Saturday, May 21, 2022

 தயவு செய்து இவர்களிடம் இதைப் பற்றி மட்டும் கேட்காதீர்கள்

பெண்களிடம் வயதைப் பற்றிக் கேட்கக் கூடாது.
ஆண்களிடம்  வாங்கும் சம்பளத்தைப் பற்றிக் கேட்கக் கூடாது.
மோடியிடம் பணவீக்கம்,  பெட்ரோல் & கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்,  செய்தியாளர் சந்திப்பு, மத வெறுப்பு அரசியல் குற்றங்கள் பற்றிக் கேட்கக்கூடாது


இது ரொம்ப அநியாயம்டா ?

மன்மோகனிடம் எவரும்  நல்ல டீ எப்படிப் போடுவது என்று கேட்கவில்லை ஆனால் மோடியிடம்  மட்டும்  இந்தியப் பொருளாதார வளர்ச்சி பற்றிக் கேட்கிறார்கள் இது நியாம்மாடா?

அண்ணாமலையின் அரசியல் திமுகவை வீழ்த்துவதற்காக அல்ல அது அதிமுகவை அழிக்கத்தான் அதை அவர் கச்சிதமாகச் செய்து வருகிறார். தம்முடன் உறவு கொண்டவர்களை அல்லது தமக்கு உதவியர்களை (அத்வானி )அழித்து முன்னுக்கு வருவதுதான் மோடியின் செயல் அதைக் கொள்ளையாக எடுத்துக் கொண்டு அண்ணாமலை தமிழகத்தில் செய்து வருகிறார்


உணவு என்பது உண்ணும் வரைதான் உண்ட பின்  உடலிலிருந்து அது மலமாகத்தான் வெளிவருகிறது... அதிமுக என்பது பாஜகவிற்குக் கிடைத்த நல்ல உணவு அது இப்போது கழிவாகி  உணவு என்ற அந்தஸ்திலிருந்து மலம் என்ற  தகுதியை வந்து அடைந்திருக்கிறது



கொரோனா உலகில் ஏற்படுத்திய பாதிப்பை விட ரஷ்யா உக்ரைன் போரினால் உலகத்தில் பெரும்பான்மையான மக்கள் பொருளாதார பிரச்சனையால் சாவுகள் அதிகம் வரலாம்  என நினைக்கத் தோன்றுகிறது


இதுதான் உண்மை  முஸ்லீம்களுடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்களைச் சுற்றித் தோண்டுவது,  பெட்ரோல் அல்லது டீசல் விலையைக் குறைக்கக்  கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கும் ரகசியத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது பொருளாதார பிரச்சினைகளைத் திசைதிருப்புவது அல்ல, ஆனால் அவற்றை சரிசெய்வதற்குத்தான் நம்புங்கள் மக்களே நம்புங்கள்


இந்தியர்களின் இன்றையக் கால தேசபக்தி என்பது நல்லது செய்யாமல் இருப்பது மட்டுமில்லை நல்லது செய்பவர்களையும் செய்யவிடாமல் செய்வதே தேசபக்தியாகக் கருதப்படுகிறது



சில நேரங்களில்  தலைவர்கள் திட்டங்களை மாற்றும்  நேரத்தில்  அவர்களின் போலி முகமூடி அவிழ்ந்துவிடுகிறது


இந்த இந்து வலதுசாரி கோமாளிகளின் கருத்துப்படி ஷாஜகான் ஒரு இந்த மத வெறியாளன் அல்ல. அதனால்தான் கோயிலை இடித்து தாஜ்மஹாலைக் கட்டினாலும் சாமி சிலைகளை  நாசம் செய்யாமல் பாதுகாப்பாக அழகிய தாஜ்மஹாலின் அடியிலே ஒரு  நல்ல அறை அமைத்து அதில்  பாதுகாப்பாக வைத்து  வந்து இருக்கிறான்,, அவன் மட்டும் இந்துத்துவ வெறியாளன் போல இருந்திருந்தால் அதை அழித்துல்லாவா இருப்பான்..


பாகிஸ்தானில் இந்து கோவிலைச் சேதப்படுத்திய வழக்கில் 22 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டுத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியப் பாகிஸ்தானில் இந்து கோவிலைத் தாக்கினால், நீங்கள் பயங்கரவாதியாகக் கருதப்படுவீர்கள்; 'மதச்சார்பற்ற' இந்தியாவில், நீங்கள் ஒரு முஸ்லீம் மசூதியைத் தாக்கினால் நீங்கள் ஒரு அரசியல் தலைவராகிவிடுவீர்கள்.




இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள்.. ஆனால், கோவையில் பானிபூரி கடை நடத்துபவர்கள் யார்? - அமைச்சர் பொன்முடி
தமிழ் படித்தால் டாஸ்மாக் கடை வாசலில் க்யூவில் நிற்கலாம் என்பதை அமைச்சர் சொல்ல மறந்துவிட்டாரா அல்லது சொல்லாமல் மறைத்துவிட்டாரா


கடந்த 7 வருடங்களாக நேருவிடம் சண்டை போட்டுகிட்டு இருந்த நம்ம மோடிஜி இப்போ முகலாய மன்னர்களிடம் சண்டை போட ஆரம்பித்து இருக்கிறார். இந்த முகலாய மன்னர்களை வென்ற பின் ராவணனிடம்  போர் தொடுப்பார் அதன் பின் துச்சாதனிடம்  போருக்குப் போவார்.. அவர் அப்படித் தொடர்ந்து போரிட அடுத்த தேர்தலிலும் அவர்  வெற்றி பெற வேண்டும் அந்த வெற்றியைத் தேசத்தை நேசிப்பவர்கள் அவருக்கு அந்த வெற்றியைத் தர வேண்டும். ஜெய்ஹிந்த். பாரத்மாதாகீ ஜெய்


 சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பீட்ஸா ஹட்டுக்கு அடியில் உடுப்பி ரெஸ்டாரெண்ட் இருந்ததற்கான  ஆதாரங்கள் அரசுக்குக் கிடைத்துள்ளன.
   

 




இன்றைய நாளிதழின் தலைப்புச் செய்திகள்: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு..எல்பிஜி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது
ஒரு வேளை இன்றைய செய்தித்தாளை நீங்கள் தவறவிட்டால், கவலைப்பட வேண்டாம் - நாளைய பதிப்பில்  அதே தலைப்புச் செய்திகளை மீண்டும் படிக்கலாம்.

மோடி அரசு எதை ஆரம்பித்தாலும் அதை தொடர்ந்து செய்யுமே தவிர அப்படியே விட்டு விடாது

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.