Sunday, August 5, 2012


தமிழகத்தில் இருக்கும் எழுதாத சட்டம்

தவறு செய்பவர்களை
சிறையில் அடைத்து கஞ்சி தருவது
தமிழக அரசியல்வாதிகளால் எழுதப்பட்ட சட்டம்
ஆனால்
தவறு செய்யும்
அரசியல் தலைவர்கள்
தானாக வந்து
ரமலான் மாதத்தில் கஞ்சி சாப்பிடுவது
தமிழகத்தில் இருக்கும் எழுதாத சட்டம்

~~~~~ ******** ~~~~~~

நாம் காசு கொடுத்தால்தான்
மொட்டை அடிப்பார் சலூன் காரர்
ஆனால்
நாம் காசு கொடுக்காவிட்டாலும்
மொட்டை அடிப்பார்கள் தமிழக தலைவர்கள்

~~~~~ ******** ~~~~~~

நமக்கு வந்த நோயை குணப்படுத்துவார்கள்
அந்தகால டாக்டர்கள்
ஆனால்
நமக்கு இல்லாத நோயை இருப்பதாக சொல்லி
குணப்படுத்துவார்கள் இந்த கால டாக்டர்கள்.

~~~~~ ******** ~~~~~~

திருட்டு செய்யும் கயவர்களை பிடித்து
தண்டிபார்கள் அந்த கால காவலர்கள்
ஆனால்
திருட்டு செய்யும் கயவர்களை பிடித்து
பணம் பறிப்பார்கள் இந்த கால காவலர்கள்

~~~~~ ******** ~~~~~~


அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்
05 Aug 2012

5 comments:

  1. எழுதாத சட்டம்தான் எப்போதும் நடை முறையில் இருக்கும்.

    ReplyDelete
  2. Eluthaatha sattathai ingu miha alahaaha eluthi irukiringal.

    ReplyDelete
  3. இதோ நீங்கள் எழுதிவிட்டீர்களே பின்பு எப்படி எழுதாத சட்டம் ஆகும்.

    ReplyDelete
  4. இவர்கள் உண்மைகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.