முன்னேறுகிறது


சரக்கு அடிப்பவர் உள்ளொன்று புறமொன்று நினைத்துப் பேசுவதில்லை
 
@avargalunmaigal



அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும்

    ......................................................



    வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,

    தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது.

    - இணையுரு (WebFont) என்றால் என்ன? அதனால் என்ன பயன்?

    - இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?

    - இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?

    - அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?

    என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.

    தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...

    சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.

    இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html

    இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை

    1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891

    2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053



    (அல்லது)

    1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html

    2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.html



    மேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.



    நன்றி மற்றும் வணக்கம்

    ராஜு.சரவணன்



    படித்தவுடன் இதை நீக்கிவிடவும்

    ReplyDelete
    Replies
    1. இதை இங்கு வந்து படிப்பவர்களும் அறிந்து உபயோகப்படுத்தி கொள்ளலாம் என்பதால் இதை நீக்கவில்லை இல்லை நிக்கதான் வேண்டுமென்றால் சொல்லவும் நீக்கிவிடுகிறேன். தகவலுக்கு நன்றி

      Delete
  2. //சரக்கு அடிப்பவர்கள் உண்மையை மட்டும் பேசுவார்கள்//

    இப்பத்தான் புரியுது. பெண்களை நம்பாதேன்னு ஏன் சொன்னாங்கன்னு.

    அப்பறம் நீதிபதிக்கு முன்னால கூண்டுல நிக்கற குற்றவாளிங்க வாயில் ஊத்திட்டுக் கூட்டிட்டு வரலாம்ல. செஞ்சா நல்லது. இந்த வக்கீலுங்களும் திருந்துவானுங்க.

    கோபாலன்

    ReplyDelete
  3. சரக்கு அடிச்சுட்டு இந்த பதிவை எழுதினீர்களா? இல்ல சரக்கடிக்காமலே எழுதினீர்களா?

    ReplyDelete
  4. சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்
    இது தெரியாமல்தால் தான் பலர்
    தேவையில்லாமல் குடிப்பவர்களை
    குறை கூறுகிறார்கள்
    தமிழக அரசு இந்தப் பதிவை
    பயன்படுத்தி விற்பனையை அதிகரிக்க முயற்சிக்கலாம்

    ReplyDelete
  5. சரக்கு அடிப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் - சரக்குக்காக மட்டுமே பொய் சொல்வார்கள்! :)))

    உங்களின் பதிவினை ரசித்தேன் மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  6. சரக்கடிப்பவர்கள் ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்பார்கள் !
    சரக்கடிபவர்கள் அன்பு மேலிட கண்ணீர்விட்டு அழுவார்கள்!
    சரக்கடிப்பவர்கள் கர்ண பிரபுவாய் மாறி பையில் மிச்சமுள்ள பணத்தையெல்லாம் தானம் செய்வார்கள் இதையெல்லாம் விட்டுடீங்களே பாஸ் :)) நலமா சகோ?

    ReplyDelete
  7. மனைவி நிறைய நாள் அடிக்காவிட்டால் இப்படி எல்லாம் சிந்திக்க தோன்றுமாம்

    ReplyDelete
  8. சரக்குனால இம்புட்டு நல்ல விசய்ம் இருக்கா!? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

    ReplyDelete
  9. Respected Madurai Tamilan ji,
    i am one of the regular visitor's your blog. I wish to publish my Blogs here. this is for who are suffering & loss in the share market. they 'll ready to ask me related this.i am giving free services.if you wish you 'll publish my blogs here this is my blog ID : http://tradersguides.blogspot.in/
    Thanks in advance
    Regds P.Bharath

    ReplyDelete
  10. உங்க பதிவுல சரக்கு இருக்கறதை ஒத்துக்கறேன். ஹிஹிஹி

    ReplyDelete
  11. அவர்கள் உண்மைகள்!!! சரியான பெயர்தான் மதுரைத் தமிழா! அதை இந்த இடுகை முற்றிலும் சொல்லி விட்டது! மிகவும் ரசித்தோம்! மதுரைத் தமிழா....சரக்கு அடிப்பவர்கள் இங்கிலிஷ் மட்டுமல்ல தமிழ் நாடே எதிர்க்கும் இந்தியைக் கூட மிகவும் சரள்மாக பேசுவார்கள்1 அது எப்படி என்று மிகவும் ஆச்சரியமாக இருக்கும்! இந்தி எதிர்ப்புக்காரர்கள் இவர்களை என்ன செய்வார்கள்?!!!!

    ReplyDelete
  12. மதுரைத் தமிழரே மறந்து விட்டீர்களா எம்மை எல்லாம்?!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.