Monday, November 8, 2021

#avargal unmaigal

 போதுமடா சாமி ஆளை விடு.

சில காயங்கள்  மருந்தால்  சரியாகும்.
சில
காயங்கள்   மறந்தால்       சரியாகும்.

ஆடம்பரம்  அழிவைத்தரும்.     

ஆரோக்கியம்  நல்வாழ்க்கை தரும்.

கார்இருந்தால்  ஆடம்பரமாக   வாழலாம்.
மீதி வண்டி இருந்தால்   ஆரோக்கியமாக  வாழலாம்.

மனிதனுக்கு   பிரச்சனை    அதனால்,
கடவுளுக்கு     அர்ச்சனை      .

வறுமை வந்தால் வாடக்கூடாது.

வசதி    வந்தால் ஆடக்கூடாது.

வீரன்  சாவதே இல்லை.
கோழை       வாழ்வதேஇல்லை.

தவறானபாதையில்   வேகமாக  செல்வதைவிட.
சரியான பாதையில்    மெதுவாக    செல்லுங்கள்.

நீ   ரசிக்க   என்னிடம்அழகுஇல்லை.ஆனால்,
நீ   வசிக்க   என் இதயத்தில்இடம்இருக்கிறது.

மனிதனுக்கு ABCD      தெரியும்   ஆனா  Q      போகத்   தெரியாது   .
எறும்புகளுக்கு ABCD   தெரியாது   ஆனா     Q      போகத்   தெரியும்   .

ஆயிரம்பேரைக்கூட   எதிர்த்து       நில்.
ஒருவரையும்       எதிர்பார்த்து     நிற்காதே.

தேவைக்காக கடன்      வாங்கு      .
கிடைக்கிறதே என்பதற்காக  வாங்காதே      .

உண்மை எப்போதும்    சுருக்கமாக    பேசப்படுகிறது.
பொய் எப்போதும்   விரிவாக    பேசப்படுகிறது.

     

கருப்பு   மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.
சிவப்பு   மனிதனின்நிழலும் கருப்புதான்.

வண்ணங்களில்   இல்லை வாழ்க்கை.
மனித   எண்ணங்களில்  உள்ளதுவாழ்க்கை

நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறது ஆசை   ஆனால்,
அதுக்குபிறகும் சந்தோஷமா இருக்கனும்னு நெனைச்சா அது    பேராசை  

    .
கடினமாய்    உழைத்தவர்கள்முன்னேறவில்லை.
கவனமாய்    உழைத்தவர்கள்முன்னேறியுள்ளனர்.

வியர்வைதுளிகள்   உப்பாக   இருக்கலாம். ஆனால்,
அவைவாழ்க்கையை   இனிப்பாக  மாற்றும்.

கடனாக  இருந்தாலும்சரி,
அன்பாக  இருந்தாலும் சரி,  

திருப்பிசெலுத்தினால்தான் மதிப்பு.

     

செலவு  போக மீதியை சேமிக்காதே.

 சேமிப்பு  போக மீதியை செலவுசெய்.

உன்னை நீ செதுக்கிகொண்டே இரு    

வெற்றி    பெற்றால் சிலை,       

தோல்வி       அடைந்தால்சிற்பி.

உறவினர்களில் யார் முக்கியம் என்பதை    உயிரற்ற      பணமே முடிவு செய்கிறது.

கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு    முட்டாள்   என்றுதெரியும்.
கடன்கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு
புத்திசாலி       என்பது புரியும்.

பணம் கொடுத்துப்பார் உறவுகள்உன்னை    போற்றும்      .
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார்மண்ணை வாரி    தூற்றும்      .

பேசிப் பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம்      பொய்      .
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்துவிடுகிறோம் என்பதே    உண்மை      .

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன்     புத்திசாலி      .
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன்      திறமைசாலி      .

கவலைகள்கற்பனையானவை மீதி    தற்காலிகமானவை.

குறைகளை     தன்னிடம்    தேடுபவன்தெளிவடைகிறான்.
குறைகளை    பிறரிடம்       தேடுபவன்களங்கப்படுகிறான்.

அறுந்துபோனசெருப்புக்குவீட்டில் ஒரு இடம்      உண்டு      .
இறந்து போன மனிதஉடலுக்கு வீட்டில் ஒருஇடமும்      இல்லை      .

வாழைபழம்சாப்பிட்டால்    சத்து      .வாழைப்பழ தோலியில்வழுக்கிவிழுந்தால்     டெத்து      .

விழுதல்என்பது       வேதனை      .
விழுந்த இடத்தில்மீண்டும் எழுதல்என்பது       ~சாதன

 

நெட்டில் எடுத்தது எழுதியது யாரோ
பகிர்வது மட்டும் நான்


அன்புடன்
மதுரைத்தமிழன்

 


8 comments:

  1. ரசனையான வாக்கியங்கள்...

    ReplyDelete
  2. தத்துவ மழை. எல்லாமே ரசனை. உண்மை.

    ReplyDelete
  3. அனைத்தும் செம. ரசித்தேன்

    கீதா

    ReplyDelete
  4. என்னடா 2 தடவை நன்றி நன்றி சொல்லுறானே என்று யோசிக்கிறீங்களா? ஒன்று இந்த பதிவை ஒரிஜனலாக எழுதிய அந்த முகம் தெரியாதவருக்கு அடுத்தது அதை படித்து ரசித்து கருத்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் ஹீஹீ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.