Sunday, March 6, 2016


avargal unmaigal
நீங்களும் ஒரு நாள் நீதிபதியாகி தீர்ப்பு சொல்ல ஆசையா?

நீங்கள் ஒரு நாள் நீதிபதியாக  எளிதில் ஆகலாம் ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் தீர்ப்பு தவறும் நீதிபதிகளுக்கு ஐந்து வருட சிறைவாசம் நிச்சயம்

நம் மக்கள் பலருக்கும் நாம் ஒரு நாள் முதல்வராக இருந்தால் நாட்டில் நடக்கும் அட்டுழியங்கள் அனைத்தையும் ஒழித்துவிடலாம் என்று  முதல்வன் படத்தில் நடித்த அர்ஜுன் மாதிரி ஆகிவிடலாம் என்று நினைப்பதுண்டு.

அது போல நாட்டில் நீதிபதிகள் தவறான  தீர்ப்பை அளிக்கும் போதும் ச்சே நாம் மட்டும் ஒரு நாள் நீதிபதியாக இருந்தால் சரியான தீர்ப்பு அளித்து தவறு செய்தவர்களை தண்டிக்கலாம் என்று நினைப்பார்கள்.

அப்படி நினைப்பவர்களில் நீங்களும் ஒருத்தராக இருந்தால் உங்களுக்கோர் அரியவாய்ப்பு. நீங்களும் ஒரு நாள் நீதிபதியாகி நியாமான தீர்ப்பை வழங்கலாம்.



இதோ நீங்கள் நியாயமான தீர்ப்பு வழங்க உங்கள் முன்னால் இருக்கும் வழக்கு ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு. இந்த வழக்கில் குமராசாமி தவறான தீர்ப்பை வழங்கியதாக பலரும் கிண்டலும் கேலியும் செய்து தங்கள் கண்டனத்தை வழங்கி இருக்கிறார்கள் . இந்த வழக்கில் சட்டம் வளைக்கப்பட்டு உடைத்து போட்டதாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களோ இதை சரியான நியாயமான தீர்ப்பு என்று சொல்லி கொண்டாடி வருகிறார்கள்.

இந்த வழக்கு மீண்டும் மக்கள் மன்றத்திற்கு வருகிறது. இந்த வழக்கை ஆராய்ந்து ஒரு நாள் நீதிபதியாகி நீங்களும் நியாயமாக தீர்ப்பு அளிக்கலாம். அதற்கான வாய்ப்பு மே 16 ல் வருகிறது. அந்த நாளில் ஜெயலலிதா தப்பு பண்ணி இருந்தால் அதற்கு தண்டணையோ இல்லையென்றால் விடுதலையோ தரலாம்.

ஜெயலலிதா வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் தவறு செய்யவீல்லை என்றும் தோற்றால் அவர் தப்பு பண்ணியிருக்கிறார் என்றும் கருதலாம்.

என்ன நான் சொல்லுவது சரிதானே? இப்ப சொல்லுங்க உங்களுக்கு நீதிபதியாக ஆசையா இல்லையா?


அன்புடன்
மதுரைத்தமிழன்




8 comments:

  1. என்ன ஒரு தீர்க்கமான பதிவு...
    உண்மைதான் ...நான் நீதிபதியாக இருக்கபோகிறேன்

    ReplyDelete
  2. வாதி தவறானவர் என்றால் பிரதிவாதி சரி என்றோ, பிரதிவாதி தவறானவர் என்றால் வாதி சரியானவர் என்றோ ஆகுமே,, என்னைப் பொறுத்தவரை இந்த என் தீர்ப்பு இருவருமே தண்டனைக்குரியவர்கள். அனைவரும் 5 வருடம் தப்பிக்க,,,,,

    ReplyDelete
  3. என்ன சொல்வது உண்மையச்சொன்னா ..வலி எனக்கு வந்திடுமோன்னு பயத்துடன் நீதிபதியாகின்றேன் சார்.

    ReplyDelete
  4. ஜெயலலிதா குற்றமற்றவர் என்று அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் கருதலாம் என்பதில் எனக்கு உடன் பாடில்லை அறிவுக்கும் உணர்வுக்கும்நடக்கும் போட்டியில் பெரும்பாலும் உணர்வே வெற்றி பெறுகிறது . இந்த பின்னூட்டம் ஏற்கப் பட்டாலும் என் அஞ்சல் பெட்டியில் டெலிவரி ஃபெயில்ட் என்று வரும்

    ReplyDelete
  5. மக்கள்தான் 1996ல் அவருக்குத் தண்டனை வழங்கிவிட்டார்களே... இப்போ வர்ற தேர்தல், அதிமுகவே இருக்கட்டுமா அல்லது திமுக வரலாமா? ரொம்ப மார்ஜினலாத்தான் தீர்ப்பு இருக்கும்.

    நீங்கள் சொல்வதைப் பார்த்தால், 2ஜி வழக்குக்கு நாங்கள் தீர்ப்பு சொல்ல 2021வரை காத்திருக்கணுமா?

    ReplyDelete
  6. இது அவருக்கு மட்டுமான நீதிமன்றம் என்றால் பரவாயில்லை... கூடவே பல குற்றவாளிகளுக்கும் சேர்த்துத்தானே நீதி கொடுக்கப்படுகிறது. மேலும் இதுவா , அதுவா என்ற கேள்வியும் ... அப்புறம் நாங்களும் அந்தக் கொள்ளையில் கொஞ்சமாய் பங்கு வாங்கியிருக்கோமே அப்படிங்கற நினைப்பும் சரியான தீர்ப்பை வழங்க முடியாத நீதிபதியாகிறோம் நாங்கள்....

    ReplyDelete
  7. மிகச் சரியானதுதான் உங்கள் பதிவு தமிழா. ஆனால் பாருங்கள் நாங்கள் ஒருநாள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கினாலும், அவர் வெற்றி பெற்றால் எங்கள் தீர்ப்பு என்னாவது? கும்பலோடு கோவிந்தா போலத்தானே ஆகும்? எங்கள் தீர்ப்பு தனியாகத் தெரியுமா சொல்லுங்கள்.

    மனம் சலித்துத்தானே போகும்? சரி இங்கிருப்பவை ஒன்று கூட உருப்படியாக இல்லாத போது யாருக்குத் தீர்ப்பு அளிப்பது? நிறைய அளிக்க வேண்டுமே. அப்படியே அளித்தாலும் எங்கள் தீர்ப்பு எல்லாவற்றுடனும்தானே.....நாங்கள் நல்ல வாக்காளர்கள் அல்லவே..அதாவது உங்கள் வார்த்தைகளின்படி பார்த்தால் நல்ல தீர்ப்பை வழங்கமுடியாத நீதிபதிகள். எங்கள் தீர்ப்பிற்கு மதிப்போ, வேல்யூவோ இல்லாத போது.??? பலகோடி ஜனங்களில் அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பவர்கள் வெகு குறைவே. உணர்ச்சிகள் மேலெழும்பும் மக்கள் கூட்டம்தான் அதிகம். அறியாமை ஓங்கி இருக்கும் போது என்ன செய்ய முடியும் தமிழா..அட போங்கப்பா....எனது தனிப்பட்டக் கருத்து விருப்பம் என்று கூட சொல்லலாம்...நோட்டா வென்று எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஆட்டம் காட்டும் ஒன்றாக இந்தத் தேர்தல் ஆகி அவர்கள் பயந்து ஒரு புரட்சி வராதா என்று தோன்றுவதுண்டு அவ்வப்போது.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.