இந்த காலத்தில் தீக்குளிப்பது சீதைகள் அல்ல ராமன்கள்தான் ( மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் )
| 
அன்று 
ராமனின் சந்தேகத்தை 
      தீர்க்க 
சீதை ஒரே ஒரு 
      தடவைதான் 
தீக்குளித்தாள் 
ஆனால் 
இன்றோ சீதையின் 
      சந்தேகத்தை தீர்க்க 
ராமன்கள் தினம் தினம் 
தீக்குளிக்க 
      வேண்டியிருக்கிறது. | 
அன்று 
கலைஞர் தலைவராக 
      இருந்து 
மக்களுக்காக 
      போராடினார். 
அதே கலைஞர் 
இன்று 
தகப்பனாக மாறி 
தன் குடும்பத்தில் 
      உள்ள 
மக்களுக்காக 
      பாடுபடுகிறார் | 
| 
முன் பின் தெரியாத 
      பெண்களை 
அம்மா என்று 
      மரியாதையாக 
அழைக்கும் போது 
தமிழக முதலைமைச்சரை 
அம்மா என்று 
      அழைப்பதில் 
என்ன தவறு இருக்கிறது? | 
அன்று அப்துல்கலாம் 
      சொன்னார் 
கனவு காணுங்கள் 
      இந்தியா வல்லரசாகும் என்று 
ஆனால் அவர் சொல்ல 
      மறந்தது ஒன்று உண்டு 
இந்தியா வல்லரசாக 
      வேண்டுமென்றால் 
முதலில் நல்லரசாக 
      இருக்க வேண்டும் என்று | 
அன்புடன்
மதுரைத்தமிழன்

 
 
 
 Posts
Posts
 
 
arumai...
ReplyDeleteதீக்குளிப்பது ராமன்கள்..... :)
ReplyDeleteகலைஞர் - :))))) பாவம் என்ன பண்ணுவார்.....
ஆஹா தீ குளித்த அனுபவம் நிறைய இருக்கும் போல தெரியுதே....
ReplyDeleteசுருக்கமாகச் சொன்னாலும்
ReplyDeleteசொல்லவேண்டியதை அருமையாகச்
சொல்லிப்போனது மனம் கவர்ந்தது
நீங்கள் சொல்வது சரிதான்
இப்போது சீதைகள் ராமன்களை
நம்புவதில்லைதான்-
tha.ma 1
ReplyDeleteபின்னே சிதையில் குதித்த சீதையின் சாபம் சும்மா விடுமா ?
ReplyDeleteஆனால் அம்மா என்றால் அகம்பாவம் அகங்காரம் ஆணவம் தான்தோன்றித்தனம் போன்ற எதுவுமே இருக்காதே? அதெல்லாம் கவனிச்சீங்களா?
ReplyDeleteதீ வைப்பது யாருன்னு சொல்லவே இல்லையே.... தலீவா...........
ReplyDeleteஅப்துல் கலாம் சொல்லாமல் விட்டதுதான் நல்லா இருக்கு!
ReplyDeleteஅருமை......
ReplyDelete