Sunday, August 8, 2021

 மோடியிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் மனசாட்சி சொன்னப் பதில்கள்

 

 மதுரைத்தமிழன் : மோடிஜி பி. எம் .கேர் மூலம் பெறப்பட்ட பணம் எவ்வளவு அதை என்ன செய்தீர்கள்?

மோடிஜி : நான் என்ன செய்தேன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. தெரிந்த விஷயத்திற்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை.

@https://avargal-unmaigal.blogspot.com


மதுரைத்தமிழன் :  நாட்டுமக்கள், நீங்கள் நல்லது செய்வீர்கள் என்று நம்பித்தானே உங்களைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்கள்?

மோடிஜி : ஆனால் நாட்டுமக்களுக்கு நல்லது செய்வதற்காக நான் தேர்தலில் நின்று ஜெயிக்கவில்லையே


@https://avargal-unmaigal.blogspot.com


மதுரைத்தமிழன் : நீங்கள் கல்லூரியில் படித்தது உண்மையா?

மோடிஜி : நான் சொல்லுவதை எல்லாம் நீங்கள் நம்பிவிடுவீர்களா?



@https://avargal-unmaigal.blogspot.com





மதுரைத்தமிழன் :நீங்கள் டீ விற்றது உண்மைதானா?

மோடிஜி : நீங்கள் பார்க்கவில்லை வாங்கி குடிக்கவில்லை என்றால் அது  உண்மைதான்.

 
@https://avargal-unmaigal.blogspot.com



மதுரைத்தமிழன் :நீங்கள் தலைவரானதற்கும் பிரதமர் ஆனதற்கும் நன்றி சொல்வதென்றால் யாருக்கு சொல்வீர்கள்?

 மோடிஜி : ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் அதன் தலைவர்களுக்கு மட்டும்தான்
 
@https://avargal-unmaigal.blogspot.com



மதுரைத்தமிழன் :அத்வானி உங்களின் குருவாக இருந்து வழி நடத்தியவர்தானே அவரை ஓரம்கட்டிவிட்டு நீங்கள் பிரதமர் ஆகிவிட்டது பற்றி?

மோடிஜி : கற்றுத் தரும் ஆசிரியர்கள் விஞ்ஞானிகளாகவோ டாக்டர்களாகவோ அல்லது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக ஆக முடியாது ,கற்றுக் கொள்பவன்தான் அப்படி ஆகமுடியும். அது போலத்தான் நானும் பிரதமர் ஆகி விட்டேன் அவர் இன்னும் குருவாகவே இருக்கிறார்.


 
@https://avargal-unmaigal.blogspot.com



மதுரைத்தமிழன் : இந்தியா சுதந்திரம் பெற்ற பின் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன....ஆனால் சம்ஸ்கிருதத்திற்கு என்று எந்த மாநிலமும்  ஒதுக்கப்படவில்லையே ஏன்?

மோடிஜி : அப்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இப்போது போல வலுவாக இல்லாததும் மேலும் நான் அப்போது  சின்னப் பையனாக இருந்ததாலும்தான்..

 
@https://avargal-unmaigal.blogspot.com


மதுரைத்தமிழன் :அம்பானி. அதானி அவர்களின் நல்லதிற்காகவே நீங்கள் திட்டங்கள் தீட்டிச் செயல்படுவதாக  சொல்கிறார்களே?

மோடிஜி : நீங்களே சொல்லிட்டீங்க அவர்களின் நல்லதிற்காக திட்டம் போடுகின்றேன் என்று, நண்பர்களின் நலத்திற்கு உதவுவது தப்பு  இல்லையே?

 
@https://avargal-unmaigal.blogspot.com



மதுரைத்தமிழன் :மக்களின் நலத்திற்குத் நீங்கள் போட்ட திட்டங்களால் மக்கள் பலன் ஏதும் பெறவில்லையே?

மோடிஜி : நான் கீதையை படித்து அதைப் பின்பற்றுபவன் .அதனால் என் கடமையைச் செய்கின்றேன். அதாவது திட்டம் போடுவது அதன் பிறகு பலனை எதிர்ப்பார்ப்பதில்லை

 
@https://avargal-unmaigal.blogspot.com




மதுரைத்தமிழன் :கொரோனா ஆரம்பித்ததில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துவிட்டனவே?

மோடிஜி : அதனால் என்ன நான் வெளிநாடு செல்லாததால் சேவீங் ஆகும் பணத்தை வைத்தே இந்திய மார்க்கெட்டில் முதலீடு செய்து இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியுமே

 
@https://avargal-unmaigal.blogspot.com


மதுரைத்தமிழன் :தமிழக மக்களுக்கு நீங்கள் நல்லது ஏதும் செயவ்தில்லையே ஏன்?

மோடிஜி : அவர்கள் எனக்கு என்ன நல்லது செய்துவீட்டார்கள் பதிலுக்கு அவர்களுக்கு நான் நல்லது செய்யவதற்கு


 
@https://avargal-unmaigal.blogspot.com


மதுரைத்தமிழன் :ஏன் தமிழக பாஜக  தலைவர்களால் தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியவில்லை?

மோடிஜி : அவர்கள் எல்லோரும் துக்களக்கின் வாசகர்களாக இருக்கிறார்களே அதனால்தான்

 
@https://avargal-unmaigal.blogspot.com




மதுரைத்தமிழன் :சங்கிகளால் தமிழக சாணக்கியர் என்று சொல்லப்படும் குருமூர்த்தி பற்றி சில வரிகள்?

மோடிஜி : பூணல் அணிந்த ஒரு எடப்பாடி அவர்

 
@https://avargal-unmaigal.blogspot.com


மதுரைத்தமிழன் :ஸ்மிதிராணி பற்றி?

மோடிஜி : நான் படித்த கல்லூரியில் எனக்கு ஜுனியர் அவர்

 
@https://avargal-unmaigal.blogspot.com



மதுரைத்தமிழன் :ரஜினிப் பற்றி சில வரிகள்?

மோடிஜி : அவர் ஒரு சுயநலவாதி தேசதுரோகி தேசநலன் முக்கியம் என்று கருதி இருந்தால் அவர் கட்சி ஆரம்பித்து ஸ்டாலின் முதல்வர் ஆனதை தடுத்து இருக்கலாம்

 
@https://avargal-unmaigal.blogspot.com



மதுரைத்தமிழன் : தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றி சில வரிகள்?

மோடிஜி :  என்னை எதிரி என்று சொல்லிக் கொண்டே நட்பு உறவு கொள்ள நினைக்கும் ஒரு மனிதர். கலைஞர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அவர் என் கொள்கைகளைத்தான் எதிர்க்க்கிறார் என்னை அல்ல..

 
@https://avargal-unmaigal.blogspot.com



அன்புடன்
மதுரைத்தமிழன்


5 comments:

  1. எல்லா கேள்விகளுமே ஸூப்பர் தமிழரே..... .

    ReplyDelete
  2. நல்லா இருக்கு... ஆனால் இல்லாத ஒன்று பதில் சொல்லி உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக சொன்னீர்கள் தனபாலன்

      Delete
  3. நல்ல கற்பனை. புன்னகைக்க வைக்கிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.