Sunday, November 21, 2021

 

@avargal unmaigal

சூர்யா அன்புமணி சந்தித்தால் ?

அன்புமணி : வாங்க சூர்யா வாங்க வெறும் கையோடு வந்திருக்கீங்க ஒரு வேளை ஐந்து கோடியை நீங்கள் தூக்க முடியாததால் உதவிக்கு ஆள் வைத்துத் தூக்கி வரீங்களா

சூர்யா " இல்லை சார் நான் எடுத்த ஜெய்பீம் படம் உங்களையும் உங்கள் சமுகத்தையும்  ஒரொம்பவே பாதித்து இருக்கிறது என்று உங்களிடம் மன்னிப்பு கேட்க வந்து இருக்கிறதேன்.


அன்புமணி : உங்கள் மன்னிப்பு யாருக்கு வேண்டும்.

சூர்யா : அப்ப படத்தில் எந்தெந்த காட்சிகள் உங்களை பாதித்து இருக்கிறது என்று சொன்னால் அனைத்தையும் நான் நீக்கிவிடுகின்றேன்

அன்புமணி அதெல்லாம் யாருக்கு வேண்டும்

சூர்யா : அப்ப அந்தே படம் முழுவதையும், அது பற்றி இணையதளங்கள் அனைத்திலும் வந்த செய்திகளை எல்லாம் அழித்துவிடுகின்றேன் அந்தப்படமே வந்தது மாதிரி இல்லாமல் ஆக்கிவிடுகின்றேன்



அன்புமணி : சூர்யா அதெல்லாம் யாருக்கு வேண்டும் சும்மா வம்பா எங்கிட்ட பேசிக்கிட்டு இருக்காதே. எனக்கு ஐந்து கோடி மட்டும் கொடுத்துவிடு அது போதும் வேற ஒன்றும் நீ செய்ய வேண்டாம் சொல்ல வேண்டாம் இதற்கு மேலே ஏதும் சொன்னால் நான் அழுதுடுவேனாக்கும்
@avargal unmaigal

 

@avargal unmaigal



அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.