Friday, March 23, 2018

செயல் தலைவர் ஸ்டாலின்  இப்படியும் செயல்பட்டாலாமே...

ஸ்டாலின் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுகவிற்கு அழுத்தம் கொடுத்து சட்டசபையில் போராடுகிறார். பிரதமரை சந்திக்க முயற்சிக்கிறார்.இது எல்லாம் நல்லதுதான் அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியை சந்தித்த்து இது பற்றி பேசி அவரை கர்நாடாகவிற்கு அழைத்து. கர்நாடாக முதலமைச்சருடன் அமர்ந்து பேசி இரண்டு மாநிலத்திற்கும் எது நல்லதோ அதை சகோதரத்துவதுடன் தீர்க்க முயற்சிக்கலாமே. நமது அரசியலைவிட இரு மாநில மக்களின் நலன் முக்கியமே என்று எடுத்துரைக்கலாமே.. இந்த முயற்சி வெற்றி பெறலாம் அல்லது பெறாமல் போகலாம் ஆனால் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் உருவாக வாய்ப்புக்கள் உண்டே


இப்படி உருப்படியாக செய்ய ஸ்டாலின் ஏதாவது முயற்சிக்கலாமே இப்படி செய்வதால் தன்னை மாறுபட்ட தலைவராக மக்களிடம் காட்டலாமே. சும்மா வெளிநடப்பு செய்வதும் வெளியே வந்து டிவிகாரர்களிடம் பேட்டி கொடுப்பது ஒரு நாள் போராட்டம் மட்டும் அறிவிப்பதால் உங்களுக்கு மட்டுமில்லை யாருக்கும் எந்தவித பலனும் இல்லை என்பதை உணர்வீர்களா



அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. அப்புறம் எப்படி அவர் சட்டையைக்கிழித்து அரசியல் செய்யமுடியும்? எப்படி எதிர்கால முதல்வர் ஆகமுடியும்?)))

    ReplyDelete
  2. ஆளுங்கட்சியா இருந்தாலும் அவர் அதை செய்ய மாட்டார். கர்நாடக முதல் அமைச்சருடன் வேண்டாம். நீதி ம்ன்ற உத்தரவுப் படி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ராகுல் கதியை ஒரு அறிக்கை விட சொன்னால் கூட போதும்

    ReplyDelete
  3. நீங்க ஆண்டி திராவிடன் அதுனாலதான் இப்படி சொல்லுறீங்க ஆனால் மோடியுடன் ஒப்பிடும் போது ஸ்டாலின் சொக்க தங்கம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.