Saturday, July 16, 2022

 

@avargal unmaigal

வடகொரியாவாக மாறி வரும் இந்தியா...

மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் மட்டுமல்ல ஜனநாயகமும் மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது


இந்திய மக்களே ! உங்களின் பேசும் அதிகாரம் பறிபோவதற்குத் தூரம் அதிகமில்லை . மக்களே அப்படியே நீங்கள் பேசினாலும்  நீங்கள் உண்மையை மட்டும் பேசக் கூடாது .அதுமட்டுமல்ல  எல்லா வார்த்தைகளையும் உபயோகிக்க கூடாது . அரசாங்கம் அனுமதி அளித்த வார்த்தைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் .மேலும் எந்த நேரத்திலும் உண்மைகளைச் சரிபார்க்கும் முயற்சியில் இறங்கிவிடக் கூடாது .முக்கியமாகச் சொன்னால் எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்கக் கூடாது. அரசியல் தலைமையை ஆராதிக்க வேண்டுமே தவிர அவர்களைக் கோமாளியாக நினைத்து நகைச்சுவைகளை அள்ளிவிடக் கூடாது


இதுமட்டுமல்ல நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், எங்கே பிரார்த்தனை செய்ய வேண்டும், என்ன அணிய வேண்டும், யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எல்லாம் உங்களின் கையில் இல்லை. அதைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஒற்றை தலைமைக்கு  மட்டுமே இருக்கிறது.



சொல்ல மறந்துட்டேன் நீங்கள் ‘மன் கி பாத்’ மட்டும் கண்டிப்பாகக் கேட்க வேண்டும் .அப்படிக் கேட்காதவர் தேசத் துரோகிகள் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்



டிஸ்கி : ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு எதிர்ப்புக் குரல் அவசியம். ஆனால் எதேச்சதிகார ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுகிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.