Sunday, March 25, 2018

@avargalunmaigal
சண்டே சமையல்........ Punjabi malai kofta மலாய் கோ·ப்தா


சண்டே என்றாலே எல்லார் வீட்டிலும் நிச்சயம் ரிலாக்ஸாக இருந்து நன்றாக சமைத்து சாப்பிடுவார்கள் அல்லது ரெஸ்டாராண்டுக்கு போய்சாப்பிடுவார்கள். காரணம் அன்றுமட்டும்தான் அனைத்து குடும்பத்தாரும் ஒன்று இணைந்து இருக்க முடியும்..

அப்படிபட்ட  சண்டே தினத்திற்கான, நான் செய்த மலாய் கோ·ப்தா ரிசிப்பியை இங்கே பகிர்கிறேன். இதை சாதம் ரொட்டி நாண் போன்றவைகளுக்கு பயன்படுத்தலாம். இதை செய்வது மிக எளிது.


தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் (Onion) - 2
தக்காளி( Tomoto ) - 3
முந்திரி பருப்பு (cashew ) - 3 spoon
இஞ்சி பூண்டு பேஸ்ட் (ginger & garlic) 1 spoon

சீஸ் ( cheese) - 200 kiraram
உருளைக்கிழங்கு (Pototo) - 3
பீன்ஸ்(peans) - 8
கேரட்(carrot) - 1
பச்சை மிளகாய் 2

உப்பு- தேவையான அளவு

கரம் மாசாலா- 2  ஸ்பூன்
கொத்தமல்லிபவுடர் 2 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் 1 ஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலை - (dry methi leaves)சிறிய அளவு
மைதா -  5 ஸ்பூன்
தேன்/சுகர் 1 ஸ்பூன்
ஆயில்- பொரிக்க தேவையான அளவு
க்ரீம்-

செய்முறை:   முதலில் உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோல்  நீக்கி மசித்து வைக்கவும். அதன் பின் அதில் சீஸை துருவி வைக்கவும். பின்பு கேரட் பீன்ஸை மிக பொடியாக நறுக்கி அதை சிறிது வேகவைக்கவும்( நான் மைக்ரோவேவில் நீர் விடாமல் 2 நிமிஷங்கள் வேக வைப்பேன்) நீங்கள் வடை சட்டியில் வதக்கி எடுத்தாலே போதும். அப்படி செய்து எடுத்த பின் இந்த பீன்ஸையும் கேரட்டையும் ஒரு மஸ்லின் துணியில் போட்டு அதில் இருக்கும் நீரை நன்கு வடிக்கட்டவும். ஒரு ஸ்பூண் முந்திரி பருப்பை மிக பொடிதாக உடைத்து வைத்து கொள்ளவும்


அதன் பிறகு உருளைக்கிழங்கு சீஸ் கேரட் பீன்ஸ் மற்றும் பொடியா நறுக்கி வைத்த மிளகாய் ஒரு ஸ்பூன் சில்லி பவுடர் கொத்தமல்லி பவுடர் கரம்மாசாலா  பொடித்து வைத்த முந்திரி பருப்பு உப்பு போன்றைவைகள் போட்டு ஒன்றாக நீர்விடாமல் கெட்டியாக பிசைந்து வந்த்து கொள்ளவும். அதன் பின் அதை தேவையான் வடிவத்தில் நீளமாகவே அல்லது உருண்டையாகவோ செய்து அதை மைதா மாவில் போட்டு சற்று உருட்டி எடுக்கவும் அப்போதுதான் அதில் உள்ள மாய்ச்சர் போய் பொரித்து எடுக்க நன்றாக வரும். இந்த உருண்டைகளை கோல்டன் ப்ரவுன் பதத்தில் மிதமான சூட்டில்  பொரித்து எடுத்து வைக்கவும்

அதன் பின் இன்னொரு வடை சட்டியை வைத்து அதில் சிறிது எண்ணெய்விடவும் அது நன்றாக் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும் அது சற்று வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்த தக்காளியை போட்டு சிறிது வதக்கி அதை ஆறவிடவும்.

இதற்கு இடையில் மீத மிருக்கும் முந்திரி பருப்பை நீரில் ஊறவிடவும்.

இந்த வெங்காயம் தக்காளி ஆறியவுடன் அதில் ஊற வைத்த முந்திரியை போட்டு மிக்ஸியில் நன்கு அறைத்து கொள்ளவும்

அதன் பின் நன்கு வாய் அகன்ற பாத்திரத்த்தில் அல்லது வடை சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி அது சிறிது சூடனவுடன் காஷ்மீரி சில்லி பவுடரை போட்டு கிளறி உடனே அதில் நாம் அரைத்து வைத்த பேஸ்டை போட்டு கிளறவும் அதில் மீதி உள்ள மசாலாப் பொடிகளான கரம்மாசாலா கொத்தமல்லி பொடி உப்பு மேத்தி லீல்வ்ஸ்  தேன் எல்லாவரையும் போட்டு கிளறி அதில் நாம் பொரித்து வைத்த உருண்டைகளையும் போடவும் இறுதியில் அதன்மேல் வேண்டுமென்றால் க்ரீம் ஊற்றலாம் அது போல கொத்தமல்லி இலைகளையும் போடலாம்..


அவ்வளவுதானுங்க ரொம்ப சிம்பிள்...யாரும் எளிதில் செய்யலாம்... இதை செய்ய எடுக்கும் நேரம் 40 நிமடங்கள் மட்டுமே


நான் செய்ததை எங்கவீட்டில் எஞ்சாய் சாப்பிட்டு மகிழ்ந்தாங்க அடுத்தவாரம்  சண்டே உங்க வீட்டுல கண்டிப்பாக செஞ்சு சாப்பிடுங்க



அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. மலாய் "குப்தா"!

    வெஜ்தானே? ஒருமுறை செய்து பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. இது வெஜ்தான் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்... நார்த் இண்டியா பக்கம் போன உங்களுக்கு இது பற்றி தெரிந்திருக்கும் என்று அல்லவா நினைத்து இருந்தேன்

      Delete
  2. மலாய் கோஃப்தா! குப்தா அல்ல! பல காய்கறிகளில் - இப்படி கோஃப்தா செய்யலாம்.

    நன்றாக இருக்கும். இங்கே நிறைய சாப்பிட்டதுண்டு. வீட்டில் செய்யும் பொறுமை இல்லை! அதுவும் தனி ஒருவனுக்கு!

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிக்காடியதற்கு நன்றி வெங்கட்ஜி

      Delete
  3. மிகவும் பிடித்தது கோஃப்தா சப்ஜி!!! வெரைட்டி வெரைட்டியா செய்யலாம் கோஃப்தா...செய்வதுண்டு...மலாய் கோஃப்தா ரொம்பவே பிடிக்கும் மதுரை சகோ!

    மதுரை சகோ உங்கள் குறிப்பு செமையா இருக்கு..அருமையா சமைக்கறீங்க...ஸோ வந்தா கிடைக்கும்னு சொல்லுங்க!!! ஹா ஹா ஹா..உங்கள் குறிப்புகளையும் குறித்துக் கொண்டேன்...

    நீங்க இந்த மாதிரி எல்லாம் செய்யறதுனால சில டிப்ஸ் தரலாம்தானே...

    ....மலாய் கோஃப்தா பொதுவாக நீங்கள் செய்திருப்பது போல் தான் எல்லா இடங்களிலும் செய்கிறார்கள். மலாய் என்றாலே க்ரீம்....நீங்கள் சொல்லியிருப்பது போல் க்ரீம் கொஞ்சம் மேலே ஊற்றிக் கொடுத்துடுவாங்க..

    ஆனா க்ரேவியே மலாய் அதாவது ரெட் கலரில் இல்லாமல் ஆஃப் வொயிட் கலரில் இருக்கணும்...இதே குறிப்புகள்தான் ஆனால் தக்காளி சேர்க்காமல், தயிர், க்ரீம் (நான் அமுல் க்ரீம் வாங்கிச் சேர்ப்பதுண்டு) என்று சேர்த்து மற்றதெல்லாம் சேம் தான்....வெரி ரிச் க்ரேவி...இதுதான் ஒரிஜினல் மலாய் கோஃப்தா க்ரேவி...

    பேசிக்காக ப்ரௌன் க்ரேவி (புளியும் தக்காளியும் கலந்ததாக இருக்கும்..) வொயிட் க்ரேவி இது க்ரீம், தயிர் என்று கலந்து, ரெட் க்ரேவி இது பொதுவாக நாம் எல்லாவற்றிற்கும் செய்யும் தக்காளி மெயினாகக் கலந்து...செய்வது, க்ரீன் க்ரேவி இது ஏதாவது கீரைகள் கலந்து செய்வது பாலக், கொத்தமல்லி புதினா இப்படி ஏதாவது ஒன்று கலரும் க்ரீனாக....இவை அடிப்படை.க்ரேவிகள்..இதில் கோஃப்தா அலல்து பனீர், காய்கள், ஸ்டஃப்ட் கத்தரிக்காய், ஸ்டஃப்ட் குடை மிளகாய் என்று எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்...
    மலாய் கோஃப்தா என்பதை பார்த்ததும் ஓடி வந்துட்டேன்...

    கீதா


    ReplyDelete

  4. டிப்ஸ்க்கு நன்றி நீங்கள் சொல்லும்படிதான் நான் தயாரிப்பேன் ஆனால் எங்கவூட்டாம்மாவுக்கு கரிம் சமையலில் அவ்வளவாக சேர்கக கூடாது பாருங்க் அவங்க் வருவதற்குள் சமைச்சு முடிச்சிரலாம் என்றுதான் நினைத்தேன் ஆனால் முடிப்பதற்குள் வந்த சத்தம் கேட்டதால் அவசர் அவசரமாக் கிரிம் சேர்த்தேன் அதனால் இந்த படத்துல கூட அந்த கிரிம் அள்ளி தெளித்தால் போல இருக்கு


    அமெரிக்கா வந்தால் கண்டிப்பாக் கூபிடுங்கள் நேறம் கிடைத்தால் கண்டிப்பாக சந்திப்போம் நல்ல வெஜ்சாப்பாடு நிச்சயம் கிடைக்கும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.